Powered By Blogger

Tuesday, January 14, 2014

சென்னையில் ஒரு சனிக்கிழமை !

நண்பர்களே,

வணக்கம். மதராசபட்டினம் மறக்க இயலா அனுபவங்களைத் தரும் தனது அளப்பரிய ஆற்றலை மீண்டுமொருமுறை நிலைநாட்டியுள்ளது ! பதிப்புலகத் துறைக்கு ஒரு பாலைவனச் சோலையாகி விட்ட புத்தகத் திருவிழா இம்முறையும் தன பிரம்மாண்டத்தை சிறுகச் சிறுகக் கட்டவிழ்த்து விட - சென்ற வாரத்தின் இறுதி நாட்கள் சகலமும் நமக்கு சுவையான தருணங்களாகிப் போயின ! 

ஸ்டாலுக்குள் வெள்ளி மாலை நானும் ஜூனியரும் நுழைந்தே போதே "போஸ்டர் தப்பா இருக்கு சார் !" என்று முகம் நிறைந்த சிரிப்போடு என் கரங்களை வாஞ்சையோடு பற்றிக் கொண்ட வாலிபரின் வயது 78 ! 'ஏழு முதல் எழுபத்தி ஏழு வரை' என்ற நமது பேனரை சுட்டிக் காட்டிய அந்த நண்பர் - ராயல் என்பீல்டு நிறுவனத்தின் மிக சீனியரான பைக் மெகானிக் ! ஆனால் தன வீட்டு விசேஷத்தில் பங்கேற்கும் உத்வேகத்தோடு பில் போடுவதிலும், புத்தகங்களை பேக் செய்து கொடுப்பதிலும் நம்மாட்களுக்கு உதவிக் கொண்டிருந்தார் இந்தக் காமிக்ஸ் காதலர் ! அடுத்தாண்டில் நாம் அச்சிடும் பேனரை '8 to  88' வரை என அவரின் பொருட்டு மாற்றிடுவதாய் வாக்குத் தந்தேன் !

வழக்கம் போல் நம் நண்பர்களில் பலர் உள்ளூர்-வெளியூர் பாகுபாடின்றி நம் ஸ்டாலுக்கு வருகை புரிந்து தங்களது சந்தோஷங்களைப் பகிர்ந்து கொண்டது மனதுக்கு ரொம்பவே இதமாய் இருந்தது ! நாகர்கோவிலில் இருந்து வெள்ளி காலையே வந்து, புத்தகங்களை அடுக்கிக் கொடுப்பது முதல் ஸ்டாலை நிர்மாணிப்பது வரை 2 முழு நாட்களும் நமக்காகச் செலவிட்டவர் நிச்சயமாய் எனக்குக் கிறுக்கனாகத் தெரியவுமில்லை ; அவரது பேச்சிலோ பாணியிலோ கிறுக்கல்களும் புலனாகவில்லை ! இரவு ரயிலைப் பிடிக்கும் டிக்கெட்டைக் கையில் வைத்துக் கொண்டும், சக நண்பர்களின் கேள்விகளைச் சுமந்து வந்து விடாப்பிடியாய் கணைகளைத் தொடுத்த திருப்பூராரோ ப்ளுபெர்ரியின் பிடிவாதத்தை இரவல் வாங்கி வந்திருந்தார் என்பது கண்கூடு ! சந்தித்துக் கொள்ளும் ஒவ்வொரு நண்பரும் பரஸ்பரம் மொபைல் நம்பர்களைப் பரிமாறிக் கொண்டு சகஜ தோழர்களாய் உருமாறிக் கொண்டதை ஓரக்கண்ணால் பார்த்து ரசித்துக் கொண்டிருந்தேன். எப்போதுமான "இரும்புக்கை மாயாவி எங்கே ? ஸ்பைடர்   எங்கே ?" என்ற கேள்விகளை விட இந்தாண்டு நான் எதிர்கொண்ட வினவல்களின் பெரும்பகுதி - 
  • "இந்தாண்டும் NBS போல் ஒரு தடி புக்கோடு புத்தக விழாவைச் சந்தித்திருக்கலாமே ?"   
  • "லயன் ஆண்டுமலர் 30-ல் முழுசும் டெக்ஸ் கதைகள் தானே ?" 
  • "+6 இந்தாண்டும் உண்டா - கிடையாதா ?" 
  • Million Hits Special ?? 
  • "சிங்கத்தின் சிறுவயதில் ??"  

என்ற கேள்விகள் தான் ! வழக்கம் போல் நான் கல்லுளிமங்கனாக இருந்ததில் நண்பர்கள் கடுப்பாகியும் போய் இருக்கலாம் - ஆனால் "செய்து விட்டுச் சொல்கிறேனே - ப்ளீஸ் !" என்ற எனது மாமூல் டயலாக்கை (வேறு வழியின்றி) ஏற்றுக் கொண்டனர் ! நண்பர்களோடு பேசிக் கொண்டிருந்த போது நான் கேட்க நேரிட்ட மாமூலான டயலாக்கும் இல்லாதில்லை ! "நாள் தவறாது நம் வலைப்பதிவுக்கு விஜயம் செய்து விடுவோம் ; ஆனால் நாங்கள் அமைதியான பார்வையாளர்கள் மாத்திரமே ! ஒரு பின்னூட்டம் விடாமல் படித்து விடுவோம் !" என்று சொன்ன நண்பர்களின் எண்ணிக்கை நிச்சயம் கணிசம் !  

சென்றாண்டைப் போல நம்மிடம் பருமனில் ; விலையில் தாட்டியமான இதழ் ஏதும் இல்லாது போயினும், இம்முறை அதன் இடத்தில் ஜனவரியின் 4 புது இதழ்களும் 'பளிச்' என இடம் பிடித்திருந்தன ! "தினகரன்" குழுமத்திலிருந்து மதிப்பிற்குரிய திரு.K.N.சிவராமன் அவர்கள் நம் ஸ்டாலுக்கு வருகை தந்த போது புதிய இதழ்களை அவர் கையில் மகிழ்ச்சியோடு கொடுத்தேன் ! தோர்கல் இதழைப் புரட்டியவர் ஆர்ட் பேப்பரிலிருந்து எழும் அந்த மசியின் fresh மணத்தை வாஞ்சையோடு ஒரு முறை நுகர்ந்து விட்டு பக்கங்களைப் புரட்டிய போது இத்துறையில் அவருக்கிருக்கும் அனுபவம் அப்பட்டமாய்ப் புலனானது ! அவரது அடக்கமான வார்த்தைகளும், நேசமான பாராட்டுக்களும் நமது முயற்சிகளுக்கு பெரும் பெருமிதம் தந்தது நிஜம் ! ஞாயிறு தினகரனில் 5 முழு வண்ணப் பக்கங்களை ஒதுக்கி காமிக்ஸ் மீது ; நம் பதிப்பகத்தின் மீது ஒளிவட்டம் விழச் செய்த அவரது பெருந்தன்மைக்கும் , பேட்டியை சுவாரஸ்யமாய் வழங்கி இருந்த எழுத்தாளர் "அணில்" அவர்களுக்கும், எல்லாவற்றிற்கும் மேலாய் தினகரன் குழுமத்திற்கும் நன்றிகள் சொன்னேன் ! 16.50 லட்சம் சர்குலேஷன் கொண்டதொரு இதழில் இத்தனை விஸ்தீரணமானதொரு விளம்பரம் நமக்கு பரிவின் பெயரால் கிட்டியதை நம் நல்லதிர்ஷ்டம் என்பதைத் தாண்டி வேறு என்னவென்பது ?
நடுவில் இருப்பவர் திரு சிவராமன் அவர்கள்.. 
முதல் நாள் மாலை மெலிதான கூட்டம் மட்டுமே விழா முழுவதினிலும் இருந்தது சற்றே ஏமாற்றமாய் இருந்த போதிலும், நமது ஸ்டாலில் நான்கே மணி நேர விற்பனையின் எண்ணிக்கை ரூ.39,000 என்பதை அறிந்த போது - "ஆவென " வாயைப் பிளந்தேன் ! இம்முறை நான் கவனித்த மிக அழகான   விஷயங்கள் இரண்டு ! முதலாவதும், மிகப் பிரதானமானதும் - பெண்கள் நமது காமிக்ஸ் மீது காட்டிய அசாத்திய ஆர்வத்தை பார்த்திட முடிந்ததே ! நமது ஸ்டாலின் பெயர் பலகையைப் பார்த்த மாத்திரத்தில் 'விறு விறு'வென்று உள்ளே நுழைந்து - இருந்த இதழ்களின் சகலத்தையும் வாங்கிய வாசகியர் முதல் இரு நாட்களின் விற்பனையில் ஒரு 40 சதவிகிதமாவது பங்களித்திருப்பர் ! நான் யாரென்று கேட்டுக் கொள்ளாமலே கொஞ்ச நேரம் என்னிடம் பேசி விட்டு, இதழ்களை வாங்கி விட்டு, அப்புறமாய் "You are ..?" என்று கேட்டுத் தெரிந்து கொண்டு  "Keep up the good work ! " என்று சொல்லிச் சென்ற சகோதரி - காமிக்ஸ் ஆண்களின் சாம்ராஜ்யம் மாத்திரமே அல்ல என்று சொல்லாமல் சொல்லிச் சென்றது போல் பட்டது ! நிறைய குடும்பங்கள் நம் ஸ்டாலுக்குள்  அடி வைத்து விட்டு - ஆளுக்கு ஒரு திசையில் புத்தகங்களைப் புரட்டி ; விவாதித்து ; வாங்கிச் சென்றது மறக்க இயலா கணங்கள் ! நான் ரசித்த விஷயம் # 2 - காமிக்ஸ் சிநேகமற்ற புதியவர்கள் கூட, நமது இதழ்களை லேசாகப் புரட்டத் துவங்கி விட்டு, வண்ணங்களை, சித்திரங்களைப் பார்த்து லயித்துப் போய் நேரம் செலவிட்டது தான் ! வழக்கமாய் ஏதோ ஒரு ஆர்வத்தில் உள்ளே நுழைபவர்கள், மேலோட்டமாய் ஒன்றிரண்டு புத்தகங்களை அசுவாரஸ்யமாய்ப் புரட்டி விட்டு, இடத்தை காலி செய்திடுவது தான் வாடிக்கை ! ஆனால் இம்முறையோ லயிப்போடு இதழ்களைப் புரட்டியதொடு - ஒருவருக்கொருவர் காமிக்ஸ் பற்றிப் பேசிக் கொள்வதை கண்குளிரக் காண முடிந்தது !  

"இந்த மாமா யாரு ? ...ஆங் ..இவர் கார்சன்...இது..? குட்..இவர் லக்கி லூக் ! " ஜாலி ஜம்பர் எங்கேப்பா ?" என்ற வண்ணம் ஒரு ஒன்றரை + வயதிலான குட்டி மாடஸ்டியை அழைத்து வந்ததொரு இளம் குடும்பம் ! அந்த மழலையின் ஆதர்ஷ நாயகன் லக்கி லூக் என்றும், போஸ்டரில் இருந்த TEX + CARSON கூட்டணி கூட அந்த வாண்டுக்குப் பரிச்சயம் என அவர்கள் சொல்லிய போது நிஜமாக உற்சாகமாய் இருந்தது ! இந்த வயதிலேயே காமிக்ஸ் எனும் சுவாசத்தை நுகரத் தொடங்கி விட்ட அந்தக் குட்டி வாசகியை எண்ணி மகிழ்வதா ? - அல்லது இச்சிறு வயதிலேயே காமிக்ஸையும் புகட்ட வேண்டுமென்று ஆர்வம் காட்டிய பெற்றோரைப் பாராட்டுவதா ? பதில் தெரியாது மண்டையைச் சொறிந்தேன் ! சொல்லி வைத்தார் போல ஸ்டாலுக்குள் நுழைந்த அத்தனை வாண்டுகளும் நேராய்ப் போய் புரட்டியது லக்கி லூக்கின் இதழ்களை மாத்திரமே ! சுட்டி டி.வீயின் சீரியல் ஏற்படுத்திய தாக்கமா - அல்லது ஆங்கில லக்கி காமிக்ஸ்கள் உண்டாக்கிய பரிச்சயமா தெரியவில்லை ; அத்தனை சுட்டிகளுக்கும் தஞ்சம் தந்தது லக்கி தான் ! கார்ட்டூன் நாயகர்களுள் அசைக்க இயலா # 1 அண்ணன் LUCKY LUKE தான் என்பது சுட்டிகளின் சார்பான தீர்ப்பு ! 

அதே போல not so குட்டி வாசகர்களின் கண்களும், கரங்களும் சென்றது நேராய் நம் இரவுக் கழுகாரின் திசையில் தான் ! கறுப்பு-வெள்ளையில் இருப்பினும் கூட டெக்ஸ் இதழ்கள் செம விறுவிறுப்பாய் விற்பனை ஆகின ! In fact முதலில் தீர்ந்து போனது டெக்ஸ் தீபாவளி மலர் தான் ! தொடர்ந்த நாட்களில் டெக்சின் இதர இதழ்களும் விற்பனையில் மின்னல் வேகம் காட்டின ! இங்கும் கூட ஒரு out of court தீர்ப்பு கிட்டி இருப்பது போலாய் எனக்கொரு பட்சி சொல்கிறது !! உங்களுக்கும் ஏதேனும் கேட்கிறதா folks ? நிறைய பிரபல வலைப்பதிவாள நண்பர்களும் நமது ஸ்டாலுக்கு ஆர்வமாய் வந்திருந்து நேரம் செலவிட்டது நமக்குப் பெருமை சேர்ப்பதாய் இருந்தது ! அனைவருமே ஒற்றை வரியாய் - "Carry on the good work !" என்று முழு மனதாய் வாழ்த்திச் சென்றனர் ! "நாளைக்கு என் மனைவி சகிதம் வருகிறேன் சார் - உங்களிடம் சொல்ல அவர் புகார் ஒன்று வைத்திருக்கிறார் !" என்று நண்பர் ஒருவர் புதிர் போட, மறு நாள் மாலை சொன்னபடியே ஆஜரானார் துணைவியாருடன் ! "நீங்கள் புத்தகமும், வலைப்பதிவும் போட்டாலும் போட்டீர்கள் - அவர் வீட்டிலிருக்கும் நேரம் முழுவதும் காமிக்ஸோடு அல்லது கணினியின் முன்னே தான் செலவிடுகிறார் சார் !" என்று சொன்ன சகோதரியின் முகத்திலோ புன்னகை ! "சிறுகச் சிறுக நானும் இந்த ரசனைக்குப் பரிச்சயம் ஆகிக் கொள்ள உதவிடும் விதமாய் குட்டிக் கதைகளாய் கொஞ்சம் போடுங்களேன் ! "என்று அவரே கோரிக்கையும் வைத்த போது அருகில் நின்ற கணவரின் முகத்தில் பெருமிதத் தாண்டவம் ! ஒரு பக்கத்திற்கு எட்டுப் பத்துக் கட்டங்கள் ; அவற்றினுள் எண்ணற்ற பலூன்கள் ; வசனங்கள் ; சித்திரங்கள் - இவை நம்மிடையே ஏற்படுத்தும் இந்தத் தாக்கத்தை எண்ணி வியக்காதிருக்க   இயலவில்லை ! 

சனிக்கிழமை புத்தக விழா காலை 11 மணிக்கே துவங்கி விட்ட போதிலும், சன் செய்திகள் தொலைகாட்சியினில் - 2014 புத்தக விழாவின் செய்திச் சேகரிப்பு வரிசையில் காமிக்ஸ் வெளியிடும் நம்மைப் பற்றி ; பொதுவாக காமிக்ஸ் பற்றிப் பேசிட அவர்களது ஸ்டுடியோவிற்கு நான் வர இயலுமா ? எனக் கோரி இருந்தனர் ! 'புத்தக விழாவிலேயே ; நமது ஸ்டாலிலேயே நேர்முகக் காணலை வைத்துக் கொண்டால் சுலபமாகி விடுமே !' என்று நான் அபிப்ராயப்பட்டேன் ! ஏற்கனவே கடந்த 2 ஆண்டுகளாய் இது போன்ற சின்ன பேட்டிகளுக்கும்,  நண்பர்களின் முழு நீள கேள்விகள் session க்கு பதில் சொல்லியும் இருந்ததால் அதே போலச் சமாளித்து விடலாமே என்று பார்த்தேன் ! ஆனால் - 'ஸ்டுடியோவில் எடுத்தால் இன்னும் நன்றாக இருக்கும்' என சன் செய்திகளின் எடிடர் கருதியதால் தலையாட்டி வைத்திருந்தேன். சனி பகலில் சன் குழும அலுவலகத்தினுள் நானும், ஜூனியரும் நுழைந்த போதே "ஆவென" விரிந்த வாய் மூட நேரம் நிறைய எடுத்தது ! 10 மாடிகள் ; பிரமாண்டமான ஒவ்வொரு தளத்திலும் ஒவ்வொரு செயல்பாடு என தொலைக்காட்சித்துறையின் உச்ச திறமைசாலிகள் அங்கு பம்பரமாய் சுழலுவதை முதன்முறையாப் பார்க்க வாய்ப்புக் கிட்டியது ! நேசமாய் வரவேற்ற திரு நெல்சன் அவர்கள் முதல் மாடியில் இருந்த ஸ்டுடியோவினை காட்டி விட்டு, இலக்கியம் + சினிமா தொடர்பாய் ஒரு நேர்காணலை நடத்தச் சென்றார். 'கண்ணாடிக்குப் பின்னே இருந்த production அறையில் இருந்து பாருங்களேன் !' என என்னையும், விக்ரமையும் அமரச் செய்தார் ! 3 காமெராக்கள் ; எண்ணற்ற தொழில் நுட்பச் சாதனங்கள் ; அவற்றை லாவகமாய்க் கையாளும் கலைஞர்கள் என அந்தச் சின்ன அறையே பரபரப்பாய் இருக்க, கண்ணாடிக்கு மறு பக்கமோ பேட்டி துவங்கியது ! கேள்விகளை சரமாரியாய் திரு நெல்சன் பாய்ச்ச ; சற்றும் சளைக்காது, சரளமாய் பதில்கள் வந்து விழுந்தன ! அது வரை ஒரு பாவ்லாவில் வண்டியை ஒட்டி வந்திருந்த எனக்கு உள்ளுக்குள் உதறத் தொடங்கியது ! காமிக்ஸ் என்பது நமக்கு நேசமானதொரு விஷயம் தான் ; அது தொடர்பான கேள்விகளுக்கு homework பண்ணிக் கொண்டு வராமலே பதிலளிக்க முடியும் தான் என்ற நம்பிக்கை உள்ளுக்குள்ளே பூரணமாய் இருந்த போதிலும், முதன் முறையாய் இது போன்றதொரு நிகழ்ச்சியில் பங்கேற்கும் நேரம் சொதப்பித் தொலைக்காமல் இருந்தால் போதும்டா சாமி!! என்ற சிந்தனையே உள்ளுக்குள் ஓடியது ! நீண்ட காத்திருப்புக்குப் பின் மதியம் மூன்று மணிக்கு என்னை கிரீன் ரூமுக்குள் அழைத்தனர் - ஷூட்டிங் துவங்கலாமென்று சொல்லி ! திரு. நெல்சன் தான் பேட்டி எடுக்க வருவார் என்ற எதிர்பார்ப்பில் நான் உள்ளே இருந்த சொகுசுச் சேரில் சென்று அமர - இளம் பெண் நிருபரான Ms.அபர்ணா உள்ளே வந்தார் சின்னதொரு புன்சிரிப்போடு ! 

'ஆஹா....உளறாமல் இருக்கணுமே சாமி !" என்று நொடிக்கொரு முறை உலர்ந்து போய்க் கொண்டிருந்த நாக்கோடு மனசுக்குள் இன்னும் தீவிரமாய்  பிரார்த்தித்துக் கொண்டேன் ! அங்கிருந்த Aquafina -வில் பாதியை மடக்-மடக்கெனக் குடித்து விட்டு அபர்ணாவிடம் லேசாய் பேசிப் பார்த்தேன் ! அவர் இது நாள் வரை களப்பணியாற்றி வந்தவர் என்பதையும், அவரது முதல் ஷோ இது தான் என்றும் தெரிந்து கொண்டேன் ! 'சரி..நம் பிரார்த்தனைகளை சாமி கேட்காமல் போனாலும், முதல் ஷோ நன்றாக அமைய வேண்டுமென பிரார்த்திக்கும் அந்த யுவதியின் பெயரைச் சொல்லியாச்சும் நாமும் கரை சேர்ந்து  விடலாம் டோய் !" என்று மனசுக்குள் சிந்தனை ஓடியது. சட்டையில் மைக்கை மாட்டி விட்டு, காமெராக்களை சரியாக நிலைப்படுத்தி விட்டு கலைஞர்கள் அகன்று விட  - அந்த அறைக்குள் நாங்கள் இருவர் மாத்திரமே இருந்தோம். கேள்விகள் ஒன்றன் பின் ஒன்றாய் வர, நான் பதில் சொல்லத் துவங்கினேன். இது நாள் வரை நம் வாசகர்கள் கேட்கும் கதைகள் ; வெளியீடுகள் தொடர்பான கேள்விகளாய் இல்லாது, பொதுவான கேள்விகளாய் அவை இருந்ததால் 'பர பர' வென்று பதிலுக்குள் பாய்ந்திடாமல் சற்றே நிதானமாய் பேசிட முயற்சி செய்தேன். "ஞீ" என்று எந்த நிமிடம் குரலில் அபஸ்வரம் குடி கொள்ளுமோ என்ற பயம் உள்ளுக்குள்ளே இருந்தாலும், சற்றே குறைவான வேகத்தில் பேசியது தொண்டையையும் காப்பாற்றியது ; கொஞ்சமாய் யோசித்து பதில்களை  சொல்லவும் இடம் தந்தது ! கிட்டத்தட்ட 35 நிமிடங்களின் முடிவில் ஷூட்டிங் நிறைவுற்ற போது  - "நான் இப்போ எங்கே இருக்கேன் ?" என்று கேள்வி கேட்காத குறை தான் ! என்ன பேசினோம் இத்தனை நேரமாய் என்று துளியும் மண்டையில் நிற்கவில்லை ! கண்ணாடி அறைக்குள் அமர்ந்து பார்த்தும் கேட்டும் கொண்டிருந்த ஜூனியரிடம் "தேறுமா தம்பு ? " என்று கேட்ட போது - நன்றாகவே இருந்ததாய் சொன்னான் ! அபர்ணாவுக்கும், நெல்சன் அவர்களுக்கும் நன்றி சொல்லி விட்டு புறப்பட்டு நேராய் புத்தக விழாவிற்குத் திரும்பிய போது "சொதப்பவில்லை !" என்பது மட்டும் மண்டைக்குள் நின்றது. 

"சரி...எப்படியும் எடிட்டிங்கில் கத்திரி போட்டு விட்டு ஒரு நாலைந்து நிமிடங்கள் தானே போடுவார்கள் !" என்ற சிந்தனை ஆறுதலைத் தர - புத்தக விழாவின் மும்முரம் பற்றிக் கொண்டது ! சனிக்கிழமை திகுடு முகுடான கூட்டம் - விழா முழுவதினிலும் ! நம் ஸ்டால் முதல் நுழைவு வாயிலின் வரிசையிலேயே அதிர்ஷ்டவசமாய் அமைந்து இருந்ததால் - ஏராளமான குடும்பங்கள் வருகை தந்தன ! நண்பர்களும், ஆர்வமாய் குழுமி இருக்க கச்சேரி களை கட்டியது ! அப்போது குமுதம் இதழின் ஆசிரியர் அன்போடு நம் ஸ்டாலுக்கு வருகை புரிந்ததோடு மட்டுமல்லாது, நம் இதழ்களின் ஒரு முழு செட்டையும் வாங்கிச் சென்றார் ! 'பணம் வேண்டாமே சார்...!' என்று நான் எத்தனை வற்புறுத்தியும், காதில் போட்டுக் கொள்ளாமல் - "இவை அனைத்தும் நான் படிக்கும் புத்தகங்கள் ; நிச்சயமாய் பணம் கொடுத்தே தீருவேன் !" என்று சாதித்து விட்டார் ! "உங்களின் சின்ன வயது அனுபவங்களை கட்டுரையாய் எழுதுவதை நான் ரசித்துப் படிப்பேன் !" என்று அவர் சொன்ன போது எனக்கு வார்த்தைகள் வரவில்லை ! தமிழ் இதழியலின் ஒரு ஜாம்பவானிடமிருந்து கிட்டிய அந்தப் பாராட்டு என் நாளை முழுமையாக்கியது ! கண்ணதாசன் பதிப்பகத்தின் திரு. காந்தி கண்ணதாசன் அவர்களும் நம் ஸ்டாலுக்கு வந்த போது வாய் நிறையப் பாராட்டுக்களோடு என் தோளில் தட்டிக் கொடுத்தார் ! அவருடன் வந்திருந்த நடிகர் திலகத்தின் மூத்த   புதல்வர் திரு ராம்குமார் சிவாஜி அவர்களும் அன்பாகப் பேசிக் கொண்டிருந்து விட்டு, நமது காமிக்ஸ் இதழ்களைப் புரட்டினார் ! Classics Illustrated கதைகளை தமிழில் போடுங்களேன் என்று அவர் அபிப்ராயம் சொன்ன போது - 'நிச்சயம் யோசிக்கிறேன் சார் !' என்று சொன்னேன் ! 

நண்பர்கள் கால் கடுக்க நின்று கொண்டே இருந்தனர் நம் ஸ்டாலில் விற்பனைக்கும் அவ்வப்போது ஒத்தாசை செய்து கொண்டே ! போராட்டக் குழுவின் பிரதிநிதிகளை அவ்வப்போது நண்டு பிரையின் வாசம் காட்டியே நான் சமாளிக்க - இன்னுமொரு இளம் குடும்பம் வந்தது ! இல்லத்தரசியும், அவரது தங்கையும் தீவிர காமிக்ஸ் ரசிகைகளாய் இருக்க, "மாடஸ்டி கதைகளைப் போடுங்களேன் !" என்ற கோரிக்கை வைத்தனர் ! "நிச்சயம் முயற்சிக்கிறேன் !" என்று சொல்லி விட்டு, அக்குடும்பம் லக்கி லூக்கின் முன் நின்று புகைப்படம் எடுத்துக் கொள்வதை ரசித்த போது - என்றோ - எப்போதோ இந்தத் துறையில் ஒரு துவக்கம் தந்த என் தந்தையின் தீட்சண்யம் என் மனதில் நிழலாடியது ! காமிக்ஸ் எனும் உலகின் பரிமாணம் எத்தகையது என்பதை உணர்ந்திட இணையமோ ; உலகளாவிய காமிக்ஸ் சேகரிப்புகளோ இல்லாத அந்தப் புராதன நாட்களிலேயே ஒரு கோடு போட்டு வைத்த அவரது ஆற்றலை எண்ணி வியக்காதிருக்க முடியவில்லை ! நண்பர்களிடம் விடை பெற்று விட்டுப் புறப்பட்ட போது பாக்கெட்டில் ரூ.70,000 வசூல் பணம் இருந்தது ! தொடரும் நாட்களில், விடுமுறைகள் நிறையவே இருப்பதால் - இந்தாண்டு வளமான விற்பனை எண்ணங்களை நமக்குக் காட்டிடும் என்ற நம்பிக்கையோடு நடையைக் கட்டினேன் ! எத்தனையோ பணிகளுக்கு மத்தியினில் நமக்காக நேரம் செலவிட்டதற்கும், துளியும் குறையா அன்பைப் பொழிவதற்கும், ஏற்ற தாழ்வுகள் எது வந்தாலும், குறைவிலா காமிக்ஸ் காதலோடும் வாழ்ந்து வரும் இந்தச் சிறு வாசகக் குடும்பத்திடம் நாங்கள் பட்டிருக்கும் கடன் மலையளவிலானது ! "ஈரோட்டில் சந்திப்போம் ! " என்று ஆத்மார்த்த அன்போடு சொல்லிச் சென்றுள்ள அத்தனை அன்புள்ளங்களுக்கும் ஒரு பரிபூரண விருந்து படைக்கும் பொறுப்பு எங்களுக்குள்ளது ! தவற மாட்டோம் ! Take care all ! அனைவருக்கும் சந்தோஷப் பொங்கல் வாழ்த்துக்கள் ! 

P.S : ஞாயிறு காலை சன் டி-வியிலிருந்து நெல்சன் அவர்கள் போன் செய்து மதியம் 1 மணிக்கும், மாலை 5-க்கும் ; இரவு 10-30க்கும் பேட்டி ஒளிபரப்பாகிறது என்று சொன்ன போது பூம் பூம் மாடைப் போல் தலையை ஆட்டி விட்டு சத்தமின்றி இருந்து விட்டதும், . நண்பர் விஸ்வா SMS தட்டி விட, அந்தப் பட்டியலில் எனது தந்தையும் இருந்திட, குடும்பத்தில் அனைவரும் ஆங்காங்கே டி.வி. முன்னே ஆஜர் ஆகிட்டதும்  ,  எனக்கோ சென்னையில் சன் செய்திகள் தெரியாது போக, பின்னே கணினியில் லைவ் ஸ்ட்ரீமிங்கில் பார்த்ததும் எப்போதோ நிகழ்ந்தவை போல் மனதில் நிழலாடுகின்றன ! 

288 comments:

  1. விற்பனை பல லட்சம் பெற வாழ்த்துக்கள் , எனக்கு 80 வயது ஆனாலும் காமிக்ஸ் படித்து கொண்டுதான் இருப்பேன். தமிழ் காமிக்ஸ்க்கு அழிவு இல்லாமல் பார்த்து கொள்ளும் விஜயன் அவர்களுக்கு பல கோடி நன்றி

    ReplyDelete
    Replies
    1. lion ganesh : சிறு திருத்தம் நண்பரே...! காமிக்ஸ் எனும் சுவை காலத்தை வென்றது ! அதனைக் காத்திட இந்த ஆந்தை விழியான் அவசியம் என்பது நிஜமாகாது !

      தவிர, தமிழில் இந்த ரசனைக்கு உயிரூட்டி வைத்திருப்பது நண்பர்களாகிய நீங்களே ! So எல்லாப் புகழும் நம் காமிக்ஸ் வாசகக் குடும்பத்திற்கே !

      Delete
    2. இருந்தாலும் காமிக்ஸ் மேல் காதல் கொண்ட யாரும் இன்னும் வரலையே சார் ! அன்றிலிருந்து உத்வேகமாய் வெளியிடுவதில் தங்களை மிஞ்ச யாருமில்லை !

      Delete
    3. // காமிக்ஸ் எனும் சுவை காலத்தை வென்றது ! அதனைக் காத்திட இந்த ஆந்தை விழியான் அவசியம் என்பது நிஜமாகாது //

      உங்களை போன்ற காமிக்ஸ் காதலர் ஒருவர் மிக அவசியம் என்பது தான் நிஜம்- என்பது எனது தாழ்மையான கருத்து. (தவறெனின் மன்னிக்கவும்,விஜயன் சார்!)

      // தவிர, தமிழில் இந்த ரசனைக்கு உயிரூட்டி வைத்திருப்பது நண்பர்களாகிய நீங்களே ! So எல்லாப் புகழும் நம் காமிக்ஸ் வாசகக் குடும்பத்திற்கே !//

      எல்லாப் புகழும் நமது காமிக்ஸ் குடும்பத்திற்கே!

      நீங்கள்,உங்கள் காமிக்ஸ் காதல் + நமது அருமையான, அர்ப்பணிப்புள்ள பணிக்குழுவினர் மற்றும் காமிக்ஸ் நண்பர்களால் ஆன நமது காமிக்ஸ் குடும்பத்திற்கே!

      Delete
  2. எடிட்டர் சார்,

    வரிக்கு வரி தங்களின் இந்தப் பதிவு நெகிழ்ச்சியையும் மகிழ்ச்சியையும் ஒரு சேர தருகிறது.
    தங்களின் சன் நியூஸ் பேட்டியை நண்பர் பரணி கொடுத்த லிங்கில் பார்த்தேன். மிகவும் சரளமாகவும் அமைதியாகவும் அழகாகவும் இருந்தது.
    நமது எட்டு திக்கும் பரவுவது கண்டு பெருமையாக இருக்கிறது.

    ReplyDelete
    Replies
    1. Radja from France : நம் காமிக்ஸ்களுக்குக் கிட்டும் ஒரு அங்கீகாரத்தை ஒவ்வொருவரும் தம் சொந்த வெற்றியாய் கொண்டாடுவதே இங்கு நெகிழ்ச்சி தரும் விஷயம் ! Thanks indeed !

      Delete
  3. +6 வர இருப்பது குறித்து சந்தோசம் சார் ! தங்களுக்கும் , சக பணியாள தோழர்களுக்கும்,நமது நண்பர்கள் அனைவருக்கும் இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள் !
    Hope you always soar high, Just like kites that dot the sky Happy பொங்கல் !

    ReplyDelete
    Replies
    1. கோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் : //+6 வர இருப்பது குறித்து சந்தோசம் சார்//

      வரக் காத்திருப்பது +2 தானே இரும்புக்கையாரே ? மார்ச் மாதத்தினில் ?

      Delete
  4. Replies
    1. இங்கே voting results + டெக்ஸ் கதைகளின் விற்பனை வேகத்தை கணக்கில் கொண்டு 30வது ஆண்டு மலரை தல டெக்ஸ்கு dedicate செய்யுமாறு தாழ்மையுடன் வேண்டுகிறேன்

      Delete
    2. Sunnews editor பேட்டி onlineல் எங்கேயாவது உள்ளதா?

      Delete
    3. Electron Karthick : //இங்கே voting results + டெக்ஸ் கதைகளின் விற்பனை வேகத்தை கணக்கில் கொண்டு 30வது ஆண்டு மலரை தல டெக்ஸ்கு dedicate செய்யுமாறு வேண்டுகிறேன்//

      தொடரும் மாதத்து இதழிலும் இதே கேள்வியினை முன்வைத்து விட்டு - இணைய தளத்திற்கு அப்பால் நிற்கும் நண்பர்கள் என்ன அபிப்ராயம் கொண்டுள்ளனர் என்பதையும் பாப்போம் !

      Delete
  5. This comment has been removed by the author.

    ReplyDelete
  6. எடிட்டர்ஜீயின் பேட்டி யூ-ட்யூபில் வலையேற்றம் செய்யப்பட்டிருந்ததால் யாரேனும் லிங்க் கொடுங்களேன்.ப்ளீஸ்!

    ReplyDelete
    Replies
    1. நண்பர்கள் அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் !

      Delete
    2. லயன் காமிக்ஸ் எடிட்டர்,முத்து காமிக்ஸ் சீனியர் எடிட்டர்,சப் எடிட்டர்,ஜூனியர் எடிட்டர்,அண்ணாச்சி,மற்றும் அலுவலக ஊழியர்கள் அனைவருக்கும் இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள்!!!

      Delete
    3. சென்னை வாழ் நண்பர்களுக்கு ...

      நல்ல பிசாசாருக்கு அர்ஜெண்டாக 10 புத்தகங்கள் (காமிக்ஸ் அல்ல)தேவைப்படுகிறது.
      தயவு செய்து புத்தகங்களை வாங்கி அனுப்பவும்.

      புத்தகங்களின் லிஸ்ட் "நல்ல பிசாசில்" ஹிஹி!!!

      Delete
    4. யூ-ட்யூபில் வலையேற்றம் செய்யப்பட்டிருந்த லிங்க் http://www.youtube.com/watch?v=gAS23ko5Xlg&sns=fb

      Delete
  7. டியர் விஜயன் சார்,

    பொங்கல் திருநாள் நல் வாழ்த்துக்கள் !

    பொங்கல் பண்டிகை அன்று (இன்று), காலையில் எழுந்தவுடன் இனிக்க இனிக்க சர்க்கரைப் பொங்கல் சாப்பிட்ட திருப்தியை எனக்கு தருவதாக, தங்களின் இந்த பதிவு அமைந்திருக்கிறது. திகட்டாத இனிப்பை ருசிப்பது என்பது எப்பொழுதும் அமைவதில்லை. அருமையான பதிவு அதுவும் தை முதல் திருநாளில்..!

    ReplyDelete
  8. எடிட்டருக்கும், நண்பர்கள் அனைவருக்கும் ஈரோடு விஜயின் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்!!!

    ReplyDelete
  9. சென்னையிலிருந்து கிளம்பி சேலம் சென்று தங்கையை அழைத்துக்கொண்டு கடின பிராாயணத்திற்கு பின் நள்ளிரவில் வீடு சென்று தூங்கி எழும்பி, உடம்பு வலிக்குது என்றால், கிடைத்த பதில்.

    … **எங்களை விட்டுட்டு இரண்டு நாள் நண்டு வருவல் சாப்பிட்டால் எல்லா வலியும் வரும், **

    ஙே.............!

    ReplyDelete
    Replies
    1. //… **எங்களை விட்டுட்டு இரண்டு நாள் நண்டு வருவல் சாப்பிட்டால் எல்லா வலியும் வரும், ** //

      அவங்க சொல்லறதும் நியாயமாக தானே தெரியுது?

      Delete
    2. கிறுக்கல் கிறுக்கன் (ஷல்லூம் ஃபெர்னாண்டஸ் ) ; Siva Subramanian : //அவங்க சொல்லறதும் நியாயமாக தானே தெரியுது?//

      இதை நடுவர் சாலமன் பாப்பையா அவர்களின் குரலில் சொல்லிப் பாருங்களேன்..!

      Delete
    3. அவங்க சொல்றதும் நியாயம்தானேப்பா ! நண்டு வயித்துலே போய் ப்ராண்டுமுல்ல!

      Delete
  10. எடிட்டருக்கும், நண்பர்கள் அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்!!!

    ReplyDelete
    Replies
    1. // "உங்களின் சின்ன வயது அனுபவங்களை கட்டுரையாய் எழுதுவதை நான் ரசித்துப் படிப்பேன் !" என்று அவர் சொன்ன போது எனக்கு வார்த்தைகள் வரவில்லை ! தமிழ் இதழியலின் ஒரு ஜாம்பவானிடமிருந்து கிட்டிய அந்தப் பாராட்டு என் நாளை முழுமையாக்கியது //

      அன்புள்ள விஜயன் அவர்களுக்கு, சிங்கத்தின் சிறுவயதில் - பகுதிக்கு இருக்கும் வாசகர்கள் ஆதரவு அதிகம் என்பதால் - தயவு செய்து ஆண்டு மலருடன் சிங்கத்தின் சிறுவயதில் - தொகுப்பு தந்திட வேண்டுகின்றேன்.

      Delete
  11. டியர் விஜயன் சார்,

    காமிக்ஸ் விளம்பரங்கள் கருப்பு வெள்ளையில், பழைய தலைமுறை புத்தகத்தில் வெளிவந்தது போய் - கண்ணை கவர்ந்த வண்ணங்களில் புதிய தலைமுறை புத்தகத்தில் வெளிவர ஆரம்பித்து விட்டது..!

    காமிக்ஸ் அட்டை படம் நம் காமிக்ஸ் புத்தகத்தில் மட்டுமே வெளிவந்த காலத்தை தாண்டி - 16.50 லட்சம் சர்குலேஷன் கொண்ட தினகரன் வசந்தம் இதழிலின் அட்டைப் படமாக இன்று அலங்கரிக்கிறது..!

    மொபைல் ஃபோன் டெலிகாஸ்டில் வெளிவந்துக் கொண்டிருந்த தங்களின் பேட்டி - உலக தொலைகாட்சி வரலாற்றிலேயே முதல் முறையாக சன் நியூஸ் ல் உலகமெங்கும் ஒளிப்பரப்பாகிறது..!


    தை பிறக்கும் முன்பே வழி பிறந்து விட்டது - வாழ்த்துக்கள் விஜயன் சார்..!

    ReplyDelete
    Replies
    1. மிஸ்டர் மரமண்டை : நம்பிக்கையோடு நடை போடுவோம் - எல்லா மாதங்களும் தையாக அமையுமென்று !

      Delete
  12. காமிக்ஸ் குடும்ப தலைகள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் தமிழர் திருநாளாம் பொங்கல் நல்வாழ்த்துக்கள்! :)

    ReplyDelete
  13. தமிழ் காமிக்ஸ் உலக ஜாம் பவான் களுக்கும் ,பிதா மகன்களுக்கும் ,ரசிகர்களுக்கும் இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள் .

    ReplyDelete
  14. சார் ..
    உங்களின் இந்த பதிவை படிக்கும் போது எனக்கு மனதில் ஒரு இனம் புரியாத மகிழ்ச்சியை ஏற்படுத்திய துடன் கண்ணிலும் ஒரு கலங்கலை ஏற்படுத்தியது ஏன் என்று தெரிய வில்லை .

    மிகுந்த ..,மிகுந்த ..சந்தோசம் சார் ...

    மீண்டும் இப்படை தோற்கின் எப்படை ஜெயிக்கும்...

    ReplyDelete
  15. சென்னை புத்தகத் திருவிழாவில் நமது காமிக்ஸ்களுக்கு கிடைத்த வரவேற்பும், புதிய வாசகர்களின் அறிமுகமும், பத்திரிகை, இலத்திரனியல் ஊடக நண்பர்களது பாராட்டுக்களும், ஊக்கமும் இந்த வருடமானது நமது காமிக்ஸ்களை மேலும் பல படிகள் உயர்த்திச் செல்லும் என்பது நிச்சயம்.

    ஆசிரியர், குழுவினர், நண்பர்கள் அனைவருக்கும் இனிய தைத்திருநாள் வாழ்த்துக்கள்! பொங்கட்டும் காமிக்ஸ் வெள்ளம்!!!

    ReplyDelete
    Replies
    1. //பொங்கட்டும் காமிக்ஸ் வெள்ளம்!!!//
      இலத்திரனியல் என்ற அருமை தமிழின் விளக்கம் என்ன நண்பரே !

      Delete
    2. 'எலக்ட்ரானிக் மீடியா' என்பதைத்தான் தமிழில் பரவலாக 'இலத்திரனியல் ஊடகம்' என்று பயன்படுத்துகிறார்கள் நண்பா.

      Delete
  16. எங்கள் போராட்ட குழுவினர் சொன்னது போல தங்களிடம் போராடி இன்னும் "முடிவை " அறிவிக்க வைக்க வில்லை எனினும் உங்கள் மௌனத்தை கலைத்து " சிங்கத்தின் சிறு வயதில் " பற்றி சொன்னதே எங்களுக்கு 50 சத வீதம் வெற்றி தான் .இன்னும் நாட்கள் இருக்கின்றன.....

    இன்னும் தொண்டர்கள் இருகின்றனர் ...

    இன்னும் போராட்டங்கள் இருக்கின்றன...

    வெற்றி நிச்சயம் .....
    நமக்கு பக்க பலமாக "குமுதம் " ஆசிரியர் கூட இன்னும் பல தலைகள் உள்ளதை ஆசிரியர் உணர்ந்து "தொகுப்பை " செயல் படுத்தி நமது போராட்டத்தை வெற்றி பெற செய்து எங்கள் சங்க செயலாளர் "பூனை " காதலை இணைத்து வைக்கும் படியும் வேண்டி கொள்கிறோம் .

    என்ன நண்டு வறுவல் கொடுத்தாலும் ....வாழை பூ வடை கொடுத்தாலும் "காதலை " பிரித்த பாவம் எதற்கும் இங்கே ஈடாகாது என்பதை மட்டும் கவனத்தில் கொள்ள எங்கள் போராட்ட குழு மீண்டும் வேண்டி கொள்கிறது .

    ReplyDelete
  17. நெகிழ்சியான, பெருமிதமான பதிவு.

    தமிழ் காமிக்ஸ் வாழ்க!

    ReplyDelete
  18. டியர் எடிட்டர்
    உங்கள் பேட்டியை பார்த்தேன் அற்புதமாக இருந்தது. பொங்கல் பதிவும் அருமை.

    ஒவ்வொரு முறையும் +6, +12, சிறப்பு மலர்கள் வெளியிட கோரிக்கை வைக்கும்போது தயங்கினீர்கள், நிராகரித்தீர்கள். இந்த புத்தக திருவிழா உங்கள் தயக்கம் தவறு என்று உங்களுக்கு எடுத்துரைத்திருக்கும் என்று நினைக்கிறேன்.
    என் கணிப்பு உங்களிடம் புத்தகங்கள் இருந்தால் இந்த வருட சென்னை புத்தக திருவிழா விற்பனை இலக்கு நிச்சயம் 5 லட்சத்தை தாண்டும்.

    பெண்கள், சிறு குழந்தைகள் மாடஸ்தி கதைகளைதான் அதிகம் விரும்புகிறார்கள்.

    தயவுசெய்து லயன் 30/வது ஆண்டு மலரில் ஒரே நாயகரின் கதை போட்டுவிட வேண்டாம். கதம்பமாக வெளியிட கேட்டுக்கொள்கிறேன். ஆனால் உங்கள் பதிவை படித்தபோது 30/வது ஆண்டு மலரை பற்றி முடிவெடுத்துவிட்டதாகதான் தெரிகிறது. ஆண்டுமலர் முன்பதிவு எப்பொழுதில் இருந்து துவங்குகிறது என்பதை தெரியபடுத்தவும்.

    ReplyDelete
    Replies
    1. Mugunthan kumar : //உங்கள் பதிவை படித்தபோது 30/வது ஆண்டு மலரை பற்றி முடிவெடுத்துவிட்டதாகதான் தெரிகிறது.//

      நிச்சயமாய் இறுதி முடிவு எடுக்கவில்லை ! ஏப்ரலில் முன்பதிவு துவங்கும் !

      Delete
  19. பத்திரிக்கை, டிவியில் நமது காமிக்ஸ் பற்றிய பேட்டிகள் வெளியானதில் மிக்க மகிழ்ச்சி!

    இன்னும் நல்ல விற்பனை கிடைக்கட்டும் சார்!

    ReplyDelete
    Replies
    1. Msakrates : வாழ்த்துகளுக்கு நன்றிகள் நண்பரே !

      Delete
  20. டியர் விஜயன் சார்,

    கண்மூடி கண் திறந்த காலமென ; இமைத்த காலமதில், சென்ற வருடம் கண் காணாமல் கரைந்து விட்டதைப் போன்ற உணர்வால், எவரின் புலனுக்குள்ளும் அடங்கி விடாமல் காலம் விரைந்தோடுகிறது ; ஓடிய காலமும் நம் மனதிலிருந்தே மறைகிறது ; வரும் காலமும் நினைத்துப் பார்க்க நினைக்கும் போதே, நில்லாமல் நிழலாய் நம் நினைவடுக்கில் துயில் கொள்ளத் தான் போகிறது..!

    ஆனால் என் காமிக்ஸ் பயணம் மட்டும் இன்றும் இளைப்பாறிக் கொண்டே இருக்கிறது ; காமிக்ஸ் பயணத்தில் வேகமாய் எழுந்து ஒடிடக் கூட வேண்டாம் ; கால நகர்தலிற்கு இணையாக வேக நடை பயின்றாலே எனக்கு போதுமானதாய் தோன்றுகிறது..!

    இனியேனும் பிரிமியம் விலையில்

    1.collector's special வெளியிடுவீர்களா..?
    2.special edition வெளியிடுவீர்களா ..?

    ReplyDelete
    Replies
    1. \\\\\\\\\\\\\மிஸ்டர் மரமண்டை 1.collector's special வெளியிடுவீர்களா..? 2.special edition வெளியிடுவீர்களா ..?\\\\\\\\\\\\

      நமது எடிட்டருக்கு சென்னை புத்தக திருவிழாவில் ஏற்பட்ட அனுபவம் முலம் நல்ல முடிவை அறிவிப்பார் என நம்பலாம்.

      Delete
    2. டியர் விஜயன் சார்,

      என்னுடைய இந்த கமெண்ட் க்கு, தங்களின் மௌனத்தையே நீங்கள் பதிலாக அமைத்திருந்தாலும் - இந்த கமெண்டை நீங்கள் நிச்சயம் படித்து முடித்தப்பின் தான் கடந்து சென்று இருப்பீர்கள் என்ற நினைப்பே எனக்கு பரம திருப்தியை தருகிறது ; இன்றில்லா விட்டாலும் இனி வரும் நாளில் இது நடைமுறைக்கு வரும் வழிமுறை தான் என்பதால் தாமதத்தை மட்டுமே இங்கு நான் விடையாக பார்க்கிறேன் ; புத்தக கண்காட்சியிலும், லேண்ட் மார்க், வால்மார்ட் போன்ற சங்கிலி தொடர் விற்பனை நிலையங்களிலும் ஸ்டாக் தீர தீர மீண்டும் மீண்டும் புத்தகங்களை அதிக அளவில் அனுப்பி வைக்க இதுவே சிறந்த தீர்வாக அமையும் ; அது மட்டுமல்ல மீண்டும் மீண்டும் அளவாக பதிவிட்டு (Tintin, Asterix போன்று) விற்பனைக்கு அனுப்பி வைக்கவும் ஏதுவாக இருக்கும்..!

      பிரிமியம் விலையில் - மினிமம் பிரிண்ட் ரன் ல் - முழு வண்ணத்தில் - காமிக்ஸ் புத்தகங்களை இன்றில்லா விட்டாலும் எதிர் வரும் வருடங்களில் வெளியிட இயலுமா என்பதை தாங்கள் சிந்திக்க இது ஒரு வாய்ப்பாக அமையுமானால் வருங்காலம் எங்களுக்கு வசந்தத்தை கொண்டு வருவதாக அமையும்..!

      Delete
    3. மிஸ்டர் மரமண்டை : //1.collector's special வெளியிடுவீர்களா..?
      2.special edition வெளியிடுவீர்களா ..?//

      ஆசைகளுக்கும், இலக்குகளுக்கும் பஞ்சமே கிடையாது - ஏராளமாய் உள்ளுக்குள் உள்ளன ! ஆனால் வெகு ஜன அண்மையினை முழுவதுமாய் இழந்திடக் கூடாதே என்றதொரு உறுத்தல் உள்ளே முழித்துக் கொண்டே இருப்பதால் விலைகளை உசத்தியாய் வைக்கக் கோரும் முயற்சிகளுக்குள் அடிக்கடி கால் பதிக்க மனம் ஒவ்வவில்லை ! காமிக்ஸ் என்பது மேட்டுக்குடி மக்களின் கலாச்சாரம் மாத்திரமே என்றதொரு முத்திரை பதிக்கப்படுமேயானால் அது நிச்சயமாய் நமக்குப் பெருமை சேர்க்காதே !

      Delete
    4. //ஆசைகளுக்கும், இலக்குகளுக்கும் பஞ்சமே கிடையாது - ஏராளமாய் உள்ளுக்குள் உள்ளன ! //

      நன்றி சார், உங்களின் ஆசைகள் அனைத்தும் அதன் இலக்குகளை இலகுவாக சென்றடைய எல்லாம் வல்ல இறையருள் விரைவில் அருள்புரிய வேண்டுகிறேன். உங்களின் ஆசைகள் இன்றும் விதைகளாக உங்கள் மனதில் துயில் கொண்டிருக்கலாம். ஆனால் காலம் கனிந்து வரும் போது விதைகளின் பரிணாமம் என்பது நிர்ணயிக்கப்பட்ட ஒன்று தானே சார் ?!

      //காமிக்ஸ் என்பது மேட்டுக்குடி மக்களின் கலாச்சாரம் மாத்திரமே என்றதொரு முத்திரை பதிக்கப்படுமேயானால்//

      தங்களின் மனநிலை தெளிவாக புரிகிறது சார். ஆனால் இது நிலையானது அல்ல. ஏனெனில் எல்லோராலும் வாங்க முடியாத அளவு ஒரு பொருளின் விலை அமையும் போது தான் அது ஏற்றத்தாழ்வுகளை கொண்டு வருகிறது. ஆனால் விருப்பத்தின் பெயரில் வாங்க மறுக்கப்படும் போதோ அல்லது அவசியமின்மை காரணமாகவோ - எழுப்பப்படும் சூழ்நிலைகள் ; எடுத்து வைக்கப்படும் கருத்து பரிமாற்றங்கள் ; ஏற்படும் கானல் நீர் போன்ற யூகங்கள் நம்மை ஆக்கிரமிக்க அனுமதித்தால் நம்மால் ஏற்படும் சாதனைகள் சற்று தாமதிக்க படுமேயல்லாமல் என்றும் தடைப்பட்டு விடாது. எனவே அதற்காக இனியும் காத்து கொண்டிருப்போம் சார்..!

      பிரிமியம் விலையில் collector's special மற்றும் special edition இதழ்களுக்கென தனி புத்தக வரிசை ஆரம்பித்து விட்டால் போதுமானது, அது எவரையும் பாதிக்காமல் தனி ட்ராக்கில் பயணித்துக் கொண்டிருக்கும். எனவே அதற்கான காலம் வரும் வரை மிகவும் பொறுமையுடன் காத்துக் கொண்டிருப்போம். அதற்காக விக்ரம் அரவிந்தையும் தலைவராக ஏற்போம் :)

      Delete
    5. //அதற்காக விக்ரம் அரவிந்தையும் தலைவராக ஏற்போம் :)//

      அதற்காக = பிரிமியம் விலையில் collector's special மற்றும் special edition இதழ்களுக்கென தனி தனி புத்தக வரிசையை, எதிர்காலத்தில் விக்ரம் அரவிந்த் தலைமையில் ஆரம்பிப்பது ஒரு வழி - என்று அர்த்தம் கொள்க !

      Delete
  21. //பெண்கள், சிறு குழந்தைகள் மாடஸ்தி கதைகளைதான் அதிகம் விரும்புகிறார்கள்.//
    'கழுகு மலைக்கோட்டை '
    எப்ப சார்?

    ReplyDelete

  22. விஜயன் சார்,

    அனைவருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்!

    புத்தக திருவிழாவில் கேட்ட கேள்விகளுக்கும் அப்படியே இந்த நல்நாளில் பதில் போட்டால் நலம்!
    நமது லயன் 30 ஆண்டு மலரில், 25 வருடம் முன்னால் கொடிகட்டி பறந்த (மூம் மூர்த்திகள் தவிர) நாயகர்களின் கதைகளை வெளி இட்டால் என்ன?

    கருப்பு வெள்ளை மற்றும் வண்ண கதைகளுக்கு என இரண்டு புத்தகமாக நமது ஆண்டு மலரை வெளி இட வாய்ப்பு உண்டா? முடியும் என்றால்....

    வண்ண கதைகள்: டெக்ஸ், சிக் -பில், & லக்கி லுக்
    கருப்பு வெள்ளை கதைகள்: டெக்ஸ், மாடஸ்தி, மார்ட்டின், லாரன்ஸ் & டேவிட்,....

    ஆண்டு மலரில் முழுமையான கதைகளை மட்டும் வெளி இட வேண்டும் என அன்புடன் கேட்டு கொள்கிறேன்! ஆண்டு மலரில் எந்த கதையையும் அந்தரத்தில் தொங்க விட வேண்டாம்!

    ஈரோடு புத்தக திருவிழாவிற்கு லயன் ஆண்டு மலர், பெங்களூர் காமிக்ஸ்-கான்னுக்கும் சிறப்பு வெளி ஈடு ஏதும் உண்டா ?

    அடுத்த மாத புத்தகம்கள் வெளி வரும் (வழக்கமாக 1 தேதி) தேதிகளில் மாற்றும் ஏதும் உண்டா ?

    ReplyDelete
    Replies
    1. கருப்பு வெள்ளை ஐநூறு டெக்ஸ் சுக்கு முழுமையாய் +லாரன்ஸ்
      வண்ண கதைகள் ஐநூறு தயவு செய்து யோசியுங்கள் சார் !
      //நமது லயன் 30 ஆண்டு மலரில், 25 வருடம் முன்னால் கொடிகட்டி பறந்த (மூம் மூர்த்திகள் தவிர) நாயகர்களின் கதைகளை வெளி இட்டால் என்ன?//
      பச்சை வானம் மர்மம் !

      Delete
    2. Parani from Bangalore : //கருப்பு வெள்ளை மற்றும் வண்ண கதைகளுக்கு என இரண்டு புத்தகமாக நமது ஆண்டு மலரை வெளி இட வாய்ப்பு உண்டா?//

      Sorry no !

      //அடுத்த மாத புத்தகம்கள் வெளி வரும் (வழக்கமாக 1 தேதி) தேதிகளில் மாற்றும் ஏதும் உண்டா ?//

      பிப்ரவரி 5 !

      Delete
  23. 30 ஆவது ஆண்டு மலரை தனி கதாநாயருக்கு ஒதுக்கும் எண்ணம் உங்கள் மனதில் உறுதியாகிவருவதுபோல் தெரிகிறது. தயவுசெய்து இந்த மைல் கல் இதழை லயனின் பிரபல நாயகர்களை இணைத்து கதம்பமாகவே வெளியிடுங்கள்.

    மில்லினியம் ஹிட்ஸ் இதழை டெக்ஸ்க்கு அர்ப்பணித்துவிடலாம்! நண்பர்களே, என்ன நாஞ்சொல்றது?

    ReplyDelete
  24. டியர் விஜயன் சார்,

    தினகரன் வசந்தத்தில் வெளியான கட்டுரை, வழக்கமான காமிக்ஸ் கட்டுரைகள் போல - வெறும் nostalgic நினைவுகளின் தொகுப்பாக இல்லாமல், வேறு விஷயங்களைப் பற்றியும் அதிகம் பேசியது மகிழ்ச்சி அளித்தது - இது போன்ற கட்டுரைகளே பயனுள்ளதாக இருக்கும்! முதன் முறையாக பிரகாஷ் அவர்களின் உருவப் படத்தையும் பார்க்க முடிந்தது!

    உங்கள் சன் நியூஸ் பேட்டியையும் கண்டேன்; அந்த சின்னப் பெண், பேட்டியின் போது தடுமாறியதன் காரணத்தை, உங்கள் பதிவைப் பார்த்ததும் அறிகிறேன்! கேட்ட கேள்விகளையே பலமுறை கேட்டுக் கொண்டிருந்தார்! பேசாமல் உங்களை கேள்விகள் ஏதும் கேட்காமல், auto-pilot mode-ல் விட்டிருக்கலாம்! :)

    காமிக்ஸ் என்பது சிறுவர்களுக்கானது மட்டுமல்ல என்ற கருத்தை நீங்கள் வலியுறுத்திய விதம் நன்றாக இருந்தது! இருந்தாலும், நாங்கள் அவற்றை அவ்வாறு கருதாமல் இருப்பதிற்குக் காரணம், இப்போதைய தயாரிப்புத் தரம் மட்டும் அல்ல என்பதை நீங்கள் அறிந்திருப்பீர்கள்!

    எனவே, தரம் மட்டுமன்றி (சில) கதைகளும், பெரியவர்களுக்கு (மட்டும்) ஏற்ற வகையில் வந்து கொண்டிருக்கின்றன என்பதையும் வலியுறுத்த வேண்டியது அவசியம் என்பது என் கருத்து - அதற்கு கிராஃபிக் நாவல் என்ற போர்வை பெரும் உதவியாக இருக்கும்!

    ஆனால் "கிராஃபிக் நாவல்" என்ற சொல்லை, சன்ஷைன் கி.நா. லோகோவிலும் (லென்ஸ் வைத்து தேட வேண்டும்!), தோர்கல் புத்தகத்தின் உள்ளேயும் ("கி.நா. என்றால் என்ன?" என்ற சிறு அறிமுகம் கூட இல்லை!), வசந்தம் பேட்டியிலும் (என்னது சன்ஷைன் காமிக்ஸா?!), சன் டிவி பேட்டியிலும் மருந்துக்கும் பயன்படுத்தவில்லை!

    கி.நா. போர்வையில் வெளிவந்த சில கதைகளுக்கு எழுந்த பலத்த எதிர்ப்பு - அதை ஒரு தீண்டத்தகாத சொல்லாக மாற்றி விட்டது என்று எண்ணுகிறேன்! என்னைக் கேட்டால், லார்கோ வின்ச் கதைகளைக் கூட "கிராஃபிக் நாவல்" என்று மார்கெட் செய்யலாம் - காமிக்ஸ் என்ற சொல்லைக் கேட்டு சங்கடப் படுபவர்களிடம், "இது பெரியவங்களுக்கு பாஸ்!" என்று மார்கெட் செய்ய வசதியாக இருக்கும்!

    அதே போல, இங்கே காமிக்ஸ்கள் தயாரிக்கப் படுவதில்லை என்ற ரீதியிலான உங்கள் கருத்தில் இருந்து மாறுபடுகிறேன்! இந்தியாவிலும் பல காமிக்ஸ்கள் தயாராகிக் கொண்டு தான் இருக்கின்றன (நீங்கள் அறியாததல்ல என்றாலும்)! பெரிய அளவில் விற்பனைகள் இல்லாவிட்டாலும், மிகவும் தரமான இந்திய (ஆங்கில / ஹிந்தி) காமிக்ஸ்கள் வெளிவந்து கொண்டுதான் இருக்கின்றன! அவற்றை தமிழில் கொணர்வது சாத்தியமா என்ற எனது அரதப் பழைய கேள்வியை மீண்டும் ஒரு முறை இங்கு கேட்டு வைக்கிறேன்! :) இந்திய பதிப்பகங்களிடம் இருந்து அவற்றிக்கான உரிமம் பெறுவது சுலபமல்ல என நீங்கள் சொன்னதாக ஞாபகம் - மீண்டும் ஒருமுறை முயற்சிக்கலாமே?!

    அனைவருக்கும் பொங்கல் நல்வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. Karthik Somalinga : கிராபிக் நாவல்கள் பற்றியும், தோர்கள் பற்றியும் நான் பேசி இருந்த பகுதிகள் எடிட்டிங்கில் உள்வாங்கிக் கொள்ளப்பட்டுள்ளது - நீளம் கருதி !

      தவிர கிராபிக் நாவல்களை 2014-ல் பின்வரிசைக்கு அனுப்பி இருப்பது ஒரு தற்காலிக ஏற்பாடு மாத்திரமே ! வித்தியாசமான இரு ஜானர்களில் 2 கி.நா ஆல்பம்களுக்கு முயற்சித்து வருகிறேன் ! இந்தாண்டின் முதல் 4 மாதங்களுக்குள் என் முயற்சிகளின் பலன் தெரிந்திருக்கும் !

      Delete
  25. மன்னிக்க வேண்டும், சன்ஷைன் கிராபிக் நாவலுக்கான புதிய லோகோ - திருப்தியாகவே இல்லை ; மிகவும் சுமாராக இருப்பதாகவே எனக்கு தோன்றுகிறது. அடுத்த இதழிலிருந்து வேறு ஏதாவது புதிய லோகோ முயற்சிக்க வாய்ப்புள்ளதா சார் ?

    ReplyDelete
  26. Will 30th annual issue be a COWBOYS special instead of full Tex Willer? Please consider...

    ReplyDelete
  27. ஆண்டின் ஆரம்பம், புதிய விலையில், புதிய Size-ல் மற்றும் பலவிதமான Exposure - களால் நிறைந்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது! இம்மாதிரி Exposures புதிய வாசகர்களை ஈர்ப்பதுடன் விற்பனையாளர்களுக்கும் காமிக்ஸ் பக்கமாக Confidence-ஐ உண்டுபண்ண உதவும் (அ) உதவக்கூடும் (அ) உதவலாம் (அ) உதவினால் மகிழ்ச்சி! ;)

    Sun News Interview-ல் கலந்துகொண்ட இருவரும் புதியவர்களாக இருந்தாலும் கருத்துக்கள் இயல்பாக இருந்தது, Thanks!

    சில Facts:

    இம்மாதிரி Exposure-களுக்கான களங்களில் நமது புத்தகங்களின் அட்டைப்படங்களை மட்டும் காட்டாமல் உள்பக்கங்களையும் காட்டலாம். காரணம், உள்பக்கங்கள்தான் காமிக்ஸின் தனித்தன்மையான Attraction-ஐயும் அடையாளத்தையும் வெளிப்படுத்தக்கூடியது. So நமது வெளியீடுகளிலிருந்து சிறப்பான உள்பக்கங்களின் Template Snapshot-கள் சிலவற்றை Soft copy-ஆகக் கையில் வைத்திருந்தால் சமயத்தில் உதவும்.

    "காமிக்ஸ் சிறுவர்களுக்கான விஷயம் இல்லை, பெரியவர்களும் ரசிக்கக்கூடியது" என்ற கருத்தை ஒரு Publisher சொன்னால் நம்மூர் மக்கள் எப்படி எடுத்துக்கொள்வார்கள் என்பதை நாம் ஜாக்கிரதையாகப் பார்க்கவேண்டும். காமிக்ஸ் அறிமுகம் இல்லாதவர்கள் இதனை Just another promotion / expansion strategy-ஆக மட்டுமே பார்ப்பார்கள்; உலகளவில் இருக்கும் நிதர்சனம் அவர்களுக்குத் தெரியாது.

    எனக்கு மனதில் பட்ட ஒரே காரணம் இதுவே: காமிக்ஸ் படைப்பாளிகள் எந்த வயதினரை கருத்தில் கொண்டு கதைகள், வசனங்கள் மற்றும் சித்திரங்களை செய்கிறார்களோ அந்தந்த வயதினருக்கு அந்தக்கதைகள் சிறப்பான பொழுதுபோக்கே ஆகும். பலநேரங்களில் 13 வயதுக்குக் குறைந்த சிறு வயதினருக்காகப் படைக்கப்பட்ட கதையாக இருந்தாலும் அவை பெரியவர்களுக்கும் நல்ல பொழுதுபோக்காகவே உள்ளது. So அந்தப்படைப்புக்கள் மொழிபெயர்க்கப்பட்டு நமது நாட்டில் வெளிவரும்போது இயல்பாகவே எல்லா வயதினருக்கும் பொருந்தக்கூடியதாகவே அமைகிறது.

    @Friends: சுவையான வெண் பொங்கல் மற்றும் இனிய சர்க்கரைப்பொங்கல் வாழ்த்துக்கள்! ;)

    ReplyDelete
    Replies
    1. ரமேஷ்,

      //இம்மாதிரி Exposure-களுக்கான களங்களில் நமது புத்தகங்களின் அட்டைப்படங்களை மட்டும் காட்டாமல் உள்பக்கங்களையும் காட்டலாம். காரணம், உள்பக்கங்கள்தான் காமிக்ஸின் தனித்தன்மையான Attraction-ஐயும் அடையாளத்தையும் வெளிப்படுத்தக்கூடியது. So நமது வெளியீடுகளிலிருந்து சிறப்பான உள்பக்கங்களின் Template Snapshot-கள் சிலவற்றை Soft copy-ஆகக் கையில் வைத்திருந்தால் சமயத்தில் உதவும்//

      தற்போதைய பத்திரிக்கையுலகம் எப்படி இயங்குகிறது? என்பது நம்மில் பலருக்கும் தெரியாது. இந்த பேட்டி ப்ளூ மேட் / க்ரீன் மேட் என்று சொல்லப்படும் ஒரு முறையில் ஷூட் செய்யப்படுகிறது. அதாவது பின்னால் ஒரு நீல வண்ண துணி (போர்வை) மட்டுமே இருக்கும். அதன் முன்பாகவே இந்த இண்டர்வியூ நடந்தது.

      பின்னர் உங்களைப்போன்ற க்ராஃபிக்ஸ் நிபுனர்கள் மூலம் பின்னனியை டிசைன் செய்து அதுவே எடிட்டிங் செய்யப்பட்டு திரையில் வெளியாகும்.

      ஆகவே இந்த நிகழ்ச்சியில் இருக்கும் பின்னனி படங்களுக்கும் நமக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. அது அந்த க்ராஃபிக்ஸ் நிபுனரின் செலக்ஷன் தான். சில ஆண்டுகளுக்கு முன்பாக புதிய தலைமுறையில் இதுபோல ஒரு கட்டுரையை ஒழுங்கு செய்தபோது அவர்க்ளின் லே அவுட் ஆர்ட்டிஸ்ட் நமது கட்டுரையின் பக்கங்களில் ஸ்பைடர்மேன், சூப்பர்மேன் என்றெல்லாம் டிசைன் செய்துவிட்டார். கட்டுரையை எழுதியவருக்கே அச்சில் வந்தபோதுதான் இது தெரியவந்தது. ஆகவே எதுவுமே முழுமையாக நமது கையில் இல்லை.

      பின் குறிப்பு: இந்த சன் டீவி இண்டர்வியூ உண்மையில் ஒரு நாள் தாமதமாக தான் ஓளிபரப்பானது. இது நிச்சயம் செய்யப்பட்டபோது ஒரிஜினலாக ஒளிபரப்பாக இருந்த நாள் வெள்ளிக்கிழமை தான், சனிக்கிழமை அல்ல.

      Delete
    2. எனவே இனிமேல் நேர்காணல் அல்லது கட்டுரைகளுக்கான பதில்களை சமர்ப்பிக்கும்போது அவர்கள் கேட்க மறந்தாலும் நாமாகவே ஒரு set of digital Image DVD (அல்லது File-களுக்கான download links-ஐ) தந்துவிட்டால், தேவைப்படும்பட்சத்தில் அவர்களுக்கும் எளிதாகிவிடும், நமக்கும் விரும்பிய விதத்தில் content display ஆகும். So it is essential to have a prepared portfolio always! ;)

      Delete
    3. தமிழ் காமிக்ஸ் உலகின் நாட்டாமையே சொல்லியாச். இனிமே என்ன?

      Jokes apart, அப்படியே செய்துவிடுவோம் ரமேஷ். நல்லதொரு யோசனைதான் இது.

      Delete
    4. தமிழில் எனக்குப் பிடிக்காத ஒரே வார்த்தை: நாட்டாமை...

      அவ்வ்வ்....

      Delete
    5. ஹா ஹா! இப்படியொரு பொருத்தமான பெயரை உங்களுக்கு வைத்த அந்த தீர்க்கதரிசியின் ஞானத்தை வியக்காமல் இருக்க முடியவில்லை! :)

      Delete
    6. //தமிழில் எனக்குப் பிடிக்காத ஒரே வார்த்தை: நாட்டாமை...//
      தமிழ்ல அடியேனுக்கு புடிச்ச வார்த்தை-சூட்டு மாமோய்;-)

      Delete
    7. // சூட்டு மாமோய் //

      தமிழில் எனக்கும் பிடித்த வார்த்தை "சூட்டு மாமோய்" அல்லது சூ.போ.அ.க.நா!

      Delete
  28. அனைவருக்கும் பொங்கல் நல் வாழ்த்துக்கள் . ஆண்டு மலருக்கு டெக்ஸ் மட்டுமே சரியான சாய்ஸ் . ஏனென்றால் டெக்ஸ்-ன் பெரிய கதைகளை வெளியிட சிறப்பு இதழ்களே சரியான களம் . மற்றவர்களின் கதைகளை பிரித்து வெளியிடலாம் டெக்ஸ்-கு அது சாத்தியம் இல்லாததால் டெக்ஸ் மட்டுமே சரியான தேர்வு .

    ReplyDelete
    Replies
    1. Auditor Raja : அழகான point !

      Delete
    2. ஆசிரியர் ஒரு ப்ளானுக்கு வந்துவிட்டதாகவே தெரிகிறது. ஆனாலும், எனது அபிப்பிராயம் - கதம்பமே! நாங்கள் இன்றும் காமிக்ஸ்களை ரசிப்பதற்கு காரணம் எமது சிறு வயது வாசிப்பு அனுபவமே! அன்றைய தீபாவளி, ஆண்டு மலர் - சிறப்பிதழ்களில் வந்த கதம்பங்களே இன்றுவரை ரசனைக்குரியவையாக உள்ளன என்பதையும் கருத்தில்கொள்ள வேண்டுகிறேன். லக்கிலூக், ரிப்போர்டர் ஜானி ஆகியோரின் வெளியிடாத பல கதைகளும் இன்னமுமிருப்பதையும் நீங்களே சொல்லியிருக்கிறீர்களே? எல்லாவற்றையும் கலந்து ஒரு அதிரடியான திரட்டை கொடுத்து எம்மை திக்குமுக்காட வையுங்கள் சார். தனி டெக்ஸ் சிறப்பிதழை - மில்லெனியம் ஹிட்ஸ் ஸ்பெஷலுக்கு ஃபிக்ஸ் செய்துவிடுங்களேன், ப்ளீஸ்!

      Delete
    3. டியர் பொடியன் !!!
      மாதந்தோறும் நாம் படித்துக்கொண்டிருப்பது கதம்பமான பல ரக கதைகளைத்தானே?
      ஒரு மாற்றத்திற்க்காகவாவது இம்முறை ஒரு அழகான "டெக்ஸ் டைஜஸ்ட்" அதுவும் வண்ணத்தில் வெளிவந்தால் நிச்சயம் அது கதம்ப கதைகளை விடவும் அற்புதமாய் இருக்குமே?

      Delete
  29. தல டெக்ஸ்க்கு தனியா ஒரு +12 போடலாம் தல..

    ReplyDelete
  30. அனைவருக்கும் வீர்ப்பொங்கல் நல்வாழ்த்துகள்!!!

    ReplyDelete
  31. This comment has been removed by the author.

    ReplyDelete
  32. ஆண்டு மலரை 10 கதைகளாக போட்டால்தான் கல்யாண சாப்பாடு போல் நன்றாக இருக்கும் வெறும் ஒரு கதை கொண்ட டெக்ஸ் வில்லேர் கதைகள் என்னை பொறுத்தவரை சிறப்பாக இருக்காது, 500 பக்கமும் டமால் டுமில் என்று இருந்தால் அயர்ச்சி தான் உண்டாகும், நேயர்கள் விருப்பத்திற்காக டெக்ஸ் வில்லேர் ஒரு கதை மட்டும் கலரில் போடவும் இல்லை என்றால் நான் இந்த நாட்டை விட்டு போவதை தவிர வேறு வழிஇல்லை (உபயம் - கமல் ஹாசன்)

    ReplyDelete
    Replies
    1. @ lion ganesh

      //இல்லை என்றால் நான் இந்த நாட்டை விட்டு போவதைத் தவிர வேறு வழி இல்லை //

      ஹா ஹா ஹா! வாங்க, ரெண்டு பேரும் சேர்ந்தே கிளம்பிடுவோம். இத்தாலி ஓகேவா? :D

      Delete
    2. வேறு யாரும் பதில் சொல்லாம இருக்கறத பார்த்தா இத்தாலிகே அனுப்பிருவிங்க போல

      Delete
    3. நானும் உங்கள் பக்கமே நண்பரே.

      Delete
    4. Tex rocks... italy moved to tamilnadu...

      Delete
    5. Erode VIJAY : இத்தாலிக் காதலுக்கு காமிக்ஸ் மட்டும் தான் பிரத்யேகக் காரணமென நம்புவோமாக !!

      Delete
  33. Well done sir, quality of all the 4 books exceeded our expectation this time. Keep up the good work :)

    ReplyDelete
  34. XIII னுக்கு காத்திருந்த இருண்ட காலமும் ,பொறுமையும் வீணாகாது இன்னொரு ஆனால் இனி அடி சறுக்கா புதிய காமிக்ஸ் பொற்காலத்தை காண வைத்து விட்டது.
    இன்னும் எமக்கு சிறந்த இதழ்கள்,ஆல்பங்கள் தந்திட அனைத்தும் பலரது ஆர்வமும் வழி சமைத்துள்ளது.
    ல.கா மற்றும் மு.கா வுக்கு மகளிர் அணிகள் உருவாக போகிறது.
    உங்கள் உத்திகள் ,ஊக்கத்தால் வாசகர் வட்டம் ,விட்பனை பெருகுவது உறுதி.
    மொத்தத்தில் காமிக்ஸ் ரசிகராக எல்லோருக்கும் மகிழ்ச்சியை தரும் பதிவு.
    அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துக்கள் :)

    ReplyDelete
  35. Mainstream media (The Hindu, Sun News, Dinakaran)களில் நமது காமிக்ஸ்களுக்கு coverage கிடைப்பது ரொம்ப மகிழ்ச்சி அளிக்கிறது. விற்பனை பல மடங்கு அதிகரிக்க வாழ்த்துகிறேன்.

    ReplyDelete
  36. வாவ்... நீண்ட நாட்களுக்கு பிறகு மிக சுவாரஸ்யமானதொரு பதிவு. உங்கள் புத்தக கண்காட்சி அனுபவங்களை படிக்கும் போது கண்கள் கலங்கியும் சன் நியூஸ் பேட்டி பற்றி விவரிக்கும் போது சிரிப்புமாக மகிழ்ச்சியும் நெகிழ்ச்சியும் கலந்த பதிவு. கண்காட்சிக்கு வரமுடியாமல் போனது வருத்தமாக இருந்தது. உங்கள் பதிவைப்படித்ததும் மிக்க சந்தோஷம் சார்...

    அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்!

    ReplyDelete
  37. வரவுள்ள கார்சனின் கடந்த காலமும் விரைவில் டைகரின் இரத்த கோட்டை தொடரும் வண்ணத்தில் வர வேண்டும்.

    ReplyDelete
  38. An article Which I cant excuse to read. Excited while reading. If possible please compile all the editors letters 'Singathin siru vayathil' like in to separate book. Which can be a free supplement otherwise you wont accept this.

    ReplyDelete
  39. ஆசிரியர் குழுமத்திற்கும், நண்பர்களுக்கும் பொங்கல் வாழ்த்துக்கள். தினகரன் வசந்தத்தில் வந்த ஆசிரியரின் பேட்டி இங்கே....

    http://www.dinakaran.com/E_book.asp?id=25&cat=22

    ReplyDelete
  40. சார்...இங்கு டெக்ஸ் ..,டைகர் வோட் போட்டி வைப்பதை விட அடுத்த புத்தகத்தில்

    கௌ -பாய் வீரரில் உங்கள் மனம் கவர்ந்தவர் டெக்ஸ் வில்லரா ..? டைகரா ..?என ஒரு கட்டுரை போட்டி வைத்தால் இணையம் பயன் படுத்தவர் ...இணைய பார்வையாளர் ...இணையம் பயன் படுத்தாவதர் என அனைவரும் கலந்து கொள்வது சுவையாக இருக்கும் .பரிசாக தங்கள் பழைய இதழை அளித்தால் இன்னும் மெருகு கூடும் .

    ReplyDelete
    Replies
    1. Paranitharan K : ஐடியா நன்றாகவே உள்ளது ! But இன்றைய தேதியில் கட்டுரைப் போட்டிக்கு எழுதுவதைப் போல மெனெக்கெடும் பொறுமை நம்மில் பொதுவாய்க் குறைந்துள்ளது ! எவ்வளவு பேர் இதற்கென நேரத்தைத் தந்திடத் தயாராய் இருப்பார்களோ - தெரியலியே !

      Delete
    2. அப்படி போட்டி வைத்தால் முதல் ஆளாக நான் ரெடி சார் ....எங்கள் "டெக்ஸ் "காக எனது முழு நாளையும் செலவிட நான் தயார் ...

      Delete
    3. "டைகர் "காக அப்படி யாராவது உள்ளிர்களா நண்பர்களே ....

      Delete
    4. // கௌ -பாய் வீரரில் உங்கள் மனம் கவர்ந்தவர் டெக்ஸ் வில்லரா ..? டைகரா ..? //

      ஜெய்ஷங்கர்... :P

      Delete
  41. * A touching post after a long time.

    * You had aced the Sun News interview and i can see that you were taking your time in coming up with the answers during interview.

    * Lot of press time/ coverage, hopefully all this translates into new subscriptions / sales.

    * Good to hear the book sales in the chennai book fair, hope to see the sales go high.

    * We all really miss NBS, even though we have four separate books it does not give the same impact as NBS

    * Lion 30th year special, definitely it has to be a kadambam malar, which can include Tex if needed. Tex exclusive can come out as Diwali Malar like this year but not for lion's 30th issue. This book should match or exceed NBS in story quality, book size, pages, etc...

    ReplyDelete
  42. வசந்தத்தில் வந்த நமது காமிக்ஸ் பற்றிய கட்டுரையை படித்தேன் மிக அழகாக வெளியிட்டிருந்தார்கள்.
    இந்த ஆண்டு முதல் நமது காமிக்ஸ்/ன் பொற்காலம் தொடங்குகிறது என்று நினைக்கிறேன்.

    ReplyDelete
  43. புத்தகத் திருவிழாவின் முதல் நாள் நிகழ்வுகளையும் சன் ட்டீ.வி. அரங்குக்குச் சென்று பேட்டி தந்து வந்த அனுபவத்தையும் படிக்க பரவசமாய்; பரபரப்பை இருந்தது..

    ReplyDelete
  44. Very good to know Book stall is big success in Book Fair. All the Best Editor Sir. Just curious, did the books for Other country subscribers sent out already for Jan?

    அனைத்து காமிக்ஸ் வாசக நண்பர்களுக்கும் பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

    - Nambi

    ReplyDelete
  45. @Editor sir, at least let us know answer for this question.

    // "+6 இந்தாண்டும் உண்டா - கிடையாதா ?" //

    ReplyDelete
  46. Ooh one more thing, have we implemented the idea (credit @saint satan in previous post) of putting a notice that says "we collect subscriptions for 2014" - that will definitely encourage people to join the subscription

    ReplyDelete
    Replies
    1. Great, hopefully few people sign up for subscription through book fair.

      Delete
  47. நான் அமெரிக்காவிலிருந்து இந்தியாவுக்கு மூன்று வாரம் வந்திருந்தேன். எனது விமானம் சனி இரவு என்று இருக்க, சென்னைக்கு ஒரு நாள் முன்பே வந்து புத்தகக் கண்காட்சிக்கு சனிக்கிழமை ஆஜராகி மூன்று முறை ஸ்டால் பக்கம் வந்து தேடியும் உங்களைக் காணவில்லை :( (நீங்கள் சண் டிவி பேட்டியில் இருந்திருப்பீர்கள்). மிகவும் ஏமாற்றம். ஒரு புகைப்படம் எடுப்பதற்காக கேமரா எல்லாம் கொண்டு வந்திருந்தேன்.
    கிங் விஸ்வா வருபவர்களிடம் காமிக்ஸ் பற்றி எடுத்துச் சொல்லி அயராது விற்பனையைப் பெருக்கிக் கொண்டிருந்தார். இந்த மாதிரி வாசகர்கள் தான் உங்கள் பலம்!

    ReplyDelete
    Replies
    1. Prunthaban : சனி இரவு விமானத்தை வைத்துக் கொண்டும் நம் ஸ்டாலில் தவமிருந்த உங்களைப் போன்ற நண்பர்களும் அந்தப் "பலம் சேர்க்கும் வாசகப் பட்டியலில்" சேர்த்தி தானே !!

      Delete
  48. தங்கள் பேட்டியை திருச்சியில் சன் நியுஸ் சேனல் தெரியாததால் பார்க்க முடியவில்லை! Youtubeல் link கொடுத்தால் நன்று!:-)

    ReplyDelete
  49. தினகரனில் காமிக்ஸ் உருவான கதை படித்தேன். காமிக்ஸ் அறியாத பல விஷயங்கள் தெரிந்துகொண்டேன்!

    ReplyDelete
  50. காமிரேட்ஸ் / நண்பர்களே,

    சென்னையில் எடிட்டர் சன் நியூஸ் சேனலில் கொடுத்த பேட்டியானது 12ம் தேதியன்று அறிவைத் தேடி என்கிற நிகழ்ச்சியில் ஒளிபரப்பானது. அந்த நிகழ்ச்சி மதியம் 1 மணிக்கு ஆரம்பித்தது. ஆனால் நமது எடிட்டரின் பேட்டி அந்த நிகழ்ச்சியில் சரியாக 15 நிமிடங்கள் கழித்தே 1.15க்கு ஆரம்பித்தது. ஆகையால் அந்த பேட்டியை மட்டும் பார்க்க விரும்பும் நேயர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள லின்க்’ஐ க்ளிக் செய்யவும்.

    எடிட்டர் சன் நியூஸ் சேனலில் கொடுத்த பேட்டி

    எடிட்டரின் பேட்டி மட்டும் எடிட் செய்யப்பட்டு தனியாக (அந்த 15 நிமிடங்கள் மட்டுமே) ஒரு தனி வீடியோவாக தொகுக்கப்பட்டுள்ளது. பார்வைக்கு நன்றி.

    ReplyDelete
    Replies
    1. டியர் விஸ்வா

      கமெண்டில் இப்படி லிங்க் கொடுப்பது எப்படி என்ற செய்முறையை இங்கு தெரியப்படுத்தினால் - இந்த வழிமுறை தெரியாத என்னை போன்ற லயன் வாசகர்கள் அனைவருக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்..

      Delete
    2. //கமெண்டில் இப்படி லிங்க் கொடுப்பது எப்படி //
      http://www.echoecho.com/htmllinks01.htm

      Delete
    3. நன்றி ரமேஷ். நாட்டாமை என்ற பதவிக்கு மேலும் கௌரவம் சேர்ப்பதாக உங்களின் பதில் அமைந்துள்ளது ; மிகவும் மகிழ்ச்சி. சில மாதங்களுக்கு முன்னால் Google Input Tools பிரச்சனை செய்த போது, நண்பர் விஸ்வா அவர்கள் இங்கு ஒரு கமெண்டில் step 1, step 2, step 3 என்று லிங்க் கொடுத்து மிகவும் எளிமையாகவும், விரிவாகவும் விளக்கியிருந்தார். அது என்னை போன்ற கம்ப்யூட்டர் வாசம் அற்ற பல வாசகர்களுக்கு பேருதவியாக இருந்தது.

      அது போல் நீங்களும் உதவ முடியுமா ?

      Delete
    4. நண்பர்களே,

      கீழே நான் கொடுத்துள்ள லின்க்’ஐ க்ளிக் செய்து அது தனியாக திறக்கும் பக்கத்தில் இருக்கும் வார்த்தைகளையும், குறியீடுகளையும் Type செய்து வைத்துக்கொள்ளுங்கள். உபயொகப்படும்.

      Link Name

      இப்போது அந்த படத்தில் இருக்கும் ஆங்கில வார்த்தைகளையும் சங்கேத குறியீடுகளையும் ஆங்கிலத்தில் ஒரு நோட் பேட்’ல் டைப் செய்து கொண்டு இந்த இடத்தில் இரண்டு அபாஸ்ட்ரொஃபிக்களுக்கு “ “ நடுவில் இருக்கும் இடத்தில் நீங்கள் லின்க் செய்ய விரும்பும் தளத்தின் முகவரியை காப்பி செய்து கொள்ளுங்கள்.

      உதாரணமாக, மேலே கொடுக்கப்பட்டுள்ள லின்க்கில்

      எடிட்டர் சன் நியூஸ் சேனலில் கொடுத்த பேட்டி

      என்று இருப்பதை க்ளிக் செய்தால் அது

      http://tamilcomicsulagam.blogspot.in/2014/01/chennai-book-fair-2014-cbf-day-02.html

      என்ற முகவரிக்கு உங்களை அழைத்து செல்லும்.

      இதில் மேலே இருப்பது தான் முதலில் நான் சொன்ன அந்த Link URL . எடிட்டர் சன் நியூஸ் சேனலில் கொடுத்த பேட்டி என்பதுதான் அந்த Link Name,

      இந்த முறையை பின்பற்றி நீங்களும் இனிமேல் கமெண்ட்டில் லின்க் கொடுக்கலாம்.

      இனிமேல் எந்த தளத்திற்க்கு லின்க் கொடுக்க வேண்டுமோ அந்த தளத்தின் URLஐ காப்பி செய்து Link URL என்ற இடத்தில் பேஸ்ட் செய்துவிட்டு அந்த லின்க்கிற்க்கு என்ன பெயர் கொடுக்க வேண்டும் என்பதை Link Name ல் டைப் செய்து கமெண்ட்டில் அதனை லின்க் ஆக அளித்து விடுங்கள்.

      ஒக்கேதானே?

      Delete
    5. King Viswa : // ஒக்கேதானே? //

      T.நகர் சரவணா ஸ்டோர்ஸ் தங்க நகை மாளிகை யில் பொறுமையாக ரேட் பார்த்து, குவிந்து கிடக்கும் எண்ணற்ற டிசைன்கலிளிருந்து நகை செலக்ட் செய்து வாங்குவதைப் போன்று மிகவும் சுலபமாகவே இருக்கிறது. முதன் முதலில் - ரேட் கார்ட் கொண்டு வந்தவர்களும், தங்க நகைக்கு செய்கூலி என்பதை தமிழ் நாட்டிலிருந்தே ஒழித்தவர்களும், சவரனுக்கு 80 ரூபாய் தள்ளுபடி கொடுத்ததும், சிறுவர் சிறுமிகளைக் கூட சேல்ஸ் கௌண்டரில் நிறுத்தி முதலாளியே இல்லாமல் தினமும் கோடிக்கணக்கான ரூபாயில் வர்த்தகம் செய்தவர்களும் சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர்கள் தான் என்பது என் கணிப்பு. இல்லை, 'என் தங்கம் என் உரிமை' என்று வீதியில் இறங்கி இன்று போராடும் பிரபு சொல்வது தான் உண்மையா என்று தெரியவில்லை ?! :(

      டியர் விஸ்வா, நீங்கள் கூறியது அனைத்தும் தெளிவாக உள்ளது. இனி நாம் கொடுத்த லிங் அப்படியே லயன் ப்ளாக் லும் வேலை செய்ய வேண்டுமானால் நாம் என்ன செய்ய வேண்டும் என்று நீங்கள் மீண்டும் ஒரு விளக்கம் அளித்தால் என் கமெண்ட் முழுமை பெரும் என்பது என் தாழ்மையான கருத்து. அதாவது

      1.கூகுள் தமிழில் டைப் செய்து காப்பி பேஸ்ட் செய்வது ;
      2.நம்முடைய ப்ளாக்கில் டைப் செய்து காப்பி பேஸ்ட் செய்வது ;
      3.நம் ஈமெயில் லில் டைப் செய்து காப்பி பேஸ்ட் செய்வது ;
      4.Select profile ல் Google Account செலக்ட் செய்து Publish என்று கொடுப்பது ;

      என இவையனைத்திலும் லிங்க் வேலை செய்வதில்லை எனும் பொது தவறு எங்கிருக்கும் என்று அறிய விரும்புகிறேன்..?

      Delete
  51. சென்னை புத்தக கண்காட்சி – இரண்டாம் நாள் – சனிக்கிழமை:

    காலையிலேயே தி ஹிந்து பத்திரிக்கை நடத்தும் “இலக்கிய விழாவில்” (The Hindu - Chennai Literary Festival) சோஷியல் மீடியாவில் காமிக்ஸ் என்ற தலைப்பில் என்னை பேச சொல்லி சிறப்பு அழைப்பு விடுதிருந்தமையால் என்னால் நமது ஸ்டாலுக்கு மதியம் 3 மணிக்கு மேல்தான் செல்ல முடிந்தது. காமிக்ஸ் பற்றி தெரியாத நூற்றுக்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ/மாணவியரிடம் அதனை பற்றி பேசியது …..ஹ்ம்ம்ம், வேண்டாம் விடுங்கள்.

    ஸ்டாலில் நுழையும்போதே இணைய பிரபலம் நண்பர் ஆதி தாமிரா அவர்களை கண்டுகொண்டேன். வெறொருவரிடம் பேசிக்கொண்டு இருந்தபோது ஆதி வந்து அறிமுகம் செய்துக்கொண்டு பேச ஆரம்பித்தார். அன்றிரவே அவர் பயணம் செய்ய வேண்டி இருந்ததால் மாலையில் எடிட்டர் வந்தவுடனே போட்டொவுக்கு போஸ் கொடுத்துவிட்டு கிளம்பி விட்டார். புத்தக கண்காட்சி முடியும்முன் மறுபடியும் வருவதாக சொல்லியிருக்கிறார்.

    அதற்க்கு பிறகுதான் யுவராஜ் அவர்களை கண்டேன். இவருடைய கைவண்ணம் ஏற்கனவே வாசகர் ஸ்பாட்லைட்டில் வந்துள்ளது (இரண்டு விச்சு – கிச்சு கதைகள்). இவர் முத்து காமிக்ஸ் கொலைகார கபாலம் புத்தகத்தின் 20 பிரதிகள் கொண்டுவந்து அனைவருக்கும் இலவசமாக கொடுத்தார்.

    நிறைய குடும்ப தலைவிகளை நமது ஸ்டாலில் காண முடிந்தது. குட்டிகள் வந்தவுடனே அவர்களை சுட்டி லக்கியிடம் திசை திருப்புவதே நமது தலையாய கடமையாக இருந்தது. சுட்டி லக்கி விரைவில் விற்றது ஆச்சர்யபட வைக்கவில்லை.

    லக்கிலூக் கதைகள், டைகர் கதைகள், டெக்ஸ் வில்லர் கதைகள், டைபாலிக் கதைகள் என்று வரிசைப்படுத்தி வைத்து இருந்ததால் வருபவர்களிடம் அறிமுகம் செய்ய வசதியாக இருந்தது.

    நெடு நாள் வாசகர்கள் கோபால் (கார்த்திக் இவரை மறக்கவே மாட்டார்), துர்க்கானந்த் , மொய்தீன் , முனீர் , சென்னை கோபாலபுரம் பாபு , அதிஷா,
    மதுரை அஸ்லம் பாஷா , அட்வகேட் வெங்கடேஸ்வரன் , எழுத்தாளர் சுப்ரஜா போன்றோரை காண முடிந்தது.

    குமுதம் எடிட்டர் திரு ப்ரியா கல்யாணராமன் அவர்கள் அன்றுதான் அவருடைய புத்தக வெளியீட்டை முடித்துவிட்டு நமது ஸ்டாலுக்கு விரைந்து வந்து காமிக்ஸ் செட் ஒன்றை வாங்கிக் கொண்டு சென்றார். மறுபடியும் திரும்ப வந்து எடிட்டரிடம் சுமார் 30 நிமிடங்கள் பேசிவிட்டு சென்றார். அதைப்பற்றி தனியாக பேசலாம்.

    குங்குமம் முன்னாள் எடிட்டர் கௌதம் சாரும் வந்து இருந்தார். இவர் தன் இளம்பருவத்தில் காதல் கடிதம் எழுதும்போதுகூட இரும்புக்கை மாயாவியை விடவில்லை (மாயாவியை போல அரூபமாக வந்து உன்னை சந்திப்பேன் என்று எழுதி இருந்தார்). அவருடைய காதல் கடிதத்தை நீ ஏன் படித்தாய்? என்றெல்லாம் கேட்காதீர்கள்.


    இந்த புத்தக கண்காட்சியின் அமைப்பாளர் திரு புகழேந்தி அவர்களும், காந்தி கண்ணதாசன் அவர்களும் (இவர் 40 வருடங்களாக நமது ரெகுலர் வாசகர்) சிவாஜி கணேசன் அவர்களின் மூத்த புதல்வர் ராம்குமாருடன் வந்து இருந்தனர்.

    தகவல்கள் தொடரும்…….. in சென்னை புத்தக கண்காட்சி – இரண்டாம் நாள் – சனிக்கிழமை

    ReplyDelete
    Replies
    1. சுவையான நிகழ்வுகள். சூப்பர் சூப்பர்!
      இன்னும்... இன்னும்... தாகம்... தாகம்...

      Delete
    2. டியர் விஸ்வா , சனிக்கிழமை மாலை என் நண்பர் bookfair வந்தபோது நீங்கள் நம் ஸ்டாலில் போஸ்டர் ஒட்டிக்கொண்டு இருந்ததாக சொன்னார் ! மனது கொஞ்சம் நெகிழ செய்தது !
      டியர் விஜயன் சார் , உங்களின் இந்த பதிவை படிக்கும்போது" சிங்கம் ஒன்று புறப்பட்டதே " என்று என் உதடுகள் முணுமுணுத்தது தற்செயல் ஆக இருக்குமோ !:)

      Delete
    3. விஜய் உங்கள் தாகம் தீர வேண்டுமெனில் சென்னை சென்று நமது ஸ்டாலில் ராதாக்ருஷ்ணன் அண்ணாச்சி அவர்கள் கையால் ஒரு கிளாஸ் தண்ணீரை படக்கென வாங்கி மடக்கென குடியுங்கள் ! அப்போதான் தீரும்....தாகம் !

      Delete
    4. @ ஸ்டீல்

      அண்ணாச்சி அங்கே நீர்மோர் பந்தல் வச்சிருக்காரா என்ன?!

      Delete
    5. Dr சுந்தர், சேலம்:

      சார்,

      உங்கள் நெருங்கிய நண்பர் வீட்டு விஷேஷம். அதில் நீங்கள் கலந்து கொண்டால், உங்கள் வீடு போல கருதி நீங்கள் வீட்டு வேலைகளை நீங்களே செய்வதுதானே முறை?

      இது நம்ம ஸ்டால் சார். ஆகையால் என்னுடைய சம்பளத்திற்க்கு / வருமானத்திற்க்கு செய்யும் வேலையில் காட்டும் முனைப்பை விட இதில் கண்டிப்பாக அதிக ஈடுபாடு இருக்கத்தானே செய்யும்?

      Delete
  52. சார் அந்த +2 இன் மார்ச் என்னது ?

    லயன் 30 கதம்பம் ஆக இருக்க பிராத்திக்கிறேன்..
    மில்லியன் ஹிட்ஸ் ஸ்பெசல் டெக்ஸ் ஸ்பெசல் ஆக இணைய நண்பர்களுக்காக

    ReplyDelete
    Replies
    1. ஏங்க +2 exam march ல வருவதை விஜயன் சார் , கிண்டலாக +6 உடன் கோர்த்து விட்டா , நீங்களும் அதை ஒரு கேள்வியா கேட்டுகிட்டு !!!!!!! நீங்களாவது பரவாயில்லை மேல steelclaw பதிலை படித்து என் நண்பர் பாயை பிரான்டிக்கொண்டு இருக்கிறார் !:)

      Delete
    2. ச்ச பப்பி ஷேம் ஆகிடுச்சே...

      Delete
    3. ஹ ஹ ஹா ....ஷல்லும் நீங்களும் நான் ஏமாந்து விட்டதாய் நினைத்து கொண்டீர்களா

      Delete
  53. லயன் & முத்து காமிக்ஸ் ஆசிரியர் திரு.விஜயன் அவர்களுக்கும் மற்றும் காமிக்ஸ் வாசகர்கள் அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள், சன் நியுஸ் பேட்டி அருமை (ஆசிரியர் சற்றே பதட்டத்துடன் காணப்படுகிறார். பரிட்சைக்கு படிக்கவில்லை போலும்).

    ReplyDelete
    Replies
    1. salemkelamaran@gmail.com : Question paper எங்கே தேடியும் கிடைக்கவில்லை !

      Delete
  54. வணக்கம் நண்பர்கள் நலம் அறிய ஆவல் ஆசிரியர் திரு.விஜயன் அவர்களுக்கும் மற்றும் காமிக்ஸ் வாசகர்கள் அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்சுவையான நிகழ்வுகள். சூப்பர் சூப்பர்!
    இன்னும்... இன்னும்... தாகம்... தாகம்

    பழனி

    ReplyDelete
    Replies
    1. palanivel arumugam : ஜூனியர் மாடஸ்டி நலமா ?

      Delete
  55. இன்று fb இல் ஒரு போஸ்ட்இல் இந்த ப்ளாக் பற்றி சில கருத்துகள் வைக்கப்பட்டிருந்தது கண்டு கொஞ்சம் வருத்தம்

    1. இந்த ப்ளாக்இல் கமெண்ட் இடுவோர் எல்லாம் ஜால்ரா
    2. ஆசிரியர் இங்கு பதிவிடுவது ஹிட்ஸ்/கமெண்ட்ஸ் க்காக மட்டுமே
    3. வாசகர்களுக்கு வைக்கப்படும் போட்டிகள் வெறும் கண்துடைப்பு நாடகம் ஹிட்ஸ் / கமெண்ட்ஸ் அதிகரிக்க மட்டும்
    4. இந்த ப்ளாக்இல் கமெண்ட் இடுவோருக்கு எல்லாம் ரசனையே கிடையாது (cinema theaterin front benchers மாதிரி )
    5. ஆசிரியர் எப்போதும் தான் செய்வது தான் கரெக்ட் என்று நினைப்பவர்

    இப்படியெல்லாம் கூட்டமாய் சேர்ந்து அடுத்தவரை கலாய்ப்பது (அவர்கள் அகராதியில் கும்மி அடிப்பது ) அவர்களா இங்கு உள்ளவர்களா ?

    இங்கும் அங்குமாக உலவிகொண்டிருகும் ghost commentators,

    1. நாங்கள் ஒரு விஷயம் பிடித்திருப்பதாக சொல்வது எங்கள் ரசனையின்னாலே ஒழிய ஆசிரியரின் பாதத்தை முத்தம்மிடும் செயல் அல்ல..
    2. ஒரு 10 likes / 5 comments க்கே சிலருக்கு நாக்கு தள்ளும் பொது 1மில்லியன் ஹிட்ஸ் அள்ளிய ப்ளாக்கை onfire இல் வைத்திருக்கும் திறமை தான் அதுவே அன்றி வேறென்ன .. போக ஒரு 10 likes / 5 comments க்கேசிலர் உச்சி குளிரும் போது இப்படி ஒரு ப்ளாக்இன் அட்மின் கண்டிப்பாக பெருமை பட்டுக்கொள்ளலாம்
    3. போட்டிகளில் கலந்து கொள்ளாமலே இப்படி கமெண்ட் போடுவபர்களே போட்டியில் கலந்து கொண்ட நாங்களே அப்படி நினைப்பதில்லை , தவிர போட்டியில் கலந்து கொண்ட எங்களுக்கு தெரியும் தீர்புகளின் நீதி.
    4. இருப்பதிலே ஆகப் பெரிய முட்டாள் தனம் இதுதான், googleம் / விக்கிபீடியாவும் இருந்தால் எல்லோரும் அறிவுஜீவிகள் தான், ஒலக காமிக்ஸ், ஓலக சினிமா படிப்பவர்/பார்ப்பவர் தான் அறிவு ஜீவி என்று நினைப்பவர்களே ரசனைகளில் ஏற்ற தாழ்வு பார்ப்பது என்பது ஒருகாலத்தில் இருந்த ஜாதி வெறியின் / ஆதிக்க வெறியின் / இனவெறியின் மிச்சம் தான் do some soul searching bro (front பெஞ்சில் அமர்ந்து rape சீன்க்கு விசில் அடிக்கும் சல்லிப்பயல்களுக்கு கமல் படம் புரியாது என்ற உங்கள் எண்ணம் இருந்த காலம் எப்போதோ மலையேறிவிட்டது) நீங்கள் காமிக்ஸ் அறிவு களஞ்சியம் என்றால் மற்றொருவர் Dostoevsky யின் விசிறியாக இருக்க கூடும், உங்களிடம் 1000 உலக காமிக்ஸ் கலக்சன் இருந்தால் என்னிடம் Quentin Tarantino, Martin Scorsese, Masud Kimiai கலக்சன் இருக்ககூடும். அதேபோல் பேரரசு படத்தை ரசிப்பவன்/ராஜேஷ்குமார் படிப்பவன் தாழ்ந்தவன் அல்ல, செல்வராகவன் படத்தை ரசிப்பவன் / அசோகமித்ரன் படிப்பவன் அறிவுஜீவி or உயர்ந்தவன் அல்ல.
    5. அப்பறம் தன் நேரத்தையும் பணத்தையும் செலவு செய்து மிக குறைந்த லாபத்தில் / நஷ்டத்தில் புத்தகம் வெளியிடும் ஆசிரியருக்கு தனது மார்க்கெட் , வாசகர் வரவேற்பு, சேல் டார்கெட் எல்லாவற்றையும் கருத்தில் கொண்டு வெளியீட்டை, கதையை, அதன் contentயை, தரத்தை, லோகோவை, சென்சார் செய்யபடும் விதத்தை , தலைப்பு வைக்க, அட்டைபடத்தின் டிசைன் செய்ய, முடிவு எடுக்க எல்லா உரிமையும் உள்ளது, உங்கள் கருத்தும் ஒரு வாசகரின் வாய்ஸ் ஆக கருதப்பட்டு. உங்கள் கருத்து ஏற்கப்படவில்லை என்று கோவித்துக்கொண்டு போய்விட்டால் இங்கு நஷ்டம் யாருக்கும் இல்லை மீண்டும் ஒருமுறை வேறொரு விசயத்திற்கு உங்கள் கருத்து அறியபடாமல் போவது தவிர... (nokia-microsoft mergerஇல் ஷேர் ஹோல்டர் கருத்தரியும் கூடத்த்தில் ஒருவர் nokia-apple merger ஐ suggest செய்தாராம், அந்த கருத்தும் பரிகாசம் செய்யப்படாமல் voting இல் வந்து reject ஆகியது, அதற்கு அவர் கோவபட்டு அவரிடம் இருந்த ஷேர்சை சல்லிசக விற்று விட்டு வெளிநடப்பு செய்துவிட்டார். அடுத்த நாளே Nokia Normandy லீக் ஆகி shares டபுள் ஆனது வேற விஷயம்.) Sum (Some) of the parts is never bigger than the whole..lol

    இந்த கம்மெண்டை குறித்து பரிகாசங்களும் அங்கே அரங்கேறும் என்பதும் யான் அறிததே என்னினும் சொல்ல நினைத்தது இதுவே தங்கள் குறித்த எம் எண்ணங்கள்

    ReplyDelete
    Replies
    1. அவர்கள் கூறுவதை கேட்டால் சரி என நினைத்த சிலரே அவர்கள், விட்டுத்தள்ளுங்கள் ஒருவர் எழுதுவதை வைத்தே அவர் மன நிலை அறிய முடியும் ! காமிக்சை படித்த நமக்கு எல்லாமே உண்டு, துப்பறியும் திறன், வாழ்கை நியதி, போராடும் குணம், பிறர் மனம் நோக கூடாதெனும் எண்ணம் , போர்க்குணம் கூட ..... ஆகவே அவர்களை மன்னித்து விடுங்கள் !

      Delete
    2. சற்று முன்பு fbயில் ஒரு முன்னால் சந்தாதாரர் போட்டிருந்த கமெண்ட்டைப் படிச்சுட்டு வெறுப்பிலும் கடுப்பிலும் உட்கார்ந்திருந்தேன். அந்த நண்பருக்கு சுடச்சுட ஒரு மெசைஜ் அனுப்பிவிட்டு பார்த்தால் சூப்பர் விஜயின் இந்தக் கமெண்ட்; எனக்கு ஆறுதல் சொல்வதுபோல!

      ஒரு ஐந்து/ஆறு லைக்ஸ் வாங்கிடும் பொருட்டு உங்களை நீங்களே அசிங்கப்படுத்திக் கொள்ளவேண்டுமா நண்பர்களே? :(

      Delete
    3. Criticism ஒரு வரம்பைத்தாண்டி செய்யப்படுவதும் நன்மைக்கே - ஏனெனில், அது தானாகவே தன்னுடைய போலித்தன்மையை வெளிக்காட்டிவிடும். No worries.

      Delete
    4. ஆ ....FACEBOOK-ஆ ....அந்த புக்கு எங்க கிடைக்கும்.யாராவது வாங்கி தாங்களேன்:-)

      Delete
    5. //Criticism ஒரு வரம்பைத்தாண்டி செய்யப்படுவதும் நன்மைக்கே - ஏனெனில், அது தானாகவே தன்னுடைய போலித்தன்மையை வெளிக்காட்டிவிடும். No worries.//
      உண்மை நண்பரே அதுவும் நடந்திருக்கிறது ஆங்காங்கே !

      Delete
    6. சூப்பர் விஜய் : உள்ளத்து உணர்வுகளை அழகாய், நயமாய் வெளிப்படுத்துவது ஒரு அரிய கலை ! அதனில் உங்களுக்குள்ள ஆற்றலை இப்பின்னூட்டம் பிரமாதமாய் வெளிப்படுத்தியுள்ளது ! ரசனை சார்ந்த விஷயங்களில் - ஒத்த கருத்து இல்லா வேளைகளில் இது போன்ற சங்கடங்கள் எழுவது சகஜமாகிப் போகிறது !

      அதே FB -ல் நமது நிறைகளை highlight செய்யும் தோழர்களும் உள்ளனர் எனும் போது - நெடும் பயணத்தில் அந்த positives களை மாத்திரமே எடுத்துக் கொண்டு நம் வழியில் கவனம் கொள்வோமே !

      தவிர, நையாண்டி செய்வோரால் நமக்கொரு நல்ல காரியம் அரங்கேறி வருவதையும் கூட கருத்தில் கொள்ள வேண்டுமே ! நாள்தோறும் நீங்கள் இங்கு வருகை தருகிறீர்களோ - இல்லையோ, இங்குள்ள நடப்புகளைப் படித்தறியும் பொருட்டு பதியும் அவர்களது ஒவ்வொரு கால்சுவடுகளும் நம்மை அந்த "MILLION HITS SPECIAL" க்கு நெருக்கமாய்க் கொண்டு செல்கிறதல்லவா ?

      Delete
    7. Ramesh Kumar : //Criticism ஒரு வரம்பைத்தாண்டி செய்யப்படுவதும் நன்மைக்கே - ஏனெனில், அது தானாகவே தன்னுடைய போலித்தன்மையை வெளிக்காட்டிவிடும்//

      Short and sweet !

      Delete
    8. எனக்கு தெரிந்து "Notify me" என்ற ஆப்ஷன் ரிமுவ் செய்தால் நாம் இன்நேரம் million hits அடித்து இருப்போம் என்பது என் கருத்து ஒரு குண்டு பூக் கிடைத்திருக்கும் : ஹ்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்!

      Delete
  56. Dear Sir,

    I visited the chennai book fair your stall on 11th of Jan 2014, I purchased the following books:

    1.Tiger Special I
    2.Nilaveliyil oru Narabali
    3.Captain Prince Special I
    4. Ratha Thadam
    5. LARGO ACTION SPECIAL



    Other than these I need all the books that are available , Also I need the cost , delivery time also (I am in Coimbatore.) Kindly let me know if there is any discount also. Your early positive reply in this regard is highly appreciated

    ReplyDelete
    Replies
    1. Hi dear friend Ragul Ramesh,
      Please directly contact lion office for your req details. I't may help you to find the detail. Contact details here: http://goo.gl/oI2kh2

      Delete
  57. 'சன் நியூஸ்' சேனலில் எடிட்டர் அளித்திருந்த பேட்டியை சற்று முன்புதான் யூட்யூப்பில் கண்டேன் (நன்றி விஸ்வா). கேட்கப்பட்ட கேள்விகளுக்கு எடிட்டர் அளித்திருந்த (வழக்கத்தைவிட) நிதானமான பதில்கள் என்னை ஆச்சர்யப்படுத்தின! என்ன கேள்வி கேட்டாலும் சுவையாய் பதிலளிக்க எதிரில் ஒருவர் அமர்ந்திருக்கிறார் எனும்போது, கேட்கப்படும் கேள்விகளைப் பொறுத்துத்தானே பதில்களும் சுவாரயஸ்யமாய் அமையும்?
    எனவே, ஏற்கனவே நமது காமிக்ஸ்களைப் பற்றி நன்கு தெரிந்த ஒருவர் கேள்விகளைத் தொடுத்திருந்தால் நிகழ்ச்சி இன்னும் சிறப்பானதாய் அமைந்திருக்கும் என்பது என் கருத்து.

    இந்தப் பேட்டியுடன் ஒப்பிட்டால் தினகரன் 'வசந்தம்' இதழில் வெளியாகியிருந்த கட்டுரையே நம் காமிக்ஸ் பற்றிய பொதுவான கருத்துக்கள்  பெருவாரியான மக்களைச் சென்றடைய பெரும் பங்கு வகித்திருக்கும் என்பது(ம்) என் கருத்து.

    அதனால் என்ன, பயணத் தொலைவு இன்னும் நீண்டுகிடக்கிறதே... பார்த்துக்கலாம்!

    ReplyDelete
    Replies
    1. சிறு குறைகள் இருப்பினும், இப்படிப்பட்ட நிகழ்ச்சிகள் அறங்கேறுவது நமக்கெல்லாம் மட்டற்ற மகிழ்ச்சியே என்பதில் மாற்று கருத்துக்கு இடமில்லை! :)

      Delete
    2. @edi & Nanbargalae Dinakarn idhazil vandha katturai nan padikkvillai aaanaal adutha vilambaram viraivil anda idhazilaeyae vandhal katturaiyai padithavargalukku nam sandha vivaram poi serum endru ninaikkiraen


      30th year special - dayavu senju only kadhamba special only. tex adharavaalargal kai kudukkavum, tex regular thani idhazhukku nan kai kudukkiraen

      Delete
    3. // adutha vilambaram viraivil anda idhazilaeyae vandhal katturaiyai padithavargalukku nam sandha vivaram poi serum endru ninaikkiraen//
      +௧

      Delete
    4. Erode VIJAY : பூனையார் காசி-ராமேஸ்வரம் எனக் கிளம்பியாச்சா ? பூனைக்கண் கார்சன் தில்லாய் நிற்கிறாரே அந்த இடத்தினில் ?

      Delete
    5. சத்யாவுக்கு கால்வின் பிடிக்கும் காமிக்ஸ்ஸும் பிடிக்கும் : தினகரன் நாளிதழில் ஒரு கால் பக்க வண்ண விளம்பரத்திற்கு கட்டணம் பத்து லட்சத்திற்கும் மேல் எனும் போது, நமக்கு 5 முழு வண்ணப் பக்கங்கள் பிரத்யேகமாய்க் கிட்டி இருப்பதன் விலைமதிப்பற்ற தன்மையை முழுமையாய் உணர்ந்திட முடியும் ! ினகரன் நிறுவனத்திற்கு நமது நன்றிகள் என்றென்றும் !!

      Delete
  58. விச்சு கிச்சுவுக்கு ஒரு பெரிய ஓ ஓ ஓ ஓ ஓ

    left panel down panel then top right panel apdingra sequencing dan chinna issue

    ReplyDelete
  59. //நண்பர் விஸ்வா SMS தட்டி விட,//

    To: Edit,

    அவரது தகவல் கிடைத்தே நானும் உங்கள் பேட்டியைக் காணும் வாய்ப்புப் பெற்றேன். நண்பர் விஸ்வாவுக்கு உடனேயே நன்றி தெரிவித்து பதில் அனுப்பிவிட்டாலும், இங்கு மீண்டும் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. தேவையற்ற நன்றிகளை சொல்லி என்னை சங்கோஜப்படுத்தாதீர்கள் நண்பர்களே.

      எனக்கு தெரிந்த தகவலை நல்ல எண்ணம் கொண்ட நண்பர்களிடம் பரிமாறினேன், அவ்வளவுதானே?

      யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்பதுதானே காமிக்ஸ் உலக கோட்பாடு?

      Delete
  60. இந்தியக்கௌபாயான(?!!) ஸ்ரீ கிருஷ்ணர் ஆரம்பித்து வைத்த மாட்டுப்பொங்கலை
    கொண்டாடும் அனைவருக்கும்
    என் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. @ அமர்நாத்

      //இந்திய கெள-பாய் //

      அட! ஆமாம்ல?!

      Delete
  61. டியர் எடிட்டர் ,

    சன் நியூஸ் தொலைகாட்சியில் ஒளிபரப்பான தங்களின் பேட்டி இனை காணும் வாய்ப்பு கிட்டியது . தங்களின் பதில்கள் அருமை . ஆயினும் ஒரே கேள்வியினை , ஆரம்பம் முதலே அதற்கான விரிவான, மிகச் சரியான , விளக்கங்களை தாங்கள் வழங்கியும் நிருபர் திருப்பி திருப்பி கேட்டது ; இது அவரின் முதல் பேட்டி அனுபவம் என்பதினை கூறாமல் கூறியது. இருப்பினும் இது போன்ற வாய்ப்பினை வழங்கிய சன் நியூஸ் நிறுவனத்துக்கு எமது மனமார்ந்த நன்றிகள் .இனி வரும் காலத்தில் எமது காமிக்ஸ் இன் பெருமையினை அடுத்த தளத்துக்கு கொண்டு செல்ல இது உதவும் என்பது திண்ணம் .

    ReplyDelete
    Replies
    1. Thiruchelvam Prapananth : பேட்டி கண்ட அந்தப் பெண் காமிக்ஸ் எனும் ரசனைக்கு புதியவர் என்பதும் நாம் நினைவில் கொள்ள வேண்டுமே ! அப்படிப் பார்க்கையில் நல்ல முயற்சி தானே !

      Delete
  62. எடிட்டர் சார்,

    'சன்ஷைன் கிராபிக் நாவல்'இன் கடைசி நேர அதிரடி லோகோ மாற்றத்தின் பின்னணியை நீங்கள் இங்கே கோடிட்டுக் காட்டினால் நண்பர்களது குழப்பங்கள் விலகிடுமே? ரொம்ப சுமாராகவே லோகோ அமைந்திருப்பதாகவும் பரவலான கருத்துக்கள் உள்ளதும் நீங்கள் அறியாததல்லவே?

    பேசவேண்டிய நேரத்தில் மெளனமாய் இருப்பதும் தேவையில்லாத யூகங்களுக்கு வழிவகுக்குமே! (இதற்கான விளக்கம் நண்பர் ஒருவரால் சற்றுமுன்புதான் வேறொரு தளத்தில் தரப்பட்டுள்ளது என்றாலும், உங்கள் பதில் பரவலாக எல்லோரையும் சென்றடையுமில்லையா?)

    ReplyDelete
    Replies
    1. Erode VIJAY : தீர்மானங்களின் பின்னணியில் எவரையும் நோகச் செய்யா காரணங்கள் இருந்திடும் போது அவற்றை நானாகவே வெளிச்சொல்லி இருப்பேனே ! இந்த வரிகளுக்கு மத்தியில் படித்துப் புரிந்து கொள்ளுங்களேன் !

      Delete
    2. எவரையும் நோகச் செய்யா உங்கள் நோக்கம் வாழ்க சார்! நீங்கள் எடுக்கும் முடிவு எதுவாயினும் அது நன்மைக்கே என்ற பூரண நம்பிக்கை உண்டு உங்களிடம், என்றென்றும்!

      Delete
    3. எனக்கும் அந்த நம்பிக்கை உண்டு ..

      "சிங்கத்தின் சிறு வயதில் " தொகுப்பின் முடிவும் நல்ல முடிவாக கொண்டு வந்து எங்களை மகிழ்ச்சி கடலில் திளைக்க வைப்ப்பீர்கள் என்ற நம்பிக்கையும் எனக்கு உண்டு .

      Delete
    4. // எனக்கும் அந்த நம்பிக்கை உண்டு ..
      "சிங்கத்தின் சிறு வயதில் " தொகுப்பின் முடிவும் நல்ல முடிவாக கொண்டு வந்து எங்களை மகிழ்ச்சி கடலில் திளைக்க வைப்ப்பீர்கள் என்ற நம்பிக்கையும் எனக்கு உண்டு .//+1.

      அதே தான் தலைவரே! எப்படியாவது ஒரு பதிலை வாங்கி விடுங்கள்!

      சிங்கத்தின் சிறுவயதில்-தொகுப்பு தனி புத்தகத்துக்காக காத்திருக்கும் எனதருமை நண்பர்களின் இலவம் பஞ்சு போன்ற இதயத்தையும் , இனிய கனவுகளையும் காற்றில் பறக்க விட்டுவிடாதீர்கள், விஜயன் சார்!

      Delete
    5. " தீர்மானங்களின் பின்னணியில் எவரையும் நோகச் செய்யா காரணங்கள் இருந்திடும் போது அவற்றை நானாகவே வெளிச்சொல்லி இருப்பேனே ! இந்த வரிகளுக்கு மத்தியில் படித்துப் புரிந்து கொள்ளுங்களேன் ! "

      indha steel bodiyaarukku PURINJIDUCHI:-)

      Delete
    6. விஜயன் சார், சன் சைன் கிராபிக் நாவலின் லோகோவை முடிவு செய்யும் முழு உரிமை உங்களுடையது ஆனால்...

      இதுவரை பல போட்டிகள் நடைபெற்றது, போட்டியின் முடிவுகளை அனைவரும் ஒரு மனதுடன் ஏற்று கொண்டோம்.

      இந்த முறை லோகோ போட்டி என அறிவித்து அனைவரும் தங்களின் சிறந்த படைப்புகளை வெளிப்படுத்தி உள்ளனர்! இதில் பல லோகோகள் பலரின் பாராட்டை பெற்றன, இதில் சிலவற்றை நீங்களே பாராட்டிநீர்கள்!

      இப்போது இவைகளை தேர்வு செய்யாதமைக்கு "யாருடைய மனதையும் நோக செய்ய வேண்டாம்" என கூறுவது ஏற்று கொள்ளவதாக இல்லை!

      இது போன்ற உங்களது சில முடிவுகள் எங்கள் மனதில் முரண்பட்ட கருத்துக்களை உண்டாக்கும் என நீங்கள் அறிவீர்களா? இது போன்ற நிகழ்வுகள் இனியும் இங்கு வேண்டாம்.

      Delete
    7. // இந்த முறை லோகோ போட்டி என அறிவித்து... //

      சன்ஷைனின் லோகோ டிசைன் ஒரு போட்டியாக அறிவிக்கப்படவில்லை. அது சம்பந்தமான முதல் Blog post-ஐப் பார்த்தீர்களென்றால் நமது Designer நண்பர்களிடம் வைக்கப்பட்ட casual request மட்டுமே என்பது புரியும். அதேபோல நான் உட்பட பல நண்பர்களும் ஒரு போட்டி என்ற பார்வையில் Design-களை செய்து அனுப்பவில்லை என்பதும் தெரியும். நமது மற்ற போட்டிகளுக்கும் இதற்கும் உள்ள வித்தியாசம், அனுப்பப்பட்டவை Lift செய்துகொள்ள அனுப்பப்பட்ட idea-க்கள்தானே தவிர Finalized design அல்ல.வருத்தப்படுவதற்கும் இதில் வாய்ப்பு இல்லை.

      Delete
  63. ஏன் என்று தெரியவில்லை, இந்த பதிவை படித்ததும் கண்ணீர் வந்து விட்டது. ஊருக்கு சென்றதால் , இவ்வாரம் வருகிறேன் .

    ReplyDelete
  64. "காமிக்ஸ் உண்டு ..எதிரி இல்லை "

    barani with comics.blogspot.com

    ReplyDelete
    Replies
    1. போராட்டக்குழு தலைவரின் ப்ளாக் லின்க்: காமிக்ஸ் உண்டு எதிரி இல்லை

      Delete
  65. Vijayan Sir, Will you be available on this saturday / sunday on stall?.

    ReplyDelete
  66. புத்தகத் திருவிழாவில், விற்பனையில் தொடர்ந்து முதலிடம் பிடித்துவருகிறாராம் அந்த இத்தாலிய 'தல' கெளபாய்! அவரது புத்தகங்கள் எல்லாமே நல்ல விற்பனை என்றாலும், குறிப்பாக 'தல'யின் தீபாவளி ஸ்பெஷலே தடபுடலாக காலியாகி வருகிறதாம்!

    விற்பனையில் அடுத்த இடத்தைப் பிடித்திருப்பது 'கேப்டன் புலி' என்று நீங்கள் நினைத்தால்... ஐயோ, பாவம்! கிட்டத்தட்ட 'தல'யின் விற்பனை எண்ணிக்கையைத் தொட்டுவிடும் தூரத்திலிருப்பவர் முளைத்து மூன்று இலைகூட விடாத 'சுட்டிபுயல்'லாம்!!

    போஸ்டரில் கூட இடம் கிடைக்காததால் சிங்கமுத்து வாத்தியாரின் மேல் ஏகக் கடுப்பில் இருக்கிறாராம், விரைவில் VRS வாங்க இருக்கும் கேப்டன் புலிப்பாண்டி! அவர் முக்கி முக்கி 'சீற்றம்' காட்டியும் சீண்ட ஆளின்றிப் போனதால், போஸ்டரில் புன்னகை செய்திடும் 'தல'யிடம் இப்போது புகைச்சல் காட்டிவருகிறாராம்!

    அடுத்த 'தை' பிறக்கும்போதாவது ('பளபளக்கும் சாவு' வெளியீட்டால்) புலிப்பாண்டிக்கு ஒரு வழி பிறந்தால் சரிதான் என்று அவர் ரசிகக் கண்மணிகள் கவலை முகம் காட்டுகிறார்களாம்!

    ReplyDelete
    Replies
    1. கவனிக்கவும்: டைகர் கதையையும் 100 ரூபாய்க்கு 460+ பக்கங்களில் B&Wல் வெளியிட்டால் அதுவும் இதேபோல விற்கும் (அ) விற்கக்கூடும். Since the buyers are probably new for all our books, the deciding factor is not necessarily the hero or inner parts of story but the size, price and format!

      டெக்ஸ் வில்லரின் ஒரேவொரு சிறிய கதையை முழுவண்ணத்தில் "வேங்கையின் சீற்றம்" Format-ல் 50 ரூபாய்க்கு 54 பக்கத்தில் வெளியிடும்பட்சத்தில் உண்மை நிலவரம் தெரியும்.

      அதேநேரம் தொடர்ந்து பல வெளியீடுகள் தீபாவளி ஸ்பெஷல் Format-ல் வெளிவரும் பட்சத்தில் டெக்ஸ் கதையாக இருந்தாலும் எடுபடுமா என்பது சந்தேகமே. தற்போதைய நமது Show case-ல் இதுதான் குண்டு என்பதால் இது கூடுதல் வரவேற்பைப்பெறுகிறதோ என்னவோ.

      Delete
    2. டெக்ஸ் விற்பனைக்கு முக்கிய காரணம் அசத்தலான வண்ணத்துடன் கூடிய கண்ணை கவரும் அட்டை படம் ,,, நூறு ரூபாய்க்கு மேல் தரம் , குண்டு .....இதெல்லாம் தாண்டி டெக்ஸ்

      Delete
    3. // டெக்ஸ் விற்பனைக்கு முக்கிய காரணம் அசத்தலான வண்ணத்துடன் கூடிய கண்ணை கவரும் அட்டை படம் //

      உண்மை. அதேபோல டைகரின் முகம் close-up ல் பயங்கரமாக உள்ளதால் கதையின் Title-ஐக்கூட சிலர் "வில்லனின் சீற்றம்" எனப் படித்துவிட வாய்ப்புள்ளது :D

      Delete
    4. // கேப்டனுக்கு 'டெக்ஸாசின் Dulcolux'னு புதுசா ஒரு பெயர் //

      டெக்ஸ் வில்ல"னு"க்கும் ஒரு Close-up அட்டைப்படத்தைப் போட்டால், குழந்தைகளுக்கு அதீத ஜீரணமாகலாம் (கீழ்படி) அஜீரணமாகலாம் (நடுப்படி) வாந்தி கூட வரலாம் (மேற்படி ) :P

      Delete
    5. ஹா ஹா ஹா! அட்டகாசம் நாட்டாமை அவர்களே! :D

      Delete
  67. @Ramesh Kumar
    Fact, Fact, Fact, Fact (OKOK santhanam stylil)

    ReplyDelete
  68. நான் சுமார் 6 வருடங்களுக்கு முன்பாக மறுபடியும் காமிக்ஸ் படிக்க ஆரம்பித்தபோது சந்தித்த முதல் நபர் - திரு முருகன் அவர்களே. இவரது பெயரும் இனிஷியலும் அப்போது மிகவும் பிரபலம். ஒரு ஃபெப்ரவரி மாத கடைசி புதன் அன்று அவரது இல்லத்தில் சந்தித்தது இப்போதும் நினைவில் பசுமையாக இருக்கிறது.

    காமிக்ஸ் குறித்த விமர்சனங்களை தாண்டி இவர் ஒரு தீவிர வாசகர்.

    இன்று அண்ணனுக்கு பிறந்த நாள். அவரை வாழ்த்துவதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்.

    அவரது கடிதங்களோ, அல்லது பின்னூட்டங்களோ இல்லாமல் தமிழ் காமிக்ஸ் உலகம் வாடிக்கொண்டு இருக்கிறது.

    வாருங்கள் முருகன் சார், உங்களின் சேவை, தமிழ் காமிக்ஸ் உலகிற்க்கு தேவை.

    இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் R.T.Murugan Sir.

    இந்த ஆண்டு எல்லா வளமும் பெற்று சிறப்பாக அமைய வேண்டுகிறேன்.

    இந்த நன்னாளில் ...........................

    உதிப்பவை எல்லாம் உன்னதம் ஆகட்டும்,

    நீங்கள் விரும்பியது எல்லாம் உங்கள் வசம் ஆகட்டும்.

    எல்லா வளமும் பெற்று இந்த ஆண்டு சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்.

    என்றும் போல இன்றும் உங்கள் எண்ணங்கள் சிறக்கட்டும்.


    Many Many Happy Returns of the Day.

    May God give everything you deserve and many more.

    Have a Fantastic year Ahead.

    ReplyDelete
    Replies
    1. அவருக்கு என்னுடைய வாழ்த்துக்களும்!

      Delete
    2. Dear Murugan

      Many more happy returns of the day.

      I still remember when we met 15 years before.. We become friends because of comics. Still continuing...

      Delete
    3. இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் R.T.Murugan Sir.

      Delete
  69. நமது லயன் முத்து காமிக்ஸ் நூலகம் குறித்த தகவல்கள் அடுத்த பதிவினில் இடம்பெறுமா,விஜயன் சார்?

    ReplyDelete
  70. நண்பர் ரமேஷ் அவர்களுக்கு .....

    எங்கள் தலைவர் "டெக்ஸ் "அவர்களின் புத்தகத்திற்கு அட்டைப்படத்தை வெறும் "வெள்ளையாக " வைத்து பெரிய எழுத்தில் "டெக்ஸ் காமிக்ஸ் " என்று வைத்தாலும் விற்பனை இதே அளவில் தான் இருக்கும் .எத்துனை முறை வந்தாலும் ..,எத்துனை பக்கத்தில் வந்தாலும் ...ஆனால் உங்கள் "டைகரின் " கதை டெக்ஸ் இன் தீபாவளி மலர் போல வந்தாலும் தெரியாமல் சிலர் ஒருமுறை வாங்கினாலும் மறு முறை வாங்க மாட்டார்கள் என்பதை பணிவுடன் கூறி கொள்கிறேன் .
    காரணம் ஒன்று : முதன் முறை "டைகர் "கதை படிபவர்கள் அது நாயகனின் கதையா ...இல்லை வில்லனின் கதையோ என குழம்பி விடுவார்கள் .

    காரணம் 2 : எவ்வளவு பக்கத்தில் வந்தாலும் "டைகரின் " கதையை படிக்க தொடங்கியவர் அதன் "முடிவை " தெரிந்து கொள்ள அவர் தம் "வாரிசு " தான் வர வேண்டும்.

    உடனே "மின்னும் மரணம் " என வராதீர்கள்.எத்துனை காலத்திற்கு அதை மட்டுமே சொல்லி கொண்டு இருப்பிர்கள்.ரஜினி ஒரு "பாட்ஷா " கொடுத்தால் மட்டும் இன்னும் சூப்பர் ஸ்டார் அக இருக்க முடியாது .தொடர்ந்து படையப்பா..,சந்திர முகி .,சிவாஜி என ஹிட் கொடுப்பதால் தான் சூப்பர் ஸ்டார் .அவர் படங்கள் விமர்சனத்தை சந்திக்கலாம் .ஆனால் வசூலில் எப்பொழுதும் முதல் இடம் தான் .அது போல தான் எங்கள் "டெக்ஸ்".

    30வது ஆண்டு மலர் 500 ரூபாயில் "டெக்ஸ் "மட்டுமே வந்தாலுமே விற்பனையில் அது தான் முதல் இடம் .புரிந்து கொள்ளுங்கள் .

    டெக்ஸ் ஆ .....

    கொக்காஆ ......

    உடல் மண்ணுக்கு ....கண்ணும் வாயும் டெக்ஸ் வில்லருக்கு.....

    ReplyDelete
    Replies
    1. // நண்பர் ரமேஷ் அவர்களுக்கு //

      என் பெயரை சரியாகச்சொல்லும் இந்த Approach எனக்குப் பிடிச்சிருக்கு... அதனால டைகரைப்பத்தி நீங்க எது சொன்னாலும் எனக்குப் பரவாயில்லை! :D

      Delete
    2. @ பரணிதரன்

      வெறும் வெள்ளைப் பேப்பரில் 'டெக்ஸ் காமிக்ஸ்'னு இருந்தாலும் மொத்த புத்தகமும் தீர்ந்து போகும்னு சொன்னீங்க பாருங்க... அப்படியே சிலிர்த்துப் போய்ட்டேன் தலைவர் அவர்களே! இதுக்காகவே உங்களுக்கு ஒரு பாராட்டுவிழா நடத்தினாலும் தகும்!
      'சூட்டு மாமோய்' இப்ப 'சூடுபட்ட மாமோய்'
      'நாட்டாமை' இப்ப 'நடு ஆற்றில் விடப்பட்ட ஆமை' :D

      Delete
    3. அடப்பாவமே, எல்லா பெயர்களுக்குள்ளும் ஒரு ரிப்பேரும் புதைஞ்சிருக்கு! :D

      Delete
    4. ஈரோடு விஜய் : .... :-)

      Delete
    5. சிறு திருத்தம் செயலாளர் அவர்களே ...

      நான் சொன்னது புத்தகம் முழுவதும் இல்லை ...
      அட்டைபடத்தில் மட்டும் "வெள்ளையாக "....:-)

      Delete
  71. நான் முத்து காமிக்ஸ் ஆரம்பித்தது எனக்கு எழுத படிக்க தெரிந்த நாள் முதல். முதல் காமிக்ஸ் பெயர் மறந்துவிட்டது. எனக்கு நினைவு இருப்பது மாயாவி இன் 'தலையில்லா கொலையாளி'. எனது நன்றிகள் என்றும்.

    Very difficult to type in tamil. Luckily quilpad helped me. My luck my neighbor during 1978 is a hard core comics reader. That time I was 4 years old. My neighbor was just married. his wife is so fond of me and whenever I visit their house she used give me the all comics books to read. I used to read one or two from the whole book lot. After some time We moved to some other place. So always I am longing about the books I seen in their house and scolding myself for not utilising the opportunity to read all books. Why I dont know. Today I want to share this with you all. That time I lived in Pillur dam, Coimbatore district. It is EB camp. If anyone from there welcome to contact me.

    ReplyDelete
  72. small correction. The day I entered school at 5 years, when I learned reading immediately I started experimenting with comics only. The beauty is my neighbor also trained his child for reading using comics only. Still I remember his son keep on reading one same comics again and again and proudly explaining to us.

    ReplyDelete
    Replies
    1. // Still I remember his son keep on reading one same comics again and again and proudly explaining to us. //

      I used to do the same at the age of 8 or 9. Couldn't remember the story but the illustrations resides permanently on memory - still searching the book!

      Delete