Powered By Blogger

Sunday, January 19, 2014

சிந்தனைகளுக்கும் சிறகுண்டு...!

நண்பர்களே,

வணக்கம். பொதுவாக ஒவ்வொரு பதிவின் முன்னரும் ஏதாவதொரு இதழின் முன்னோட்டமோ ; விமர்சனப் பார்வையோ ; அவ்வேளைகளில் அவசியமான பகிர்தல்களோ என் மனதில் மேலோட்டமாய் ஓடுவதுண்டு ! டைப் செய்யத் துவங்கும் போது on the run அவற்றை மெருகூட்டி ஒரு பதிவை உருவகப்படுத்துவது பழகிப் போனதொரு செயல்முறை. ஆனால் முதல்முறையாக பெரிதாய் எந்தவொரு விஷயமுமின்றி, ஒரு மெல்லிய மௌன மகிழ்ச்சியோடு பேப்பரையும், பேனாவையும் எடுத்துக் கொண்டு அமர்ந்த போது எழுத்துக்கள் தன்னிச்சையாய் தத்தம் இடத்தில் வந்து விழுந்தன ! 

ஒவ்வொரு ஆண்டையும் இப்போதெல்லாம் நமக்குத் துவக்கி வைப்பது சென்னைப் புத்தக விழா தான் என்றாகிப் போய் விட்ட நிலையில் - பெரிதாய் எதிர்பார்ப்புகளின்றி, கைவசமிருந்த சுருக்கமான titles களோடு இந்தாண்டையும் அணுகினோம்.  சென்ற வருட (சென்னை) விற்பனையின் 50% NBS சேர்த்த புண்ணியம் என்பதால் - அது போன்ற முயற்சி இம்முறை இல்லையெனும் போது விற்பனை இலக்குகளை உச்சாணியில் நிர்ணயிக்க நான் தயாராக இல்லை. ஆனால் ரூ.60 x 4 என ஜனவரி மாதத்துப் புது இதழ்கள் 'பளிச்' என அமைந்திருந்ததாலும் ; கைவசமிருந்த 2013-ன் வெளியீடுகள் சகலமும் ரூ.50 ; ரூ.100 ; ரூ.200 என்றிருந்ததாலும் - புத்தக விழாவின் இறுதிப் பகுதியினை அணுகும் இந்த வேளையினில் நமது விற்பனை விபரங்கள் உற்சாகம் தரும் வகையில் உள்ளன என்பது தான் pleasant surprise ! சென்றாண்டின் விற்பனையை எட்டிப் பிடிக்க வாய்ப்பில்லை என்றாலும், கைவசமிருக்கும் சொற்பமான பட்டாளத்தோடு இத்தனை தொலைவு முன்னேற முடிந்துள்ளதே பெரும் விஷயமாய்ப் பட்டது ! 12 நாள் விழாவின் முடிவினில் ரூ.4.25 இலட்ச விற்பனையை தொட்டுப் பிடிப்பதென்பது ஒரு அசகாய சூரத்தனமாகவோ ; பதிப்புலகைப் புரட்டிப் போடப் போகும் ஒரு பகீரத நிகழ்வாகவோ இருந்திடப் போவதில்லை தான் ; ஆனால் பள்ளிக்கூட ஆண்டுவிழாவில் மேடையேறி பாக்யராஜ் பாணியிலாவது நம் வீட்டுக் குழந்தை போடும் டான்சை நாம் ரசிப்பதில்லையா ? அதே சந்தோஷத்துடன் கிடைத்திருக்கும்  இந்த விற்பனை மேடையில் நமது சிக் பில்களும் ; லக்கி லூக்குகளும் ; டெக்ஸ் வில்லர்களும் ; டைகர்களும் ஆடும் நடனத்தை ரசித்திட முனைந்தேன் நான் ! 'அதில் சிக்கல்'......'இதில் சிரமம் !' என்ற பஞ்சப் பாட்டுக்களை அவ்வப்போது பகிர்ந்திடும் அதே வேகத்தோடு சின்னதான இச்சந்தோஷக் கணத்தையும் உங்களுடன் பகிர்ந்திடத் தோன்றியது ! 

இந்தாண்டின் (நம்) சென்னைப் புத்தக விழாவின் நாயகர்கள் இருவருமே மஞ்சள் சட்டைகளை நிரந்தரக் குத்தகைக்கு எடுத்த இரு தொப்பிவாலாக்கள் ! மின்னலாய்ச் சுடும் இரவுக்கழுகார் ஒரு பக்கமெனில் ; மின்னலை விட வேகமாய்ச் சுடும் ஒல்லிப்பிச்சான் லக்கி லூக் மறுபக்கம் ! நம் ஸ்டாலில் நான் இம்முறை செலவிட முடிந்த அவகாசம் அதிகமில்லையெனினும், தினமும் நம்மாட்கள் வழியாகக் கிடைக்கும் விற்பனை விபரங்களும், காலியாகும் புத்தகங்களின் பட்டியல் சொல்லும் சேதியும் ரொம்பவே ஸ்பஷ்டம் ! லக்கி லூக்கின் வண்ண இதழ்கள் இளம் வாசக / வாசகியரையும், டெக்ஸ் வில்லர் கிட்டத்தட்ட அனைவரையும் வசீகரித்து வைத்திருப்பது புரிகிறது ! அதிலும் சுட்டி லக்கியாருக்கு சிகப்புக் கம்பள வரவேற்பு ! இம்முறை விற்பனைக்குப் பெரும் துணை நின்றது நமக்குக் கிட்டிய வெகுஜன மீடியாவின் அன்புப் பார்வையும் என்று சொல்வது மிகை கிடையாது. 5 பக்க தினகரன் வசந்தம் இதழின் coverage ; சன் செய்திகள் தொலைக்காட்சியின் பேட்டி ; புதிய தலைமுறை தொலைக்காட்சியின் நேற்றைய செய்தித் தொகுப்பு என அரையணா செலவின்றி நம் பக்கமாய்த் திரும்பிய ஒளிவட்டம் அரூபமாய் நமக்கு ஆற்றியுள்ள சகாயம் விலைமதிப்பற்றது !

ஒவ்வொரு புத்தக விழாவின் நிறைவினிலும் 'அடுத்த வருஷம், பெரூசாய்ய்ய்ய் ஏதாச்சும் வெளியிட்டு தூள் கிளப்பிடணும் !' என்ற சிந்தனை எனக்குள் ஓடுவதுண்டு ! NBS முயற்சி நீங்கலாய்  இது வரை அந்த நினைப்புக்கு செயல்வடிவம் தர இயலவில்லை என்ற போதிலும், 2015-ஐ நோக்கியும், "மின்னும் மரணத்தை"ச் சுற்றியும் இப்போதே ஒரு உத்வேகம் உருவாகி வருவது நிஜம் ! "மி.ம." தவிர 2015 சென்னை விழா  சமயத்திற்கு இன்னுமொரு "மெகா சர்ப்ரைஸ்" காத்திருக்குமென்பதை மட்டும் இப்போதே சொல்லி வைத்து விடுகிறேன் !  12 மாதத் தொலைவிற்குள் தலை நுழைக்கும் முன்பாய் - ஆறேழு மாதத் தூரத்தில் காத்திருக்கும் நமது லயனின் 30-வது ஆண்டுமலர் பக்கமாய் நம் உழைப்பு துவங்கும் நேரமும் நெருங்கி வருகிறது ! டெக்சின் விற்பனைப் புள்ளிவிபரங்கள் - அவரது solo சாகசமாய் இந்த மெகா இதழை அமைத்திடுவதற்கு வலுவானதொரு முகாந்திரத்தை முன்வைப்பது நிஜமே ! ஆனால் இங்கும் சரி ; என்னை நேரில் சந்தித்த நண்பர்களும் சரி - எப்போதும் போலவே பல நாயகர்கள் கொண்டதொரு cocktail இதழாகவே நமது 30-வது ஆண்டுமலர் அமைந்திட வேண்டுமென வலியுறுத்துவதற்கு நிச்சயம் மதிப்பளிக்கப்படும் ! கதைகளின் தேர்வுகள் ; பாதி ராத்திரியில் தோன்றும் திடீர் சிந்தனையால் தேர்வான கதைக்குக் கல்தா தருவது ; புதிதாய் எதையாவது போட்டு தலைக்குள் மாவு பிசைவது என இவ்வாரத்தின் பல நாட்கள் எனக்குப் பிசியான பொழுதுகளே ! ஓரிரு புதுப் படைப்பாளிகளோடு பாலம் அமைக்க முயன்று வருவது சற்றே அவகாசத்தை விழுங்கி வரும் முயற்சியாக இருப்பதால் எனது கதைத் தேர்வுகள் இறுதி வடிவம் பெற இன்னும் வாரங்கள் சில செலவாகுமென்பது உறுதி ! அரக்கப் பறக்க ஓடுவதே நமது பாணி என்பதைச் சன்னமாய் மாற்றி - இம்முறையேனும் மூச்சு விட அவகாசத்தோடு பணிகளைச் செய்திட வேண்டுமென்ற ஆசை உள்ளுக்குள் ! Fingers crossed ! 

இந்தப் புத்தக விழாவின் இன்னுமொரு படிப்பினை - கறுப்பு/வெள்ளை இதழ்கள் தொடர்பானதும் கூட ! கதையோ, நாயகரோ சிறப்பாய் இருக்கும் பட்சத்தில் அது b &W ஆக இருந்தாலும் விற்பனையில் தொய்விருக்காதென்று உணர முடிந்துள்ளது ! டெக்ஸ் ; டயபாலிக் ; டெக்ஸ் தீபாவளி ஸ்பெஷல் மூன்றும் வண்ண இதழ்களுக்குத் தந்த போட்டி சுவாரஸ்யமானது ! விலைகள் குறைவாய் இருந்ததும் ; தீபாவளி ஸ்பெஷலின் பருமன் நிறைவாக இருந்ததும் இதற்கொரு காரணமாய்   இருந்திருக்கலாம் தான் ; ஆனால் கறுப்பு-வெள்ளையின் கொடியும் தொடர்ந்து பறப்பதை கண்கூடாய் இம்முறை பார்க்க முடிந்துள்ளது ! ("டெக்ஸ் கலரில் தான் வேண்டும் !' எனக் கொடி பிடிக்கும் நண்பர்களின் நறநறக்கும் பற்கள் எழுப்பும் ஒலி கேட்காமல் இல்லை !!) 

இன்று பெற்றோர்களாகவும் காட்சி தரும் நமது காமிக்ஸ் காதலர்களும் சரி ; இச்சுவைக்கு புதியவர்களான இளம் பெற்றோர்களும் சரி - குழந்தைகளுக்கு தமிழ் சொல்லித் தர காமிக்ஸ்களை  ஒரு அழகான பாதையாய்ப் பார்ப்பதையும் இந்த சென்னை விழா கோடிட்டுக் காட்டியுள்ளது ! ஒரு ஆர்வத்தில், வேகத்தில் குடும்பங்கள் நம் ஸ்டாலுக்குள்  நுழைவதும், "ஒ ..காமிக்ஸா ?" என்ற அசிரத்தையோடு அதே வேகத்தில் கிளம்புவது அடிக்கடி நிகழ்ந்திடும் விஷயமே ! ஆனால் இம்முறையோ பொறுமையாகப் புத்தகங்களைப் புரட்டுவதும், கார்ட்டூன் கதைகளைத் தேர்வு செய்து சுட்டிகளிடம் தருவதையும் பார்க்க முடிந்தது ! ஒரு சரியான புத்தக விநியோக முறையை உருவாக்க முடிகின்ற போது நல்ல தரத்தில் சுட்டித் தலைமுறைக்கென ஒரு பிரத்யேக காமிக்ஸ் இதழை அறிமுகம் செய்ய வாய்ப்புகள் இருக்குமென்றே நினைக்கத் தோன்றுகிறது ! பரபரப்பாய் - லட்சங்களில் அவற்றின் விற்பனை இருக்குமென்ற பகற்கனவுகள் இல்லாவிடினும், ஒரு modest விற்பனை எண்ணம் சாத்தியமாகும் என்ற நம்பிக்கை லேசாய்த் துளிர் விடுகிறது ! ஐந்தாண்டுகளுக்கு முந்தைய ஆசாமியாய் நான் இருந்திருக்கும் பட்சத்தில் கூட - "மீண்டும் மினி-லயன்" என்று இந்நேரத்திற்கெல்லாம் தண்டோரா  போட ஆரம்பித்திருப்பேன் !  ஆனால் இன்றைய யதார்த்தங்கள் ; தயாரிப்புச் செலவுகள் ; அவசியமாகும் முதலீடுகள் என்பன எத்தனை கருணையற்ற முதலாளிகள் என்பதை அனுபவத்தில் புரிந்து வைத்திருப்பதால் - 'கண்ட்ரோல்...கண்ட்ரோல்..!' என்று எனக்கு நானே பிரேக் போட்டுக் கொள்கிறேன் ! சின்னதாய் இருப்பினும், எடுத்து வைக்கும் அடிகள் உறுதியாய் இருப்பதன் அவசியத்தை நாம் அறிவோம் தானே ?! 

இன்னும் ஓரிரு நாட்களில் சென்னை விழாவும் சரி ; ஜனவரியும் சரி நம் நினைவுகளில் மாத்திரமே நிலை கொண்டிருக்கும் ! விடுமுறைகளற்ற பிப்ரவரியும் ; புது இதழ்களின் பணிகளும் வெகு அருகாமையிலிருந்து அழைப்பதால் அவற்றை நோக்கி நடை போடுவோம் ! விரைவில் புது இதழ்களின் preview களோடு இன்னொரு பதிவில் சந்திக்கிறேன் ! எல்லா நேரங்களிலும் பதிவிட ஒரு சேதி அவசியமாகாது ; சுதந்திரமாய் சிறகடிக்கும் சில இலகுரக சிந்தனைகளைப் பகிர்வதும் கூட ஒரு சந்தோஷ அனுபவமே என்ற புரிதலோடு இந்த ஞாயிறு பின்னிரவுப் படலத்தை நிறைவு செய்து புறப்படுகிறேன் ! Take care folks....will be around again soon ! 

375 comments:

  1. உற்சாகமாக இருக்கிறது இந்த பதிவை படித்ததும். நம் தமிழ் காமிக்ஸ்களுக்கு புது ஆண்டு அருமையான தொடக்கம் கொடுத்துள்ளது. மிகபெரிய மீடியாக்களின் பார்வை நம் காமிக்ஸ்கள் பக்கம் திருப்பியது ஒரு திருப்புமுனையாக இருக்கும் என்பது என் நம்பிக்கை. யார் கண்டது?, முத்துகாமிக்ஸ் உடன் இணைந்து ஆஸ்கர் பிலிம்ஸ் தயாப்பில் ஷங்கர் டைரக்‌ஷனில் ஒரு பிராங்கோ பெல்ஜிய காமிக்ஸை முழுநீள அனிமேஷன் படமாக நமக்கு இன்னும் சில ஆண்டுகளில் தந்தாலும் தரகூடும். கனவுகளுக்குதான் எல்லையுண்டா? பலிக்கும் எனில் ஆனந்தமே! :)

    ReplyDelete
  2. டியர் எடிட்டர் சார்,

    அடுத்த ஆண்டு சென்னை புத்தக கண்காட்சியில் சிறப்பு வெளியீடு உண்டு என்பதை உறுதி செய்தமைக்கு நன்றி.

    அப்படியெனில் அடுத்த ஆண்டு சென்னை புத்தக கண்காட்சியில் (ஏற்கனவே அறிவித்தபடி கேப்டன் டைகரின் மின்னும் மரணம்) + இந்த சிறப்பு வெளியீடு என்று இரண்டு சிறப்பு இதழ்கள். வாவ்......

    அந்த இரண்டாவது சிறப்பு வெளியீடு இந்த ஆண்டு புத்தக கண்காட்சியின் முடிவுகளை (லக்கிலூக் + டெக்ஸ் வில்லர் விறபனை விவரங்கள்) பொறுத்து தான் அமைந்துள்ளதா?

    ReplyDelete
  3. என்ன அடுத்த ஜனவரியில் 2 குண்டு புக்கா.......???

    விஷ்ஷ்........ . விஷ்ஷ்............

    ReplyDelete
  4. hopefully i w'll be in chennai by then

    ReplyDelete
  5. சார் மிக மிகவும் நல்ல விஷயம், இரண்டு குண்டு புத்தகங்கள் சூப்பர்

    ReplyDelete
  6. ஆஹா மெய்யாலுமே சிந்தனைக்கு சிறகுகள் இல்லைதாம் ! அருமை சார் ! இந்த வருட துவக்கம் ஒரு குண்டு இதழும் சேர்த்திருக்கலாம்தான் ! அந்த இழப்பை ஈடு கட்ட அடுத்த வருடம் இரண்டு அணு குண்டுகளோ !
    அநேகமாய் உங்களை இரத்த படலம் கேட்டு நிறைய பேர் தொந்தரவு செய்திருக்கலாம் ! அடுத்த வருட வெளியீடு அதுதானே ! ஏனென்றால் கார்சனின் கடந்த காலம் இந்த வருடமே என பட்சி கூவுகிறது !

    ReplyDelete
  7. சந்தோஷமாக இருக்கிறது சார் !

    ReplyDelete
  8. டியர் எடிட்டர் ,

    சென்னை புத்தக திருவிழா 2015 இல் "மின்னும் மரணம் " தவிர இன்னொரு மெகா செர்பிரைஸ் காத்துள்ளது என்ற உங்கள் பதிவு இந்த பின்னிரவிலும் கமெண்ட்ஸ் போட வைக்கின்றது . சூப்பர் சார் .2 குண்டு புக் . ஆஹா ஆஹா . நண்பர் ஆதி அக மகிழ போகிறார் . 4.25 லட்சம் என்பதை தாண்டி விற்பனையில் சாதனை படைக்க போவது உறுதி . ஆயிரம்தான் இருந்தாலும் நமது சிங்கம் சரியான பாதையில் நடை போட இது போன்ற டானிக் அவசியம்தானே ?

    ReplyDelete
    Replies
    1. சிங்கம் நண்டு கறி தானே சாப்பிடும்

      Delete
  9. ியர் எடிட்டர்...

    சென்னை புத்தக கண்காட்சியை வெற்றிகரமாகவும், சந்தோசமாகவும் முடிக்க போவதற்கு வாழ்த்துக்கள்... சார்.

    இந்த வருடம் முழுவதும் உங்களுக்கு நிறைவாகவும், எங்களுக்கு குறைவில்லா காமிக்ஸ்களும் கிடைக்கும் சூழ்நிலை அமைய எல்லாம் வல்ல 'ஓடின்' தெய்வத்தை பிரார்த்தனை செய்கிறோம்.

    ReplyDelete
  10. chennai 2015 is Super what about erode ???

    ReplyDelete
  11. ஓர் அளவேனும் உங்களை மகிழ்விக்கும் வகையில் விற்பனை நடந்தது மகிழ்ச்சி அளிக்கிறது சார்.

    புதிய அறிவிப்புகள் ஆவலை தூண்டுகின்றன.
    புதிய புத்தகம் கருப்பு வெள்ளை மறுபதிப்புகளாக இருக்கலாம் என்று தோன்றுகிறது.

    ஒரு மீள்கருத்து டெக்ஸ் கதைகள் தேர்வில் மேலும் சிறிது கவனம்.

    நமது ஸ்டாலின் சமீபத்து வருகையில் நான் கண்ட ஒரு நிகழ்ச்சி ஒரு தாயார் நமது விற்பனைக்கு ஒரு ஷெரிப் புத்தகம் எடுத்த தனது மகனிடம், ஏன் பேய் புத்தகம் எல்லாம் எடுக்கற என்று கூறினார். நான் இல்லை அது காமெடி புத்தகம் என்று கூறியும் அவர்கள் ஏற்கவில்லை.பின்னர் விஸ்வா சுட்டி லக்கியை காமித்து வாங்க வைத்தார்.

    ஆகையால் காமெடி புத்தகங்களின் அட்டை படங்கள் மற்றும் பெயர்கள் தேர்விலும் சிறிது மாற்றம் வேண்டும் எனபது எனது கருத்து சார்.

    இம்முறை வந்த புத்தகங்களில் எனது பயங்கர புயல் புத்தகத்தில் முதல் 10 பக்கங்கள் மோசமான நிலையில் வந்தது. நீங்கள் பலவாறு தரத்தில் கவனம் செலுத்துகிறீர்கள் எனபது புரிகிறது சார் இருந்தும் அவ்வாறு புத்தகங்களை பார்க்கும் பொழுது வருத்தமாக இருக்கிறது.

    ReplyDelete
  12. விஜயன் சார், ஒரு வழியாக நமது காமிக்ஸ் எனது இல்லத்தரசியையும் கவர்ந்து விட்டது தோர்கல் மூலமாக! படித்து முடித்தபின் முதல் கேள்வி அடுத்த புத்தகம் எப்ப வரும்? நான் இந்தவருடம் இன்னும் இரண்டு கதை வரலாம். எனது துணைவி மாதம் ஒரு கதையாக வெளிவிட்டால் என்ன? என்னிடம் இதற்கு பதில் இல்லை, லைன் ஆசிரியரிடம் கேட்டு சொல்கிறேன்.. ஓவர் டு யு விஜயன் சார்!

    நமது காமிக்ஸின் லக்கி-லுக் கதைகளை மட்டும் நேரம் கிடைக்கும் போது எனது தொந்தரவு தாங்காமல் புரட்டும் எனது துணைவியை நமது காமிக்ஸ் படிக்க தூண்டிய பெருமை தோர்கல்லை சாரும்!

    ReplyDelete
  13. கறுப்பு வெள்ளை இதழ்கள் வண்ண இதழ்களுக்கு tuff competition ஆக இருந்தால் மகிழ்ச்சியே!:-)

    ReplyDelete
  14. ப்ரெசென்ட் சார்!

    மின்னும் மரணம் தவிர்த்து இன்னுமொரு மெகா புத்தகமா? சூப்பர் சார்!

    ReplyDelete
  15. Another feel good post, eagerly looking forward to 2015 Jan specials.

    ReplyDelete
  16. "மீண்டும் மினி-லயன்"

    +999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999n

    ReplyDelete
  17. 2015/ல் 2 குண்டு புக் ஆகா அருமையான அறிவிப்பு. 1) மின்னும் மரணம் 2) டெக்ஸ் மெகா ஸ்பெசல்

    சுட்டி லக்கி, லக்கிலுக் இருவருக்கும் சேர்த்து மினி லயன் வெளியிடலாமே?

    30/வது ஆண்டு மலர் கதம்பமாக வெளியிட முடிவெடுத்தமைக்காக நன்றி.

    ReplyDelete
  18. @ FRIENDS : இன்றைய நாளிதழில் வரும் 25-ஆம் தேதி முதலாய் இராமநாதபுரம் நகரில் புத்தக விழா ஒன்று துவங்க இருப்பதாகவும், முன்னாள் குடியரசுத் தலைவர் திருமிகு.அப்துல் கலாம் அவர்கள் பங்கேற்பதாகவும் செய்தி உள்ளது ! இராமநாதபுரத்தில் வசிக்கும் நண்பர்கள் எவெரேனும் இங்கு இருப்பின், அதன் அமைப்பாளர்களின் தொலைபேசி எண்களை வாங்கித் தர முயற்சிக்க இயலுமா - ப்ளீஸ் ?

    ReplyDelete
  19. டியர் எடிட்டர்,

    உங்களின் இந்தப் பதிவை இதுவரை நான்கு முறை படித்துவிட்டேன். ஒவ்வொரு முறை படிக்கும்போதும் என் குதூகலத்தின் அளவு கூடிக்கொண்டே போவதும், நிதானமாகப் படித்து உங்களது எழுத்துக்களில் புலப்படும் உற்சாகத்தின் அளவை ஒரு புன்னகையோடு ரசித்திடுவதும் அலாதி சுகம் தருகிறது.  :)

    * இந்தப் புத்தகத் திருவிழாவை மாபெரும் வெற்றியாக்கிக் கொண்டிருக்கும் எங்கள் 'தல' டெக்ஸ், வயதுவித்தியாசமின்றி அனைவரின் மனங்களிலும் நிறைந்திருப்பதை மீண்டும் உறுதிப்படுத்தியிருக்கிறார். வெள்ளித் திரையில் ஒரு 'தல' என்றாவது கலக்காமல் போய்விடினும், வெள்ளைத் தாளில் எங்கள் 'தல' என்றென்றும் கலக்குவார். டெக்ஸ் வாழ்க!

    * பார்த்தவுடனே பரவசப்படுத்துவதும்,படிக்கும்போதே பல முறை தொட்டுத்தடவி நெஞ்சோடு அணைத்துக்கொள்ள உகந்ததுமாகிய 'குண்டு புத்தகங்கள்' மீண்டும் தங்கள் வலிமையை நிலை நாட்டியிருப்பது 'குண்டுபுக் மெம்பர்ஸ் க்ளப்'பிற்கு ஏக உற்சாகமளிக்கிறது. இனி புள்ளை-குட்டிகள் ஒல்லியாக இருக்கட்டும்; புத்தகங்கள் குண்டாக இருக்கட்டும்! அதுவே சிறந்த ஆரோக்கியம். ஹி ஹி!

    * புத்தகத் திருவிழா 10 நாட்களே முடிவடைந்திருக்கும் நிலையில் நீங்கள் '12 நாட்களில் 4.25 லட்சங்கள்' என்று இங்கே குறிப்பிட்டதும் ஏனோ?

    * 'லயன் 30வது ஆண்டு மலருக்கு கூட்டாஞ்சோறு இதழே' என்று நீங்கள் முடிவெடுத்திருப்பது நல்லதொரு தீர்ப்பு! எனினும், புத்தகத்தின் பாதிக்கும் மேற்பட்ட பக்கங்கள் டெக்ஸால் நிரம்பி இருக்கவும், அட்டைப்படத்திலும் டெக்ஸே ஆதிக்கம் செலுத்தவும் உறுதி பூணுங்கள் சார்!

    * மின்னும் மரணத்தோடு2015ல் இன்னுமொரு மெகா சர்ப்ரைஸ் காத்திருக்கிறது என்று சொல்லி அடுத்த ஒரு வருடகாலத்திற்கு எங்களது நெற்றிகளை பிராண்ட வைப்பதெல்லாம் டூ டூ மச், சார்! உங்களுக்குள் ஒளிந்துகொண்டிருக்கும் 'மிஸ்டர் ஓ.வா.உலகநாதன்' எங்களது ஆவலை விரைவிலேயே தீர்த்துவைப்பார் என்று விடாப்பிடியாக நம்புகிறோம். :)

    ReplyDelete
  20. To: Editor,
    இராமநாதபுரம் புத்தகக் கண்காட்சியை ஒழுங்குசெய்பவர்கள் என்று தேடியபோது கிடைத்த விபரங்கள்: டெல்லி தொடர்புதான் கிடைத்தது. உங்களுக்கு உபயோகப்படுமோ தெரியவில்லை. இவர்கள்ஊடாக ராமநாதபுரம் ஏற்பாட்டாளர்களது தொடர்பிலக்கம் கிடைக்கலாம்.

    Mr.Vasant Kunj
    NATIONAL BOOK TRUST
    INDIA
    Nehru Bhawan
    5, Institutional Area, Phase – II,

    New Delhi - 110070
    (Tel) 26707700, 26707779 (Fax) 26707846

    ReplyDelete
  21. சார் உண்மைய சொல்லுங்க, தொர்கல் கிராபிக் நாவல் ஆ ?
    உண்மைலேயே இது தான் காமிக்ஸ் என்ற சொல்லுக்கு பொருத்தமான கதை. இனிமேல் தொர்கல்ஐ கிராபிக் நாவல் லிஸ்ட் இல் சேர்க்க வேண்டாம். பேசாமல் மினி-லயன் ல ஒரு +6 விடுங்க சார், தொர்கல் சுட்டி லக்கி, லக்கி, சுஸ்கி-விஸ்கி, வெளியடலாம்.

    இப்போ ஒரே குழப்பமா இருக்கு, its a mess, the allotment of titles டு the brand.

    ReplyDelete
  22. You have defined a new rule in the world of business by breaking all the rules..you have made everyone to participate in Lion's Growth.
    I believe this New Model will give a rebirth to this Vanishing Art...
    Proud to be a Comic Fan

    ReplyDelete
  23. 2015ல் மின்னும் மரணம் மற்றும் ஒரு ஸ்பெஷல் எனும் போது WOW! Time machineல் 2015 செல்ல தோன்றுகிறது !

    ReplyDelete
  24. சார் மி. மரணம் முழு தொடரும் வெளியிட வேண்டும், முத்து 300 வது இதழில் வந்தது உட்பட.

    ReplyDelete
  25. சார் அப்புறம் மார்ச் +2 வில் கார்சனின் கடந்தகாலம் இரண்டு பாகங்களும் முளுவண்ணத்தில்தானே ! ஈரோடு விற்பனைக்கும் உதவுமே ! ஆனால் ஒரே பாகமாக இடலா,மே

    ReplyDelete
    Replies
    1. பெரிய சைசில் அட்டகாசமாய் +6 ல் .....இன்னுமொரு சந்தா +2 என

      Delete
    2. அப்படி வந்தால் முதல் நாள் முழுதும் ஈரோடில் களபணியாற்ற நான் தயார் !

      Delete
    3. // அப்படி வந்தால் முதல்நாள் முழுவதும் ஈரோட்டில் களப்பணியாற்றிட நான் தயார் //

      இல்லேன்னா வரமாட்டீங்களா ஸ்டீல்?
      சென்ற ஈரோடு புத்தகத்திருவிழாவில் நீங்கள் தலைகாட்டாத கடுப்பில் இருக்கிறோம் என்பதை மறந்துவிட்டீர்களா?

      Delete
  26. இந்த தை மாதம் நமது காமிக்ஸ்களின் மற்றொரு விடியலாக மலர்ந்திருப்பது மிகவும் மகிழச்சியளிக்கிறது..

    பெண்கள் விரும்பும் மாடஸ்டி , நாங்கள் விரும்பும் ராபின் , மர்ம மனிதன் மார்டின் ஆகிய B&W நாயகர்களது

    கதைகள் தொடர்ந்து வெளியிட சென்னை புத்தக கண்காட்சி ஒரு வெளிப்பாடாக அமைந்தது கடந்த இரு

    பதிவுகளின் மூலம் ஆசிரியரே ஏற்றுக்கொண்டது தெளிவாகிறது இதற்காக ஆசிரியருக்கு நன்றிகள் பல...

    ReplyDelete
  27. இம்முறை புத்தக கண்காட்சியில் அனைத்து ஜந்வரீ இதழ்களயும் என் மகளுடன் வந்து வாங்கினேன். அவள் அனைத்து லக்கி ல்யூக் இதழ்கள் அட்டையை பார்த்து , இது நம்ம வீட்ல இருக்கு, அதை வாங்குங்க ன்னு சொல்லி கொண்டிருந்தாள்.

    மற்ற குழந்தைகள் கதைகளில் அனைத்திலும் சோட்டா பீம் காமிக்ஸ் புத்தகங்கள் இருந்தது. கணிசமான குழந்தைகளின் கைகளில் அதனை பார்த்த போது, நாம் நம்முடய வருங்கால வாசகர்களை இழக்கிறோமோ என்று தோன்றியது . சென்ற முறை 75 Rs கிடைத்த சோட்டா பீம் காமிக்ஸ் இம்முறை Rs90 ஆக இருந்தது. மொத்த பக்கங்கள் 32 என நினைக்கிறேன். கிட்ட தட்ட என் மாதிரியே எடிட்டர் க்கும் தோன்றியது போல. கண்டிப்பா குழந்தகளுக்கு என ஒரு ஆண்டுக்கு 6 இதழ்கள் வேண்டும். அதே போல் subscription சரியான முரயில் நமது ஸ்டாலில் விளம்பரப்படுத்த பட வில்லை என்று தோணியது. 1 Year subscription கூட 6 Months subscription பற்றியும் எடிட்டர் யோசிக்கலாமே!.

    இதழ்களின் விற்பனை, நம்ம்க்கு கிடைத்த விளம்பரங்கள் நல்ல் வரவு.

    ReplyDelete
    Replies
    1. இல்லேன்னா குழந்தைகள் ஆங்கில காமிக்ஸ் வாசகர்களாகி விடுவர் ................தமிழ் வாசிப்பு இப்போதே குறைந்து வருகிறது ............

      Delete
  28. appuram namma hits kittathatta 7.5 laksh thoda ulla innerathil (749858)

    edi oru முக்கா மில்லீயன் திருவிழா மலர் announce pannunga, marchla கிடைத்தாலும் பரவாயில்லை!
    ************************************************

    ReplyDelete
  29. சூப்பர் தலைவா! உங்களுக்காக தேடி பிடித்து இனிப்புப் பொட்டலம் கட்டி வந்தால் மாயாவியாக தலைமறைவாகிட்டீங்க!! பரவாயில்லை அடுத்த முறை சென்னைக்கு அதிரடிகளுடன் வரப் போவது குறித்து மிக்க மகிழ்ச்சி! இந்த முறையே நடுவில் ஒரு புத்தகத்தை களம் இறக்குவீங்க என்று சேதிகள் வந்த வண்ணம் இருந்தன!!! ஹீ ஹீ ஹீ

    ReplyDelete
  30. Dear Editor Sir,
    I need

    Wild West special,
    Never Before Special
    Thanga Kallarai 1 & 2
    Super Hero Special
    Double Thrill special
    Come back Special
    When I enquired in your office, they said it was not available, kindly help, I am in Coimbatore

    ReplyDelete
    Replies
    1. Ragul Ramesh : Sorry, they are all out of stock presently.

      Delete
    2. இனிமேல் பிரிண்ட் ஆகும் இதழ்களின் எண்ணிக்கையை கூட்டலாமே? புது வாசகர்கள் ஏமாற மாட்டார்கள். மேலும் மதுரை, திருநெல்வேலி போன்ற ஊர்களில் நடைபெறும் புத்தக திருவிழாவிலும் கொள்ள முயற்சி செய்யலாமே? கடந்த வருடம் இந்த 2 ஊர்களிலும் கட்டுக்கடங்காத கூட்டம்..........

      Delete
  31. ரெண்டு பூக்னு எல்லோரும் ரொம்பதான் வாய தொரக்காதீங்க ஏற்கனவே சொன்ன "மில்லியன் ஹிட்ஸ் ஸ்பெசல்" தான் அது.. 2015 நியூ இயர் குள்ள 1மில்லியன் ஹிட்ஸ் ரிச் ஆகிடும்ல.

    சார் போனவருசம் சன்ஷைன் லைப்ரரில மறுபதிப்பு மட்டும் விடுங்கன்னு சொன்னோம் +6 அது இதுனு மிக்ஸ் பண்ணி இப்போ 2014 ல சன்ஷைன் லைப்ரரில மறுபதிப்பு மட்டும்ன்னு நிங்களே முடிவெடுத்துடீங்க.
    அதேமாத்ரி கிராபிக் நாவல் தனியா வெளியிடுங்க ன்னு சொன்னோம் அப்போ ANS அது இதுன்னு மிக்ஸ் பண்ணிட்டு இப்போ தனி லேபிள் ல கொண்டு வந்துதீங்க. நாங்க சொல்றத நல்லா ஆரப்போட்டு யோசிச்சு முடிவுஎடுகறீங்க, அதையே இப்போவும் பண்ணாம உடனே முடிவெடுங்க சர்.

    மினி லயன் - ஒரு 6 / year (சுஸ்கி-விஸ்கி , சுட்டி லக்கி, லக்கி லுக், தொர்கல் ) (தொர்கல் is definitely for kids )
    சன்சைன் GNல தொர்கல் வேண்டாம் சார், பிரல்யத்தின் பிள்ளைகள், சிப்பாயின் சுவடுகள் அந்த மாத்ரி கதை தான் வரணும். நீங்கள் சந்சைன் GN பிரண்ட் establish பண்ண தொர்கல்ஐ include செய்துள்ளீர்களா ?
    steve rolland க்கு கூட லயன் தான் சரி.

    ReplyDelete
    Replies
    1. \\\\\\\\\\\\\\\\\\\\\\ரெண்டு பூக்னு எல்லோரும் ரொம்பதான் வாய தொரக்காதீங்க ஏற்கனவே சொன்ன "மில்லியன் ஹிட்ஸ் ஸ்பெசல்" தான் அது.. 2015 நியூ இயர் குள்ள 1மில்லியன் ஹிட்ஸ் ரிச் ஆகிடும்ல.\\\\\\\\\\\\\\\\\\\\\

      அப்ப அதையும் சேர்த்து 2015/ல் 3 குண்டு புக்

      \\\\\\\\\\\\\\\\\\\\\மினி லயன் - ஒரு 6 / year சுஸ்கி-விஸ்கி , சுட்டி லக்கி, லக்கி லுக், தொர்கல் \\\\\\\\\\\\\\\\\\\\\

      அற்புதமான யோசனை.

      Delete
    2. சூப்பர் விஜய் : அந்த இரண்டாம் குண்டு புக் "மில்லியன் ஹிட்ஸ் ஸ்பெஷல்" அல்ல..!

      Delete
    3. அ..அப்படீன்னா அது 'இரத்தப்படலம் 1-18'ஆக தான் இருக்கும்..

      அல்லது

      ஒரு 'கருப்பு-வெள்ளை கதம்ப ஸ்பெஷல்' ஆகவும் இருக்கலாம். தேர்ந்தெடுத்த பத்து கதைகள்; அத்தனையும் அந்தக்காலத்தில் வசூலை வாரிக் குவித்தவை. சரிதானே சார்?

      அல்லது...

      560 பக்கங்களைக் கொண்ட ஒரே ஒரு டெக்ஸ் கதை. அப்படியே முழுசாக...

      Delete
    4. விஜய்

      1 மற்றும் 3/ம் யோசனை அருமை......

      2 வேண்டவே வேண்டாம் ஆளவிடுங்க சாமி

      Delete
    5. விஜயன் சார்,

      2ஆவது புக்கும் குண்டு புக்குதான்னு ஒத்துக்கிட்ட்தற்கு நன்றி.

      E. V
      2ஆவது புக் இதுவரை வந்த ஸ்லைட் கதைகளின் தொகுப்பு

      .
      .
      .
      .
      .
      .

      .
      .
      ..
      ...
      .
      .
      .
      .
      .
      ..
      .
      .
      .
      .
      .
      .
      .
      .
      .
      .
      .
      .
      .
      .
      போதும் போதும் கல்லை கீழே போடுங்க

      என்னாாாா......? ஒரு கொலவெறி

      Delete
    6. @ ஷல்லூம்

      'ஸ்பைடர்' தொகுப்பை வாங்கி அப்படியே நாகர்கோயிலுக்கு பார்சல் அனுப்பிடுவேனாக்கும், 'to pay' போட்டு! ஹி ஹி!

      Delete
  32. Please think about xiii full series on next January sir,we are eagerly waiting for a full colour xiii.

    ReplyDelete
  33. @ FRIENDS : தொடரும் நாட்களில் இராமநாதபுரம் + திருச்சி புத்தகக் காட்சிகளில் பங்கேற்க முயற்சிகள் மேற்கொண்டு வருகிறோம் ! நமக்குப் புதிதான இரு நகரங்களிலும் வரவேற்பு எவ்விதம் இருப்பினும், நாம் மீண்டு(ம்) வந்திருக்கும் சேதியை 'டச்' விட்டுப் போன வாசகர்களுக்குத் தெரிவிக்க இவை பயன்படும் என்ற நம்பிக்கை உள்ளது ! Hoping for the best !

    ReplyDelete
    Replies
    1. சார் அப்படியே மதுரை மற்றும் திருநெல்வேலியையும் கணக்கில் கொள்ளவும்.
      போன வருடம் நடைபெற்ற புத்தக திருவிழாவில் கட்டுக்கடங்காத கூட்டம்

      Delete
    2. திருச்சியில் நடைபெற இருக்கும் புத்தக கண்காட்சியில் நமது நிறுவனம் கலந்து கொள்வதை அறிந்து திருச்சி வாழ் மக்களாகிய நாங்கள் மகிழ்ச்சி கொள்கிறோம்!

      Delete
  34. சீக்கிரமே 'Dylan dog'ஐ களமிறக்குங்கள் சார் (இந்தப் பெயருக்கு தமிழ்ல என்னனு வைப்பீங்க சார்?).
    கட்டிலுக்கு அடியில் ஒரு போர்வைக்குள் ஒளிஞ்சுக்கிட்டு அமானுஷ்யக் கதைகளைப் படிக்கும் த்ரில்லிங்கே தனிதான்.

    கல்யாணத்துக்கு பிறகும் இந்த மாதிரியான அமானுஷ்யங்கள் நம்மை பயமுறுத்துகிறா என்று பார்த்துவிட ஆசை! :D

    ReplyDelete
    Replies
    1. E.விஜய்,

      Quiz: ஸ எனும் எழுத்து மூன்று முறை வரும் ஒரு வார்தை tell me பார்ப்போம்? பதில் முடிவில்...

      உங்கள் இந்த கமெண்ட்டுக்கு பல இளமையான பதில் கமெண்ட் இட ஆசைதான் நாகரிகம் கருதி silence:-)

      சொல்ல வந்ததை சொல்லாமலயே சொல்ல முயற்சித்து இருக்கிரேன்:-)
      புரிந்தும் புரியவில்லை என்றால் எனக்கும் புரியவில்லை
      புரியவில்லை என்றாலும் புரிந்தது என்று சொன்னால் எனக்கு புரிந்துவிடும்

      பூனை மீசையை பிச்சிக்குது போல இருக்கு?

      ஹப்பாடா operation success

      Delete
    2. @ ச.கா.பி.கா.பி

      //பதில் முடிவில்...//

      // ஹப்பாடா operation Success//

      //success//

      அந்த 3 'ஸ' வார்த்தை - "ஸக்ஸஸ்"

      சரிதானே? :)

      Delete
    3. " ச.கா.பி.கா.பி" Plz sathyannae sollungae abbreviation bayangarama irukku :-)

      correctudhan aaana

      பதில் முடிவில் அப்டின்னா எண்டிங்க் பார்த்து பதில் சொல்ல கூடாது

      idhu அழுகுனி ஆட்டம்

      அப்புரமா ணாணே வந்து பூனை மீசையை பிச்சி குடுப்aen

      Delete
    4. // ஸக்ஸஸ் //

      இதிலே இரண்டு "ஸ" தானே இருக்கு? :P

      Delete
    5. @ ஈ.விஜய் கல்யாணத்துக்கு அப்புறம் எதுங்க அமானுஷ்யம்!!! நம்மை பயமுறுத்த எந்த

      சக்தியாலும் பயமுறுத்த முடியாது ஒன்றே ஒன்றை தவிர அது என்னன்னா?? ......................

      இருங்க அக்கம் பக்கம் பார்த்துக்கறேன் .........

      நம்ம மொபைல் டிஸ்ப்ளேவில் வரும் HOME எனும் எழுத்துக்கள்தான்

      Delete
    6. என்ன ஒரு ஆர்ட்டின்தனம் .............

      Delete
  35. Sir,

    After 24th Dec 2013, you didn't update the new blog posts in Facebook. Please keep that updated.

    ReplyDelete
  36. Dear Editor sir,

    Thank you for your prompt reply , I will search and get it somewhere , r else will wait for re issue

    ReplyDelete
    Replies
    1. Ragul Ramesh :

      நண்பரே சென்ற பதிவில் நீங்கள் பதிவிட்ட நான்கு பதிவுகளையும் கவனித்தேன். உங்கள் மொபைல் ஃபோன் மூலம் Load more செய்து எல்லா கமெண்ட் யும் நீங்கள் பார்க்க இயலாத காரணத்தினால் ஒரே பதிவை நான்கு முறை பதிவிட்டிருந்தீர்கள். அதில் உங்களின் முதல் பதிவிற்கு காமிக்ஸ் வாசக நண்பர் sundaramoorthy j என்பவர் கீழ்கண்டவாறு பதிலளித்துள்ளார்...

      //டியர் ராகுல் ரமேஷ்... நீங்கள் குறிப்பிடும் அனைத்து புத்தகங்களும் என்னிடம் உள்ளன.... தேவைபட்டால் பெற்றுகொள்ளவும்// உங்களுக்கு விருப்பமிருந்தால் நண்பரை தொடர்பு கொள்ளவும். நன்றி.

      பி.கு : இதையும் பார்க்காமல் விட்டுவிடப் போகிறீர்கள் :)

      Delete
    2. rahul ramesh; என்னுடைய மொபைல் நம்பர் 9841446021. கொரியரில் அனுப்ப இயலாது. சென்னை வரும் போது பெற்றுகொள்ளவும்.

      Delete
  37. டியர் விஜயன் சார்,

    2015 ல் வெளிவர இருக்கும் இரண்டு குண்டு புத்தகங்களை முழு வண்ணத்தில் மட்டுமே வெளியிடுங்கள் சார்.

    விலையை கருத்தில் கொண்டோ அல்லது கருப்பு வெள்ளை நாயகர்களுக்கு மறுவாழ்வு கொடுக்கவோ தற்சமயம் தங்களின் எண்ணத்தில் அதுபோன்ற சிந்தனை இருந்தால் அதை ஆர்ட் பேப்பரில் மட்டுமே வெளியிடவும். ஏனெனில்..

    1.தோர்கலில் வெளிவந்த ''புதிர் வீடு'' கருப்பு வெள்ளை - ஆர்ட் பேப்பரில் அழகாக வந்து இருக்கிறது.
    2.சாதாரண பேப்பரில் வெளியிட்ட 2012 தீபாவளி ஸ்பெஷல் - ஏதோ 5 வருடத்திற்கு முந்திய வெளியீடாக காட்சியளிக்கிறது.
    3.சாதாரண பேப்பருக்கும் ஆர்ட் பேப்பருக்கும் விலையில் அதிக வித்தியாசம் இல்லை என்று சமிபத்தில் கூறியுள்ளீர்கள்.
    4.இந்த பிரச்சனையே வேண்டாம் என்றால் முழு வண்ணத்தில் மட்டுமே வெளியிடவும். ப்ளீஸ்..!

    ReplyDelete
    Replies
    1. 2015 ன் முதல் குண்டு புத்தகம் மின்னும் மரணம் - முழு வண்ணத்தில் என்று தங்களால் ஏற்கனவே உறுதி செய்யப்பட ஒன்று என்பதால் இரண்டாவது புத்தகத்திற்காக மட்டுமே இந்த விண்ணப்பம். இரண்டாவது குண்டு புத்தகத்தை முழு வண்ணத்தில் மட்டுமே வெளியிடவும். ப்ளீஸ்..!

      Delete
  38. தற்போது ஒரு இதழை எத்தனை பிரதிகள் வெளி இடுகிரிர்கள்
    புத்தக கண்காட்சியில் எந்த இதழ் வேகமாக விற்று முடித்தது
    இந்த இரண்டு ஆண்டுகளில் விற்பனையில் வெற்றிகரமான இதழ் என்று எதை கூறுவிர்கள்

    ReplyDelete
    Replies
    1. lion ganesh : கேள்விகள் எண் 2 & 3 -க்கு பதில்கள் ஒன்றே : சுட்டி லக்கி + Tex தீபாவளி ஸ்பெஷல் !

      Delete
  39. அன்பின் விஜயன் சார்,

    அடுத்த வருடம் குறித்தான அறிவிப்புகளுக்கு மனமார்ந்த வாழ்த்துகள். எப்படியும் உங்கள் பெண்டு கழன்று போவது உறுதி எனத் தெரிந்தும் நம் நண்பர்களுக்காக நீங்கள் எடுக்கும் முயற்சிகளுக்கு எனது நன்றிகளும்.

    போன வாரம் ஞாயிறு அன்று புத்தகத் திருவிழாவில் நமது ஸ்டாலுக்குப் போயிருந்தேன். இராதா அண்ணாச்சிக்கு சலாம் போட்டு உள்ளே நுழைந்தால் நண்பர்கள் கிங் விஸ்வாவும் சத்தியமூர்த்தியும் (காங்கேயம்) இருந்தார்கள். கொஞ்ச நேரம் நிற்கலாம் என ஆரம்பித்தது மதியம் ஒரு மணி முதல் மாலை ஆறு மணி வரை நேரம் போனதே தெரியவில்லை. குடும்பமாக குழந்தைகளோடு வந்த வாசகர்களின் பெரும்பாலான வோட்டு லக்கிக்கே - அதிலும் குறிப்பாக சுட்டி லக்கிதான் அன்றைய தினத்தின் சூப்பர் ஸ்டார். தனியாக வந்தவர்களுக்கோ டெக்ஸ் எங்கே எனும் கேள்விதான் முதன்மையாக இருந்தது. தீபாவளி மலரும் பூத வேட்டையும் செம ஓட்டம். பெரியவர்கள் பலருக்கும் நமது காமிக்ஸ் சார்ந்த மிகப்பெரிய நாஸ்டால்ஜியா இருக்கிறது. குறிப்பாக ஏன் மாயாவியும் ஸ்பைடரும் இல்லை என்கிற கேள்விக்கு பதில் சொல்லி மாளவில்லை. இதையெல்லாம் கணக்கில் கொண்டு ஆசிரியர் குறைந்தபட்சம் புத்தகத் திருவிழா சமயங்களிலாவது சில கறுப்பு வெள்ளை சூப்பர் ஸ்டார்களை வெளியிட (மறுபதிப்பு) வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.

    புத்தகக் கண்காட்சியின் சந்தோசங்களைப் பகிர்ந்து கொள்ளும் அதே வேளையில் சின்னதொரு மனக்குறையையும் சொல்ல வேண்டும். பெரும்பாலான குழந்தைகள் காமிக்ஸ் என்று உள்ளே வந்தபின்பு தமிழ் என்று அறிந்த பின்பாக முகம் சுழித்து விட்டுப் போனார்கள். அதிலும் சில பெற்றோர்கள் “ச்சீ ச்சீ தமிழ் புத்தகமா” என்று சொல்லிச் சென்றது வருத்தத்தோடு கோபத்தையும் உண்டாக்கியது. நம் தாய்மொழியில் வாசிப்பதென்பது குற்றமா? என்ன சொல்வதென்றே தெரியவில்லை.

    சரி விடுங்கள்.. ஜனவரி இதழ்கள் குறித்து.. எனது தரவரிசை..
    1. சாக மறந்த சுறா
    2. பயங்கரப் புயல்
    3. கமான்சே
    4. தோர்கல்

    தோர்கல் என்னை சுத்தமாகக் கவரவில்லை. இத்தனைக்கும் எனக்கு மிகவும் பிடித்தமான மாயாஜால பாணிக் கதை. ஆனாலும் ஏதோ ஒன்று குறைவதான உணர்வு. ஒருவேளை மற்ற கதைகள் வெளியான பிறகு எனது எண்ணம் மாறக்கூடும். பார்க்கலாம். கமான்சேவும் இந்த முறை ஒரு மாற்று கம்மிதான். ஆக மனதை ஆற்றுப்படுத்தியது தானைத்தலைவன் பிரின்ஸும் அண்ணன் பிரேசிலும்தான். குறிப்பாக பிரேசிலின் சாகசம் ஏதோ பாண்ட் படம் பார்ப்பதான உணர்வை ஏற்படுத்தியது. அட்டகாசம் போங்கள். அவரது அடுத்த சாகத்துக்காக ஆவலோடு காத்திருக்க வைத்து விட்டார் மனிதர்.

    பின்னூட்டம் நீண்டு விட்டது. இத்தோடு முடித்துக் கொள்வோம்.

    பிரியமுடன்,
    கார்த்திகைப்பாண்டியன்

    ReplyDelete
  40. கார்த்திகைப் பாண்டியன் : //பெரும்பாலான குழந்தைகள் காமிக்ஸ் என்று உள்ளே வந்தபின்பு தமிழ் என்று அறிந்த பின்பாக முகம் சுழித்து விட்டுப் போனார்கள். அதிலும் சில பெற்றோர்கள் “ச்சீ ச்சீ தமிழ் புத்தகமா” என்று சொல்லிச் சென்றது வருத்தத்தோடு கோபத்தையும் உண்டாக்கியது.//

    ஆங்கிலம் நம் வாழ்க்கையின் ஒரு பூதாகர அங்கமாகிப் போய் விட்டதை உணரும் போது வருத்தம் மேலோங்குவது நிஜமே ! ஆனால் யதார்த்தம் இது தான் என்றாகிய பின்னே , வருத்தம் கொள்வதை விட, அவர்களையும் கவர்ந்திட ஏதேனும் வழிகள் புலப்படுகின்றனவா என நமது சிந்தனைகளுக்கு வேலை தருவதே தேவலை என்று தோன்றுகிறது !

    ReplyDelete
  41. தங்களது தகவல்கள் அனைத்தும் மகிழ்ச்சி தருவன.
    லயன் 30-ஆம் ஆண்டு மலர் பல கதை( நாயகர்)களின் தொகுப்பு என வந்தால் மிக்க நன்று!

    ReplyDelete
  42. புதிய தலைமுறையில் நம்மை பற்றி...

    http://www.puthiyathalaimurai.tv/video-gallery/11027

    ReplyDelete
  43. அழகான, அருமையான பதிவுகள். (போனபதிவுக்கும் சேர்த்து).

    என்ன பொங்கலுக்கு ஊருக்குப்போய்விட்டு நிதானமா இப்பதான் வந்து தலைகாட்டுறீங்களா? ஒரே குஜாலா? என்கிறீர்களா.. :-))))

    ஆனால், உண்மை வேறு.

    உடல்நலமின்மை. செ.பு.கா அனுபவம் உட்பட இன்னும் நிறைய எழுத ஆசை. டைமிங் விசயங்கள் வேறு. இருந்தாலும் வழியில்லை, இன்னும் தேறியபாடில்லை.. சில தினங்களுக்குப் பின், (அடுத்த பதிவில்??) எழுதுகிறேன்.

    இருப்பினும், எழுதாவிட்டாலும் படிக்காமல் இருக்கமுடியவில்லை. ஆகவேதான் சிரமமாக இருப்பினும் இந்த பதிலை, பின்னூட்டங்களைப் பெறுவதற்காக டைப் செய்கிறேன். follow செய்யாமல் பின்னூட்டம் படிப்பது சிரமமாக உள்ளது. :-))))))

    ReplyDelete
    Replies
    1. டியர் ஆதி,

      குண்டு புக்குகளின் பெருமையை செ.பு.திருவிழா உதவியுடன் உலகறிந்துவரும் இந்த உன்னத வேளையில், 'குண்டு புக் க்ளப்'பை தோற்றுவித்த நீங்கள் இங்கே கூக்குரலிட்டு கொண்டாடி மகிழத் தாமதம் காட்டியது 'புதிய பணிச்சுமையால்' என்றே நினைத்திருந்தேன்... :(

      சீக்கிரமே நலம் பெற என் வாழ்த்துக்களும், வேண்டுதல்களும்...

      (அனுபவ) பின்குறிப்பு: அவரவர் தம் இல்லதரசியுடன் அடிக்கடி வாக்குவாதத்தில் ஈடுபடுவதைக் குறைத்துக்கொண்டாலே போதும்; உடல் நலத்திற்கு பெரிதாய் எந்தத் தீங்கும் நேர்ந்துவிடாது.
      அளவுகடந்த வாக்குவாதம் = ஆண்களுக்கு முடக்குவாதம்

      Delete
    2. அன்பு தோழா அனுபவக்குறைவுள்ள விஜய் பேச்சை கேட்க வேண்டாம்.. வாக்குவாதமாவது ஒன்றாவது

      நீ சொன்னா சரியாதான் இருக்கும் என்று தினமும் மனைவியிடம் சொல்லி பழகுங்கள்

      உடல் நலத்துக்கு மிக நல்லது. விரைவில் குணமடைய வாழ்த்துக்கள்

      (நாங்க இப்படித்தான் பிழைக்கிரோம்)

      Delete
    3. உடல் நலம் நல்லா இல்லாததற்கு ''வாக்கு வாதம்'' தான் காரணமா ..................ஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈ

      Delete
    4. ஆதி தாமிரா : // follow செய்யாமல் பின்னூட்டம் படிப்பது சிரமமாக உள்ளது//

      அடாது மழை பெய்தாலும்...விடாது பதிவுகளா ? நலம் பெற வாழ்த்துக்கள் !

      Delete
  44. Superb editions this month.
    really enjoyed reading..
    Thank u very much sir

    ReplyDelete
  45. == 'அடுத்த வருஷம், பெரூசாய்ய்ய்ய் ஏதாச்சும் வெளியிட்டு தூள் கிளப்பிடணும் !'என்ற சிந்தனை 2015-ஐ நோக்கியும், "மின்னும் மரணத்தை"ச் சுற்றியும் இப்போதே ஒரு உத்வேகம் உருவாகி வருவது நிஜம்!==
    அருமை.. அருமை.. இதற்குத்தானே ஆசைப்பட்டாய் செந்தில்குமாரா என மனம் துள்ளிக்குதிக்கிறது… :)

    =="மி.ம." தவிர 2015 சென்னை விழா சமயத்திற்கு இன்னுமொரு "மெகா சர்ப்ரைஸ்" காத்திருக்குமென்பதை மட்டும் இப்போதே சொல்லி வைத்து விடுகிறேன்!==
    தூள்..!

    ==இந்தப் புத்தக விழாவின் இன்னுமொரு படிப்பினை - கறுப்பு/வெள்ளை இதழ்கள் தொடர்பானதும் கூட ! கதையோ, நாயகரோ சிறப்பாய் இருக்கும் பட்சத்தில் அது b &W ஆக இருந்தாலும் விற்பனையில் தொய்விருக்காதென்று உணர முடிந்துள்ளது!==
    ஆஹா.. நல்லது நடந்தால் சந்தோஷமே..! (கார்சனின் கடந்தகாலம் மட்டும் வண்ணத்தில் வேண்டும் சார்… ப்ளீஸ்…)

    ஒரு சரியான புத்தக விநியோக முறையை உருவாக்க முடிகின்ற போது நல்ல தரத்தில் சுட்டித் தலைமுறைக்கென ஒரு பிரத்யேக காமிக்ஸ் இதழை அறிமுகம் செய்ய வாய்ப்புகள் இருக்குமென்றே நினைக்கத் தோன்றுகிறது ! பரபரப்பாய் - லட்சங்களில் அவற்றின் விற்பனை இருக்குமென்ற பகற்கனவுகள் இல்லாவிடினும், ஒரு modest விற்பனை எண்ணம் சாத்தியமாகும் என்ற நம்பிக்கை லேசாய்த் துளிர் விடுகிறது !

    சாத்தியமாகும் சார்.. நிதானமாய் ஆனால் அவசியம் சுட்டிகளுக்கென ஒரு தனி இதழ் வேண்டும்… ம்ம்ம்..2015 இன்னும் என்னென்ன ஆச்சரியங்கள் வைத்திருக்கிறதோ??!! :)

    ReplyDelete
  46. டியர் எடிட்டர்ஜீ !!!

    லயன் 30ஆவது ஆண்டு மலரை பற்றி பல்வேறு கருத்துக்களும்,அபிப்ராயங்களும் இங்கே வலம்வரும் சூழலில் அடியேனுக்கு தோன்றிய ஒரு சிந்தனை!

    ஆண்டு மலரை நமது முந்தைய ஸ்பெசல் இதழ்களை போல் "கதம்பமாக"வெளியிடக்கோரி நண்பர்கள் பலரும் கோரியுள்ளனர். ஆனால், நமது லயனின் நாயகர்கள் பலரும் கருப்பு&வெள்ளை ஆசாமிகள் என்பதால் அவர்களின் கோரிக்கையை நிறைவேற்றுவது நிச்சயம் சுலபமாய் இராது!

    அதே சமயம் லயன் 30ஆம் பிறந்தநாள் ஆண்டு மலரில் முழுக்க டெக்ஸ் வில்லர் கதைகள் என தாங்கள் முடிவெடுத்தால் மேற்படி நண்பர்கள் நிச்சயம் ஆட்சேபிக்க கூடும் என்பதையும் மறுப்பதற்கில்லை. இந்த "இடியாப்ப" சிக்கலை எப்படி தீர்ப்பது என்று யோசித்தே தலையிலுள்ள கேசத்தை கணிசமான அளவிற்கு நீங்கள் இழக்கும் அபாயத்தையும் மறுப்பதற்கில்லை.இதற்கு தீர்வுதான் என்ன...? என்று சிந்தித்தபோது அடியேனுக்கு தோன்றிய ஒரு "FLASH" இது!

    நமது "புரட்சி தீ"யில் ஒரு வசனம் வருமே நினைவிருக்கிறதா...? "ஒண்ணே ஒண்ணுன்னு இருந்தாத்தானே ஏகபோக உரிமை இருக்கமுடியும்.ரெண்டு ஆக்கிப்புடலாம்னே"!

    அதாவது நமது 30 ஆம் ஆண்டு மலரை -"மலர்கள்" ஆக்கிவிடலாமே ஸார் !!!
    இதுகுறித்து அடியேனின் அபிப்ராயங்கள் பின்வருமாறு -

    1. லயன் 30-ஆவது பிறந்தநாள் ஸ்பெசல் -இரண்டு புத்தகங்கள்.ஒன்று வண்ணத்தில் மற்றொன்று கருப்பு வெள்ளையில்!

    2. முதலாவது புத்தகம் முழுவண்ணத்தில் டெக்ஸ் வில்லர் டைஜஸ்ட் ரூ.500 விலையில்!

    3. இரண்டாவது புத்தகம் 2013 டெக்ஸ் தீபாவளி மலர் சைசில் கருப்பு வெள்ளையில் "கதம்ப" டைஜஸ்ட் ரூ.200 விலையில்!

    4. 2015 சென்னை புத்தக விழாவில் "இரண்டு குண்டு" போட, 2014 ஈரோடு புத்தக விழாவில் "இரண்டு குண்டு" போட்டு ஒரு ஒத்திகை பார்த்துவிடலாமே ;-)

    5. இந்த ஐடியாவை நண்பர்கள் நிச்சயம் ஆட்சேபிக்க மாட்டார்கள்.(என நம்புகிறேன்:-)

    6. ஈரோடு புத்தக கண்காட்சிக்கு இன்னும் 8 மாதங்கள் உள்ளன.அதற்குள் நமது வலைத்தளத்தின் PAGE VIEW ஒரு மில்லியன் ஆகிவிடும்.அதற்கு "ஸ்பெசல்" எங்கே...? என்று வாசக நண்பர்கள் கேட்டால் "அதுதான் இது" என இரண்டாவது குண்டு புத்தகத்தை காட்டி நீங்கள் "எஸ்" ஆகிவிடலாம் :-)

    7. அப்புறம் இறுதியாக ஒரு விஷயம்.இந்த "நாரதர் கலகம்" என்று சொல்வார்களே...? அதற்கும் அடியேனின் இந்த பதிவிற்கும் எந்த சம்பந்தமும் இல்லை.ஹிஹி!!!

    ReplyDelete
    Replies
    1. அடேயப்பா... அள்ளிட்டீங்க சாத்தான்ஜி!
      முருங்கை மரத்தில் தலைகீழாகத் தொங்கிக் கொண்டு யோசித்ததின் பலனாக, மொத்த ரத்தமும் மூளைக்குப் பாய்ந்திருப்பது புலனாகிறது. :D

      சாத்தானுக்கு ஜே! :)

      Delete
    2. ௫௦௦ வண்ண கதம்பம் +கருப்பு வெள்ளை ௨௦௦ விலையில் டெக்ஸ் !

      Delete
    3. முருங்கைக்காய் மரத்தாரை நானும் வழி மொழிகிறேன் .................

      பின்குறிப்பு ''முருங்கை மரத்தார் அல்ல''

      Delete
    4. நானும் வழி மொழிகிறேன்.

      Delete
    5. முருங்கை மரத்தில தலைகீழாக தொங்குவது வேதாளம் விஜய் .. அதுக்கு பாஸ் விக்கிரமாதித்தன்

      ஆனால் நம்மாளுக்கு பாஸ் அவரேதான்.. .அவரது அடையாளம் என்னன்னா ஒரு வாலும் கூர் காதும்

      கைல ஒரு கொம்பும் .... ஹேய்... ஹேய்... உங்க கற்பனை தப்பு அவர் புனிதசாத்தான்னுங்க

      Delete
    6. Senthil Madesh,

      ஹா ஹா! சாத்தான்ஜியின் கோரிக்கைகளை எடிட்டர் நிறைவேற்றலேன்னா சிவகாசி அலுவலகம் முன்பாக 'தலைகீழாய் தொங்கும் போராட்டம்' நடத்தப்போகிறாராம். அதுவும் லுங்கிய கட்டிக்கிட்டு! :D

      Delete
    7. அப்போ பெல்ட்டை பாதங்களில் கட்டவும்...

      Delete
    8. என்னா கொலவெறி...? என்ன வச்சி இப்படியா காமெடி பண்றது...:-)

      Delete
    9. // அப்போ பெல்ட்டை பாதங்களில் கட்டவும்...//

      ஹா ஹா ஹா! :D

      Delete
    10. பெல்ட்ஐ கழுத்துல கட்டும் நண்பர்களுக்கு நடுவில் கால்லதானே கட்டறாங்க ... நம்ப நண்பர்கள்

      ரொம்ப நல்லவர்கள்

      Delete
    11. saint satan : மல்லாக்கப் படுத்து விட்டத்தைப் பார்த்தவாறே சிந்திப்பது ஆந்தையாரின் ஸ்டைல் என்றால், தலை கீழாய்த் தொங்குவது சாத்தான்ஜியின் ஸ்டைலோ ?!

      எவ்விதமாய்த் தீர்மானித்தாலும் ஒரு சாராரால் - அல்லது மறு சாராரால் எனது சொற்பக் கேசத்துக்கு சூப்பர் ஆபத்து காத்திருப்பதென்னவொ நிஜமே ! So - இப்போதே எங்களது இன்சூரன்ஸ் ஏஜென்டிடம் இதற்கேதும் பாலிசி உள்ளதா என்று கேட்பதாக உள்ளேன் ! ரூ.500 + ரூ.200 என்று குண்டு மழை பொழிந்து கொண்டே சென்றால் நிறைய வீட்டுச் சமையல் பாத்திரங்கள் விண்ணில் பறக்கும் அபாயம் இல்லாதில்லை - ஏற்கனவே 3 இல்லத்தரசிகள் சென்னையில் புகார் பட்டியல் வாசித்துச் சென்றுள்ளனர் - "இவர் காமிக்ஸையும், கம்ப்யூட்டரையும் கட்டிக் கொண்டே அலைகிறார் என்று !!" அதனையும் சற்றே கவனத்தில் கொள்வது நலமாகாதா ?

      Delete
  47. மீண்டும் ஒரு நல்ல பதிவு.



    ReplyDelete
  48. 1. 'டெக்ஸ் தீபாவளி மலர் சைசில் கருப்பு வெள்ளையில் "கதம்ப" டைஜஸ்ட் ரூ.200 விலையில்!' - ok
    2. டெக்ஸ் கதைகள் 500 விலையில் கலரில் இரண்டு அல்லது மூன்று கதைகள் மட்டுமே வெளி இட முடியும் (டெக்ஸ் கதை ஒன்று + 9 மற்ற கதாநாயகர்கள் கதைகள் என்றால்தான் நன்றாக இருக்கும் )

    ReplyDelete
    Replies
    1. டியர் லயன் கணேஷ் !!!

      ///டெக்ஸ் கதை ஒன்று + 9 மற்ற கதாநாயகர்கள் கதைகள் என்றால்தான் நன்றாக இருக்கும் )///

      மற்ற கதாநாயகர்கள் வண்ணத்தில் இல்லையே தல!!!

      லக்கி லுக் இருக்கிறாரே...? என்று கேட்கலாம்.அவர் கதைகளை தனி இதழாக வெளியிடுவதே சிறந்தது.ஸ்பெசல் இதழ்களில் வெளியிட்டால் குழந்தைகளும்,சிறுவர்களும் லக்கியை "மிஸ்" செய்துவிடும் அபாயம் உள்ளது.

      Delete
  49. இன்றுடன் நமது ஸ்டாலில் வந்து இரும்புக் கை மாயாவி காமிக்ஸ் இல்லையா? என்று கேட்டவர்களின் எண்ணிக்கை 11, 724. (அதன் பிறகு தொடர்ந்த கேள்வி - சரி, மாயாவி தான் இல்லை, ஜானி நீரோ, லாரன்ஸ்-டேவிட் கதையுமா இல்லை? அட, விட்டா மந்திரவாதி மாண்ட்ரேக் காமிக்ஸ் கூட இல்லைன்னு சொல்லுவியா?)

    இதில் என்னுடைய சட்டையை பிடித்து சண்டை போட வந்தவர்கள் 100க்கும் மேல்.

    இந்த மேலதிக தகவல் ஒரு புள்ளி விவரக் குறியீட்டிற்க்காக மட்டுமே. எண்ணிக்கை 15,000த்தை தாண்டும் என்று நான் நண்பரிடம் Bet கட்டியிருக்கிறேன்

    ReplyDelete
    Replies
    1. Just curious, இம்மாதிரியான பழைய வாசகர்கள் தற்போது புதிய புத்தகங்களை வாங்கிச்செல்கிறார்களா?



      Delete
    2. Ramesh,

      இல்லவே இல்லை.

      இவர்களில் 5% கூட நமது புதிய புத்தகங்களை பிரித்து பார்க்காமலேயே சென்று விட்டனர் (95%).

      அந்த மீதம் இருக்கும் 5% மக்கள் புத்தகங்களை பிரித்து பார்த்துவிட்டு, ஏதாவது ஒரு கமெண்ட் சொல்லிவிட்டு சென்றனர்.

      A - அந்த காலத்தில் இருந்த மாதிரியே இல்லை

      B - கதையெல்லாம் வேற மாதிரி இருக்கே? எங்களை மாதிரி வயசானவங்களுக்கு செட் ஆகுமா?

      C - அப்போ அந்த கதையை விரும்பி படிச்சேன், இப்போ அதே கதை மறுபடி இருந்தால் பழைய நினைவுகளுக்காக மறுபடியும் வாங்கி படிப்பேன். இது கதையை வாசிப்பதை விட மேலான ஒரு நாஸ்டால்ஜியா விஷயம். தம்பி உங்களுக்கு சொன்னா புரியாது.

      D - இந்த கலரில் இருக்கும் கதையை விட கருப்பு வெள்ளையில் படிச்சது தான் பிடிச்சுருக்கு, ஆனா இந்த டெக்ஸ் வில்லர், டையபாலிக் எல்லாமே கேள்விப்படாத ஆளுங்க. 20 வருஷம் கழிச்சி படிக்கும்போது தெரிஞ்ச கதையைத்தான் முதலில் படிக்க விரும்புகிறேன்

      Delete
    3. Thanks King Viswa for the info - really helpful!

      ம்ம்ம்... அப்படீன்னா இதுக்கு அர்த்தம்... (யாரும் என்னை அடிக்க வராதீங்க..) நாம பழைய வாசகர்களுக்காக பழைய ஹீரோ கதைகளை வெளியிடுவதை நிறுத்திவிட்டு (அல்லது குறைத்துக்கொண்டு) இந்நாளில் எந்தமாதிரி கதைகள் புதிய வாசகர்களால் வரவேற்கப்படுகிறதோ அதிலே முழு ஈடுபாட்டையும் காட்டலாம். அரதப்பழசு ஹீரொக்களை முடிந்தவரையில் கதம்ப - குண்டு புத்தங்களில் சேர்த்துவிடலாம் - ரொம்ப அவசியப்பட்டால் மட்டும்.

      என்னுடைய Personal observation: நான் காமிக்ஸ் அறிமுகமில்லாத என்னுடைய நண்பர்கள் சிலரிடம் (age group of around 25 to 35) நமது புத்தங்களைக் காட்டியபோது அவர்களுடைய Reaction-ல் ஒரு Pattern-ஐ பார்த்தேன். யாருமே Realistic ஆக இருக்கும் "சித்திரங்களை" மதிக்கவில்லை - கவனிக்கவும், இத்தனைக்கும் அவர்கள் குழந்தைகளல்ல. Realistic-ஆக இருக்கும் "கதைகள்" சுத்தமாக எடுபடவில்லை (May be it works only for novels?) . கனமான கதைக்களங்கள் இந்நாளைய (நம்மூர்) மக்களால் பொருத்தமான பொழுதுபோக்காக கருதப்படுவதில்லை என்பது புரிகிறது.

      எல்லோருமே எளிமையான Plain color Cartoon கதைகளையே விரும்புகிறார்கள். குறிப்பாக லக்கி லூக் கதை சிக்பில்லைவிட ஒருபடிமேலேயேதான் உள்ளது. காரணத்தை யோசித்துப்பார்த்தபோது என் அறிவுக்கு எட்டியது: ஜாலி ஜம்பரின் Presence. கார்ட்டூன் என வரும்போது சித்திரங்களில் Animal Characters இடம்பெறுவது கூடுதல் Attraction-ஐ அளிக்கிறது. இவ்வகைக் கதைகளின் கதாபாத்திரங்களில் தென்படும் innocence பெற்றோர்களுக்கு கொஞ்சம் பயத்தை / தயக்கத்தைக் குறைக்கிறது என்றே நினைக்கிறேன்.

      @ Vijayan Sir, So any possibilities for new cartoon character introductions? ;)

      Delete
    4. கண்ணெதிரே நடக்கும் சம்பவங்களை தொகுத்து எழுதுவதுதான் உங்கள் ஊரில் கற்பனை வளம் + நகைச்சுவை உணர்வு என்றால் அந்த ஊருக்கு நான் கண்டிப்பாக வழி தேட மாட்டேன்.

      Delete
    5. டியர் விஸ்வா,

      எந்தளவுக்கு நட்பாக பழகுகிறீர்களோ அதே அளவுக்கு ஒரு நொடியில் விலகவும் துணிகிறீர்கள் :(

      அந்தகால பிரிண்ட் ரன்னுக்கு மிகவும் நெருக்கமாக நீங்கள் கூறிய எண்ணிக்கை (11724) இருப்பதாக எனக்கு தோன்றியதால் தான் அவ்வாறு எழுதினேன். மற்றபடி உள்நோக்கம் எல்லாம் எதுவும் இல்லை. எனவே உங்களுடைய உணர்வுக்கு மதிப்பளித்து என்னுடைய பதிவை Delete செய்து விடுகிறேன்.

      நன்றி.

      Delete
    6. // கண்ணெதிரே நடக்கும் சம்பவங்களை தொகுத்து எழுதுவதுதான் உங்கள் ஊரில் கற்பனை வளம் + நகைச்சுவை உணர்வு என்றால் அந்த ஊருக்கு நான் கண்டிப்பாக வழி தேட மாட்டேன். //

      @ மிஸ்டர் மரமண்டை, இப்பவாவது சொல்லுங்க, உங்க ஊர் எது? :D

      Delete
    7. Ramesh Kumar: //இப்பவாவது சொல்லுங்க, உங்க ஊர் எது?//

      என் ஊருக்கு வழி தேட மாட்டேன் என்று நண்பர் விஸ்வாவே கூறிவிட்டார் :(

      இப்பொழுது என் ஊருக்கு வழி சொன்னால் அவரை நய்யாண்டி செய்வதாக அமைந்து விடாதா :(

      Delete
    8. அடச்ச... அசந்த நேரத்தில் Detail-ல வாங்கலாம்னு பார்த்தால் நடக்கமாட்டேங்குது! :D

      Just kidding! :)

      Delete
    9. நாட்டாமை நம்மையும் மதித்து கேட்கிறாரே என்று கொஞ்ச நேரத்தில் ஏமாந்திருப்பேன். நல்லவேளை :D

      Delete
    10. @ Ramesh kumar

      அவரு அட்ரஸ் குடுக்கலேன்னா என்னங்க, நாம குடுப்போம்! 'உங்க காமிக்ஸ் சேவையைப் பாராட்டி ஒரு பாராட்டு விழா நடத்தறோம். வந்து சேருங்க'ன்னு சொல்லி அட்ரஸ் குடுப்போம்.
      இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு மற்ற நண்பர்கள் நமக்கு பாராட்டுவிழா எடுக்க வாய்ப்பிருக்கு. ன்னான்றீங்க? :D

      Delete
    11. டியர் ரமேஷ்,

      //யாருமே Realistic ஆக இருக்கும் "சித்திரங்களை" மதிக்கவில்லை - கனமான கதைக்களங்கள் இந்நாளைய (நம்மூர்) மக்களால் பொருத்தமான பொழுதுபோக்காக கருதப்படுவதில்லை என்பது புரிகிறது//

      அப்படியெல்லாம் இல்லை :) ஒரு குறிப்பிட்ட வயதிற்கு மேல் எளிமையான Plain color Cartoon கதைகள் அதிகமாக ஈர்ப்பதில்லை. களம் மறந்து ரசிக்கவோ, இடம் மறந்து சிரிக்கவோ இயலாது என்பதே உண்மை. அதில் நீங்கள் கூறியபடி விதிவிலக்கு இருக்கலாமே ஒழியே அதுவே பெரும்பான்மையான கருத்தாக ஏற்றுக்கொள்ள இயலாது என்பது என் கருத்து. அதனால் தான் இன்று புதிதாக சன்ஷைன் கிராபிக் நாவல் வரிசையை எடிட்டர் கொண்டு வந்துள்ளார். தற்போது நான் மிகவும் விரும்பி படிக்கும் கதாநாயகர்கள்/புத்தகங்கள் ;

      1.லார்கோ வின்ச்
      2.வேய்ன் ஷெல்டன்
      3.கேப்டன் டைகர்
      4.இரத்தப்படலம் - XIII
      5.கிராபிக் நாவல்கள்

      ஏனெனில் கனமான கதைக்களமும், Realistic ஆக இருக்கும் சித்திரங்களும் தான் காரணம்.

      Delete
    12. // அப்படியெல்லாம் இல்லை :) ஒரு குறிப்பிட்ட வயதிற்கு மேல் எளிமையான Plain color Cartoon கதைகள் அதிகமாக ஈர்ப்பதில்லை. //

      நானும் அப்படிதான் நம்பிக்கொண்டிருந்தேன். ஏனெனில் நான் பார்த்தவரையில் ஓரளவுக்கு காமிக்ஸுடன் பரிச்சயமான நண்பர்களுக்கும் (எனக்கும்) சித்திரங்களின் நுணுக்கமே பிரதானமாகத் தெரிந்தது.

      ஆனால் காமிக்ஸ் பக்கமே எட்டிப்பார்த்திராத சிலரிடம் நான் காண்பித்தபோது ரொம்ப Realistic-ஆன சித்திரங்களை ஏதோ Photo போல பார்க்கிறார்கள் (I mean they just not give attention for that). இம்மாதிரி சித்திரங்கள் / கதைகள் அவர்களுடைய கண்களுக்கு கூடுதல் Strain-ஆக உள்ளதே தவிர Attraction இல்லை. காமிக்ஸ் சிறுபிள்ளைகள் சமாச்சாரமில்லை என்பதுபோலவே கார்ட்டூனும் சிறுபிள்ளை சமாச்சாரமில்லை! காமிக்ஸை விட கார்ட்டூன்களை இரசிப்பவர்கள் அதிகம்போலும்!

      Delete
    13. ஆழ்ந்த கதைக்களமும் அழகான சித்திரங்களும் ( Dedicated to நாட்டாமை)

      Part 1 of கொஞ்சம் தான் ;) 18​ minus (18-)

      காலம் காலமாக அல்லது புத்தகம் தோறும் ஒரே கெட்டப்பில் தோன்றும் கதாப்பாத்திரங்கள் குழந்தைகளுக்கும், சிறுவர்களுக்கும் வேண்டுமானால் அதீத ஈர்ப்பை தருவதாக அமையும் ; சூப்பர்மேன் ஸ்பைடர்மேன் போன்று அவர்களின் உருவமும் சிறுவர்களின் மனதில் ஆழ பதிகிறது. Plain color சித்திரங்களை அவர்களால் எளிதாக உள்வாங்கிக் கொள்ள முடிகிறது ; கார்ட்டூன் பாணியிலான ஓவியங்கள் அவர்களுக்கு சந்தோஷத்தை (நய்யாண்டி) தருவதாகவும் அமைகிறது ; லாஜிக் இல்லாத விஷயங்கள் யாவும் தம் மனம் கவர்ந்த கதாநாயகனின் அற்புதம் நிகழ்த்தும் அதிசிய சக்தியாகவும் உணரப்படுகிறது/ஆழமாக நம்பப்படுகிறது.

      ஆனால் இவையனைத்தும் 18+ வாசகர்களுக்கு உள்ள ஈர்ப்பை குறைப்பதாகவே அமையும். அதனால் தான் நம்மூரில் காமிக்ஸ் என்பது குழந்தைகளுக்கானது என்ற சொற்பதம் எங்கேயும் எப்போதும் மக்களால் எடுத்து வைக்கப்படுகிறது. அதனால் தான் பெரும்பான்மையான லயன் முத்து வாசகர்கள் தத்தம் கல்லூரி படிப்பில் அடியெடுத்து வைத்தபோது காமிக்ஸ் ரசனையை அடியோடு தொலைத்து வைத்தார்கள் :)

      Delete
    14. ஆழ்ந்த கதைக்களமும் அழகான சித்திரங்களும் ( Dedicated to நாட்டாமை)

      Part 2 of கொஞ்சம் தான் - அசுவாரசியம்

      ஆனால் அதே நேரம் ஒரே உடையில் காலமெல்லாம் தோன்றி வரும் லக்கி லூக், சிக் பில், குள்ளன், கிட் ஆர்ட்டின், ஷெரிப் டாக் புல், மதியில்லா மந்திரி, etc., etc., போன்றவர்களின் கதையை பெரியவர்களும் ரசிக்க ஒரே காரணம் அதன் கதைக்களமும் மொழிபெயர்ப்பும் தான். ஒருவேளை சுவாரசியமில்லாத கதைக்களமும் சிரிப்பை தோற்றுவிக்காத மொழிபெயர்ப்பும் தொடர்கதையாக இருக்குமானால் - வாசகர்கள் இவைகளை குழந்தைக்களுக்கானது என்று நிரந்தரமாக ஒதுக்கி வைத்து விடக்கூடும் சாத்தியக்கூறுகள் அதிகம். லாஜிக் இல்லாத கதைகள் நாளடைவில் சலிப்பை தருவதாகவே அமைந்துவிடும்.

      உதாரணத்திற்கு காமிக்ஸ் - கதையை உயிர் என்றும் சித்திரங்களை உடலென்றும் கூறலாம். இவையிரண்டையும் கொண்டு ; இளமையில் இருக்கும் அத்தனை காரணிகளும் ஒரு கதையோட்டத்தில் கலக்கும் போது தான் அது மிகப்பெரிய வெற்றி தருவதாக அமைகிறது. தற்சமய உதாரணத்திற்கு லார்கோ வின்ச், வேய்ன் ஷெல்டனை கூறலாம்.

      Delete
    15. ஆழ்ந்த கதைக்களமும் அழகான சித்திரங்களும் ( Dedicated to நாட்டாமை)

      Part 3 of 3 - காமிக்ஸ் படிகள்

      புதியதாக பார்க்கும்/படிக்கும் எவரையும் காமிக்ஸின் முதல் படி மட்டுமே சட்டென கவர்ந்திழுப்பதாகவே அமையும். கார்ட்டூன் பாணியிலான ஓவியங்கள் ; சிம்பிளான கதைகள்/சித்திரங்கள் அவர்களுக்கு எளிதாக ரசிக்கத் தக்கதாக காட்சியளிக்கிறது. அவர்கள் தொடர்ந்து படிக்க எத்தனிக்கும் போது லாஜிக் இல்லாத கதைகள் - அவர்களுக்கு அசுவாரசியத்தை ஏற்படுத்தி அவர்களை அடுத்த படியில் ஏறவைக்கும்.

      அப்படி காமிக்ஸ் என்ற காட்டு பங்களாவின் ஒவ்வொரு படியாக ஏறி கடைசியாக வீட்டிற்குள் நுழைந்து ஹாயாக தூங்கி எழுந்தப்பின் - அடுத்தது என்ன ? என்று யோசிக்கும் போது தான் அங்கே கிராபிக் நாவல் இனிக்கிறது. அதுமட்டுமல்ல ஒரு காமிக்ஸ் கதையை படித்தது போன்ற திருப்தியான மனோநிலையை தருவதாகவும் அமைகிறது. இவையும் சலித்து ; இதையும் கடந்து மொட்டை மாடிக்கு கலவர காற்று வாங்கச் செல்லும் வாசகர்களும் உலகமெங்கும் இருக்கிறார்கள். அவர்களுக்காக உருவாக்கப்படும் காமிக்ஸ்கள் தான் - இரத்தவெறி பீடிக்கும் கதைகளும், இதயத்தை பதறவைக்கும் இரத்தம் தெறிக்கும் சித்திரங்களும், தவறான உறவுமுறை சித்தரிப்புகளும், உறவு மீறல்களும் ஆகும் :(

      Delete
    16. // புதியதாக பார்க்கும்/படிக்கும் எவரையும் காமிக்ஸின் முதல் படி மட்டுமே சட்டென கவர்ந்திழுப்பதாகவே அமையும். கார்ட்டூன் பாணியிலான ஓவியங்கள் ; சிம்பிளான கதைகள்/சித்திரங்கள் அவர்களுக்கு எளிதாக ரசிக்கத் தக்கதாக காட்சியளிக்கிறது. //

      Yes, அந்த முதல்படிதான் ரொம்ப காலமாக நம்மூரில் Missing என்கிறேன். அதனால் எளிமையான கதை/சித்திரங்களுக்கு பெரிய Demand உள்ளது என்று அர்த்தமில்லை. ஆனால் முயற்சி செய்யப்படாத களமாக இருக்கிறது.

      // அவர்கள் தொடர்ந்து படிக்க எத்தனிக்கும் போது லாஜிக் இல்லாத கதைகள் - அவர்களுக்கு அசுவாரசியத்தை ஏற்படுத்தி அவர்களை அடுத்த படியில் ஏறவைக்கும். //

      லக்கி லூக் மற்றும் ப்ளூ கோட்ஸ் கதைகள் கொஞ்சம் Balanced ஆக இருக்கிறது. ஒரு எளிய Starter-ஆகவும், அதே நேரம் தொடர்ச்சியான வாசிப்புக்கும் பொருந்துகிறது. இவற்றுக்கு இணையான கதைகள் நமக்குக் கிடைக்கும்பட்சத்தில் Risk குறையும். இவற்றில் Deep-ஆக Focus பண்ணலாம் என்கிறேன். ;)

      Delete
    17. @ ALL : எக்கச்சக்க கருத்துப் பரிமாற்றத்தின் வால் பகுதியில் அடியேனின் two bits :

      1.முந்தைய நாயகர்கள் ; கதைகளைக் கோரும் மூத்த வாசகர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பது அவசியமே ! ஆனால் அந்த nostalgia -வின் பொருட்டே அதே 13 மாயாவி + ஸ்பைடர் + ஜானி நீரோ கதைகளின் மறுபதிப்புகளோடு 'ரிங்கா - ரிங்கா - ரோசெஸ்' பாடிக் கொண்டே சுற்றி வருவது நிச்சயமாய் நல்ல வியாபாரமாய் இருப்பதைத் தாண்டி வேறு ஏதும் சாதிக்கப் போவதாய் எனக்குப் படவில்லை !

      2.சின்னதானதொரு வாசக வட்டத்தினுள் இள இரத்தம் புகுந்திடக் கதவுகள் முறையாய்த் திறந்து வைக்கப்படாது போயின் - மும்மூர்த்திகளோடு நாமும் பரணில் கூட்டுக் குடித்தனம் செய்திடும் நாள் அதிக தொலைவில் இராது என்பதே எனது அபிப்ராயம் !

      3.அதற்காக மும்மூர்த்திகளின் முகத்தோடு கதவை அறைந்து சாத்தி விட்டோமென நான் சொல்லப் போவதில்லை ; புதிய வெளியீடுகள் சீராய் ; தடையின்றி வெளியிடும் அதே வேளையில் - இன்னொரு பக்கமாய் இது போன்ற மறுபதிப்புகளுக்குள்ளும் கால் பதிக்க நமக்கு அவகாசம் + முதலீடு சாத்தியமாக இன்னும் கொஞ்ச காலம் ஓடிட வேண்டும் ! அந்த வேளையில் - புதியன சிறிதும் பாதிக்கப்படாது - இஷ்டப்பட்டோர் மாத்திரமே வாங்கிக் கொள்ளும் விதமாய் மாயாவி & கோ.வை புழக்கத்துக்குக் கொண்டு வருவோம் !

      4.கார்ட்டூன் பாணிக் கதைகள் புதியவர்களைச் சென்றடைவதில் இதர கதைகளை விட முன்னணியில் இருப்பதை நிச்சயம் மறுப்பதற்கில்லை ! எனக்கே எழுதும் போதும் சரி ; எடிட்டிங் செய்யும் போதும் சரி - ஒரு கார்ட்டூன் கதையில் கிடைக்கும் குழப்பமற்ற சுதந்திரம் ரொம்பவே பிடிக்கும் ! சமீபமாய் நிறைய வாக்குறுதிகளை அள்ளித் தெளித்துக் கொண்டே போவதால் - கார்ட்டூன் அறிமுகம் பற்றி உரிய வேளையினில் சொல்கிறேனே !

      Delete
    18. // சமீபமாய் நிறைய வாக்குறுதிகளை அள்ளித் தெளித்துக் கொண்டே போவதால் - கார்ட்டூன் அறிமுகம் பற்றி உரிய வேளையினில் சொல்கிறேனே //

      Ha ha ha LOL.

      Delete
    19. //காலம் காலமாக அல்லது புத்தகம் தோறும் ஒரே கெட்டப்பில் தோன்றும் கதாப்பாத்திரங்கள் குழந்தைகளுக்கும், சிறுவர்களுக்கும் வேண்டுமானால் அதீத ஈர்ப்பை தருவதாக அமையும் ;//
      தவறான எண்ணம் எப்போதும் போல ! இப்போதும் ஸ்பைடரின் பழைய தரமான கதைகளோ, அல்லது ஆர்ச்சியின் அற்புதமான கதைகளோ கதை செல்லும் வேகமோ அல்லது குழப்பமில்லா கதைகளோ யாரையும் கவர்ந்து விடும் !
      ஒரு மாயாவியின் கதை அல்லது வேதாளனின் கதை விறுவிறுப்பாய் ,அடுத்து எண்ண நடக்கும் என தூண்டிய படி நம்மை படிக்க வைத்தால் வெற்றி நிச்சயம் !
      ஒரு கதை எதிர் பார்ப்பை ஏற்படுத்த வேண்டும் ! அவ்வளவுதான் ....இதில் a கிளாஸ் , c கிளாஸ் என்று ஏதுமில்லை ! ஏதோ மிக சிறந்த ஒன்றும் புரியாத ,பிறரை கவராத ஒன்றை வெளியிட்டு விட்டு அறிவுலக ஜீவிகள் போல திரை படங்களை விமர்சிப்பது போல கதைகளும் விமர்சிக்க படுவது தவறு !
      சிறு வயதில் படித்த டெக்ஸ் இன்றும் ஒரே மாதிரியாகத்தான் வந்து கொண்டிருக்கிறது ! ஆனால் தொடர்ந்து லயனை தாங்கி வந்த தூண்தானே ! காரணம் விவரிக்க இயலா விறுவிறுப்பு !
      பெரிய நடிகர்கள் தொடர்ந்து மசாலா கதைகளை கொடுத்து இன்னும் ஸ்டாராக உலா வருவதும் , சிலர் வித்தியாசம் காட்டுகிறோம் என கையை சுட்டு கொண்டதும் , கேட்டால் ரசனை இல்லாதவர்கள் , நாங்கள் கலையை வாழ வைக்கிறோம் என புருடா விடுவதும் சகஜமாய் உலா வரும் விஷயங்கள் !
      பெரும்பான்மையானவர்கள் எண்ண கேட்கிறார்கள் அதனை வெளியிடுவோம் என்பதில்தான் சூட்சுமம் உள்ளது !

      Delete
    20. //லாஜிக் இல்லாத விஷயங்கள் யாவும் தம் மனம் கவர்ந்த கதாநாயகனின் அற்புதம் நிகழ்த்தும் அதிசிய சக்தியாகவும் உணரப்படுகிறது/ஆழமாக நம்பப்படுகிறது.

      ஆனால் இவையனைத்தும் 18+ வாசகர்களுக்கு உள்ள ஈர்ப்பை குறைப்பதாகவே அமையும்.//
      மீண்டும் தவறு ! 18 வயது வாசகர்களிடம் இதனை கேளுங்கள் வாய் விட்டு சிரிப்பார்கள் ! இப்போதும் லாகிக் இல்லாத படங்களை ,சூப்பர் ஹீரோக்கள் கதைகளை சிரியவர்கள்தான் பார்க்கிறார்கள் என்று யார் சொன்னார்கள் ! ஒரு கட்டி போடும் கதை அது ஒன்றுதான் தேவை , அப்படி அமைந்து விட்டால் அவை யாவும் அடி பட்டு போய்ய் விடும் !

      Delete
    21. //ஒருவேளை சுவாரசியமில்லாத கதைக்களமும் சிரிப்பை தோற்றுவிக்காத மொழிபெயர்ப்பும் தொடர்கதையாக இருக்குமானால் - வாசகர்கள் இவைகளை குழந்தைக்களுக்கானது என்று நிரந்தரமாக ஒதுக்கி வைத்து விடக்கூடும் சாத்தியக்கூறுகள் அதிகம். லாஜிக் இல்லாத கதைகள் நாளடைவில் சலிப்பை தருவதாகவே அமைந்துவிடும்.

      உதாரணத்திற்கு காமிக்ஸ் - கதையை உயிர் என்றும் சித்திரங்களை உடலென்றும் கூறலாம். இவையிரண்டையும் கொண்டு ; இளமையில் இருக்கும் அத்தனை காரணிகளும் ஒரு கதையோட்டத்தில் கலக்கும் போது தான் அது மிகப்பெரிய வெற்றி தருவதாக அமைகிறது. தற்சமய உதாரணத்திற்கு லார்கோ வின்ச், வேய்ன் ஷெல்டனை கூறலாம். //
      மிக சரி காமெடி கதைகளை வெகுவாரியாய் ரசிப்பார்கள் என்பதே கார்ட்டூன்களின் ஆதிக்கத்திற்கு காரணம் !

      Delete
    22. //காலம் காலமாக அல்லது புத்தகம் தோறும் ஒரே கெட்டப்பில் தோன்றும் கதாப்பாத்திரங்கள் குழந்தைகளுக்கும், சிறுவர்களுக்கும் வேண்டுமானால் அதீத ஈர்ப்பை தருவதாக அமையும் ;

      //ஆனால் அதே நேரம் ஒரே உடையில் காலமெல்லாம் தோன்றி வரும் லக்கி லூக், சிக் பில், குள்ளன், கிட் ஆர்ட்டின், ஷெரிப் டாக் புல், மதியில்லா மந்திரி, etc., etc., போன்றவர்களின் கதையை பெரியவர்களும் ரசிக்க ஒரே காரணம் அதன் கதைக்களமும் மொழிபெயர்ப்பும் தான். //
      முரண் !

      Delete
    23. //அப்படி காமிக்ஸ் என்ற காட்டு பங்களாவின் ஒவ்வொரு படியாக ஏறி கடைசியாக வீட்டிற்குள் நுழைந்து ஹாயாக தூங்கி எழுந்தப்பின் - அடுத்தது என்ன ? என்று யோசிக்கும் போது தான் அங்கே கிராபிக் நாவல் இனிக்கிறது. அதுமட்டுமல்ல ஒரு காமிக்ஸ் கதையை படித்தது போன்ற திருப்தியான மனோநிலையை தருவதாகவும் அமைகிறது. இவையும் சலித்து ; இதையும் கடந்து மொட்டை மாடிக்கு கலவர காற்று வாங்கச் செல்லும் வாசகர்களும் உலகமெங்கும் இருக்கிறார்கள். அவர்களுக்காக உருவாக்கப்படும் காமிக்ஸ்கள் தான் - இரத்தவெறி பீடிக்கும் கதைகளும், இதயத்தை பதறவைக்கும் இரத்தம் தெறிக்கும் சித்திரங்களும், தவறான உறவுமுறை சித்தரிப்புகளும், உறவு மீறல்களும் ஆகும் :(//
      மீண்டும் தவறு வன்முறை கதைகளை ,தவறான உறவுமுறை சித்தரிப்புகளும் சிலர் ரசிக்கலாம் ! தேடல் என்பது அறிவிஜீவிகளுக்கு , புதுமை நாடிகளுக்கு தேவை படலாம் ! பொழுது போக்கிற்காக படிக்கும் அதிக படியான மக்களுக்கு இவை தேவை அல்ல !

      //காமிக்ஸ் - கதையை உயிர் என்றும் சித்திரங்களை உடலென்றும் கூறலாம். இவையிரண்டையும் கொண்டு ; இளமையில் இருக்கும் அத்தனை காரணிகளும் ஒரு கதையோட்டத்தில் கலக்கும் போது தான் அது மிகப்பெரிய வெற்றி தருவதாக அமைகிறது. தற்சமய உதாரணத்திற்கு லார்கோ வின்ச், வேய்ன் ஷெல்டனை கூறலாம். //

      இங்கே லாஜிக் இல்லை ! சூப்பர் மேன் இல்லை ! லார்கோவால், ஷெல்டனால் முடியும் என நம்பும் வகையில் செல்லும் கதையும் , அதன் விறுவிறுப்பும் , எதிர் பார்ப்புமே வெற்றிக்கு காரணம் !
      என்ன நடக்குமோ எனும் பதைபதைப்பும் சோக காவியங்களுக்கு நம்மை சபாஸ் போட வைக்கும் ! எமனின் திசை மேற்கு !
      நாஸ்டியாலஜி எனும் ஒரு பதம் அழகாய் நம்மை ஏமாற்றி வருகிறது ! ஏன் இப்போதைய சிறார்கள் யார் அந்த மினி ஸ்பைடர் போன்ற கதைகளையோ அல்லது சைத்தான் விஞ்சானியையோ ரசிக்க மாட்டார்களா !
      டைகர் மின்னும் மரணமோ அல்லது தங்க கல்லறையோ நம்மை கட்டி போடவில்லையா ! இரத்த தடம் ஏன் விமர்சனத்திற்கு ஆளானது ! வேங்கையின் சீற்றம் ஏன் வெகுவாய் கவரவில்லை ! விறு விருப்பு குறைவு ! காதா பாத்திரம் வழி மாறி பயணம் செய்தது இவைதானே !

      Delete
    24. பதின்மூன்று நீண்ட கதை என்றாலும் வெற்றி பெற்றது ! ஆனால் பாகம் பாகமாக வந்தது ! இப்போது நாம் வேலை , வேலை என அதிலே பிசியாக இருப்பதால் ரசிப்பதில்லை ! ஒரே பாகமாக லார்கோ வந்தாலும் தள்ளி வைத்தே படிப்போம் ! நேரம் கிடைக்கும் போது படிப்போம் ! ஒரே மூச்சில் படிக்க நாம் மீண்டும் தொலைத்த சிறு வயதிற்குள் செல்ல வேண்டும் !

      Delete
    25. //4.கார்ட்டூன் பாணிக் கதைகள் புதியவர்களைச் சென்றடைவதில் இதர கதைகளை விட முன்னணியில் இருப்பதை நிச்சயம் மறுப்பதற்கில்லை ! //
      சரியே !
      //2.சின்னதானதொரு வாசக வட்டத்தினுள் இள இரத்தம் புகுந்திடக் கதவுகள் முறையாய்த் திறந்து வைக்கப்படாது போயின் - மும்மூர்த்திகளோடு நாமும் பரணில் கூட்டுக் குடித்தனம் செய்திடும் நாள் அதிக தொலைவில் இராது என்பதே எனது அபிப்ராயம் ! //
      சார் கதையின் தேர்வுகள் சரியாக அமைந்தால் யார் வந்தாலும் ரசிப்பார்கள் ! இப்போதைய தரத்தில் , சரியான கதை களங்களில் மாறு படாமல் தொடருங்கள் வெற்றி எளிதே ! புதிய ரசனை அது இதுவென பாதை மாற வேண்டாம் ! சிறு வயதிலே தந்தையை மீறி ஸ்பைடரை அளித்து வெற்றி பெற்றீர்கல் ! மசாலாக்களும் , கார்ட்டூன்களும் , நெஞ்சை தொடும் அவலங்களும் சரியான கதை சொல்லும் பாதையில் சென்றால் மீண்டும் மீண்டும் வெற்றியே!

      Delete
    26. This comment has been removed by the author.

      Delete
    27. ஸ்டீல் (வலது கரம் மட்டும்)

      MM1 என்பது ஸ்டீலின் முதல் கமெண்ட் - MM2 என்பது ஸ்டீலின் இரண்டாவது கமெண்ட் - MM3 என்பது ஸ்டீலின் மூன்றாவது கமெண்ட் - MM4 என்பது ஸ்டீலின் நான்காவது கமெண்ட் - MM5 என்பது ஸ்டீலின் ஐந்தாவது கமெண்ட் முதல் கருத்து - MM6 என்பது ஸ்டீலின் ஐந்தாவது கமெண்ட் இரண்டாவது கருத்து - ஆகஅசி என்பது ஆழ்ந்த கதைக்களமும் அழகான சித்திரங்களும் என்பதன் சுருக்கம்.

      MM1. அது என்ன? //தவறான எண்ணம் எப்போதும் போல// :D
      அப்படியென்றால் தவறு என்று தெரிந்தும் இதுநாள் வரை மௌனமாக இருந்தது ஏன்? (must reply option)

      MM2. //மீண்டும் தவறு ! 18 வயது வாசகர்களிடம் இதனை கேளுங்கள் வாய் விட்டு சிரிப்பார்கள் ! இப்போதும் லாகிக் இல்லாத படங்களை சிரியவர்கள்தான் பார்க்கிறார்கள் என்று யார் சொன்னார்கள்//

      எத்தனை பேர் அப்படி சிரித்தார்கள் ஸ்டீல்? லாஜிக் இல்லாத படங்களில் இருக்கும் உணர்வைத் தூண்டும் காதல் காட்சிகளும், இரட்டை அர்த்தம் தொனிக்கும் வசனங்களும், வன்முறை காட்சிகளும் இல்லாமல் ஒரு படம் வந்தால் அப்போது தெரியும் சேதி ;)

      MM3.முரண் :) அதாவது மேற்கோள் செய்திக்கும் உங்கள் பதிலுக்கும் முரண் ;)

      MM4.தவறு என்று கூறும்போதே அதற்கான மாற்று கருத்து சொல்லப்பட வேண்டும் என்பது பாலப்பாடம் :)

      MM5.என் கருத்தை வழி மொழிந்து இருக்கிறீர்கள் :)

      MM6. நாஸ்டால்ஜியா என்பது ஓவர்டோஸ் ஆகாத வரைதான் ;) காமிக்ஸில் ஓவர்டோஸ் என்பது சிலநேரம் இரண்டு அல்லது மூன்று புத்தகங்களில் கூட எல்லாமே (நாஸ்டால்ஜியா) அடக்கமாகி விடும். மற்றபடி ஒரு கதைக்கு மிகவும் தேவை ஆகஅசி என்று இங்கு நான் கூறியதை தான் நீங்கள் பதிவெங்கும் ஒப்புக்கொண்டுள்ளீர்கள்

      பி.கு. நீங்கள் பதிலளிக்கும் போது மறக்காமல் MM1,MM2,MM3,MM4,MM5 குறியீடுகளை பயன்படுத்தவும் :)

      Delete
    28. // சமீபமாய் நிறைய வாக்குறுதிகளை அள்ளித் தெளித்துக் கொண்டே போவதால் - கார்ட்டூன் அறிமுகம் பற்றி உரிய வேளையினில் சொல்கிறேனே! //

      ஹா ஹா! Thanks!

      Delete
    29. // சமீபமாய் நிறைய வாக்குறுதிகளை அள்ளித் தெளித்துக் கொண்டே போவதால் - கார்ட்டூன் அறிமுகம் பற்றி உரிய வேளையினில் சொல்கிறேனே! //

      ஹா ஹா! Thanks!

      Delete
    30. mm7 நீங்கள்தாம் அலசி கண்டு பிடித்ததாய் நினைத்து கொள்ள வேண்டாம் !

      Delete
    31. //MM6. நாஸ்டால்ஜியா என்பது ஓவர்டோஸ் ஆகாத வரைதான் ;) காமிக்ஸில் ஓவர்டோஸ் என்பது சிலநேரம் இரண்டு அல்லது மூன்று புத்தகங்களில் கூட எல்லாமே (நாஸ்டால்ஜியா) அடக்கமாகி விடும். மற்றபடி ஒரு கதைக்கு மிகவும் தேவை ஆகஅசி என்று இங்கு நான் கூறியதை தான் நீங்கள் பதிவெங்கும் ஒப்புக்கொண்டுள்ளீர்கள்
      //
      mm8 ஆம்

      Delete
    32. எல்லாம் தெரிந்த உங்களது இந்த ஒரு கருத்தை (ஆகஅசி) எற்றுகொள்கிறேனே !

      Delete
    33. MM 7.// நீங்கள்தாம் அலசி கண்டு பிடித்ததாய் நினைத்து கொள்ள வேண்டாம்//

      அடடா, உங்கள் மனதை இப்படி வெளிச்சம் போட்டு காட்டி விட்டீர்களே ஸ்டீல் :(

      தர்க்கவாதங்களை பொறுத்தவரை யாரும் எதையும் புதியதாக கண்டுபிடித்து விடப்போவதில்லை. ஆனால் விவாதம் என்று வரும் போது சரியான சமயத்தில் எடுத்து வைக்கப்படும் பழைய கருத்துக்களும், அச்சமயத்திற்கு ஏற்றது போல் சொல்லப்படும் விதமே வெற்றியாக கருதப்படுகிறது :)

      Delete
    34. அதேதான் நானும் வைத்துள்ளேன் ! மற்றபடி அதுவும் பாலபாட்டம்தானே !

      Delete
    35. லலலல... யார் யாரோ நாட்டாமை என்று
      ஏமாந்த நெஞ்சம் ஒன்று...
      'தீர்ப்பு' என்று 'ஆப்பு'ஐ கண்டு
      புரியாமல் நின்றேன் இன்று...
      மோர் போல பீரும் உண்டு
      நிறத்தாலே ரெண்டும் ஒன்று...

      (மூச்... மூச்...)

      Delete
  50. ஷேக்கியானே ...
    டாஸுன்ஹா ...
    ஓ.கோ நாஜி ...
    யா-ஆ-ஆனே !
    கா-ஹனே -நாசி...


    கார்ச்ச்ஸ்................
    நெருப்பிடம் குறி கேட்கும் குறியீடுகளை அளித்த ஆசிரியருக்கு நன்றி !
    நெருப்பிடம் குறி கேட்டதில் இன் தா வருட ஈரோடு புத்தக விழாவிற்கு,
    நண்பனுக்காக எதையும் இழக்க தயார் எனும் வார்த்தை தாங்கி வரும் புத்தகம் வண்ணத்தில் அற்புதமாய் வருவதை நெருப்பு அறிவித்தது !
    சார் அது எந்த கதை என தெரியவில்லை , தாங்கள் அறிந்தால் அல்லது தயார் செய்திருந்தால் எந்த கதை அது என கூறுங்களேன் !

    ReplyDelete
    Replies
    1. @கோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ்:
      1.திகில் நகரில் டெக்ஸ்.
      2.காவல் கழுகு.
      3.பலிகேட்டபுலிகள்.
      மேற்சொன்ன எதாவது ஒரு புத்தகமாக இருக்கலாம்.

      Delete
    2. சாரி நண்பனுக்காக எதையும் செய்வேன் எனும் வாக்கியம் !

      Delete
    3. ஆனால் இவை ஏதும் வரவில்லையே கனகு ! அது மறுபதிப்பாம் !

      Delete
    4. உங்கள் பட்சிஇடமே கேட்டுவிடுங்கள்,ஆசிரியர் கார்சனின் கடந்தகாலம் என்று சொல்லிவிடபோகிறார்?சிவகாசியில் இந்த கடும் வெப்பத்திலும் மழை பெய்துவிடும்.

      Delete
    5. ஹ ஹ ஹ ஒரு வேளை அப்படியும் இருக்குமோ !
      கார்சனின் கடந்த காலத்தை புரட்டி பார்க்கிறேன் !

      Delete
  51. வாவ் .....இந்த பதிவை படித்தவுடன் மனம் சந்தோஷத்தில் அலைபாய்கிறது ....போன பதிவை போலவே .........இதில் எனது சில கருத்துகள் ....

    *** தாங்கள் 30 வது ஆண்டுமலரை " முழுவதும் டெக்ஸ் " என்ற எண்ணத்திலும் இருந்துள்ளதை உணர முடிகிறது சார் .அதுவே எங்கள் "டெக்ஸ் மன்றத்தினருக்கு " மிக்க மிக்க சந்தோசம் சார் .நண்பர்கள் எதிர் பார்ப்புக்கு ஏற்ப "கதம்பமாக " வருவதும் எங்களுக்கு ஓகே தான் .காரணம் திரையில் சூப்பர் ஸ்டார் ...ரஜினி தான் என்றாலும் அவர் படம் மட்டுமே வந்தால் அவர் மதிப்பு தெரியாது .அது போல காமிக்ஸ் சூப்பர் ஸ்டார் என்றால் அது "டெக்ஸ் வில்லர் " என்றாலும் அவர் மட்டுமே வந்தால் அவரின் மதிப்பு மற்றவர்களுக்கு புரியாது .கலந்து கட்டி வந்தால் தான் எங்கள் "டெக்ஸ் " அவர்களின் அருமை அனைவருக்கும் புரியும் .அதே சமயம் போன வருட தீபாவளி மலர் போல இந்த வருடமும் " குண்டு டெக்ஸ் தீபாவளி மலர் " க்கு ஏற்பாடு செய்து கொள்ளுமாறு வேண்டி கொள்கிறேன் .

    ***என்னை பொறுத்த வரை "கருப்பு வெள்ளை " கதைகளை கண்டிப்பாக விரும்புகிறேன் .இது வரை கருப்பு வெள்ளை கதைகளில் வராத நாயகர்கள் ( லார்கோ...ஷெல்டன் ...லக்கி ) போன்றவர்கள் கருப்பு வெள்ளையில் வந்தால் ரசிக்க முடியாது .அதே சமயம் டெக்ஸ் ..மாடஸ்தி...ராபின் போன்றவர்களை கருப்பு ..வெள்ளையில் பார்ப்பது எனக்கு விருப்பமே ...இன்னும் சொன்னால் கலரை விட கருப்பு வெள்ளையில் இன்னும் ஆழமாக என்னால் அந்த "களத்திற்குள்" செல்ல முடிகிறது .

    *** அடுத்த ஆண்டு புத்தக காட்சியில் இன்னொரு " மெகா சர்ப்ரைஸ் " என்று அறிவித்து இருப்பது சூப்பர் .என்னதான் "குண்டு ஸ்பெஷல் " என்றாலும் மறுபதிப்பு மின்னும் மரணத்தை விட கூட புதிதாய் "ஒரு குண்டு ஸ்பெஷல் " வருவது தான் வாசகர்களுக்கு கொண்டாட்டம் .அது கலர்..,கருப்பு வெள்ளை என எப்படி இருந்தாலும் ஓகே .

    *** 5 வருடங்களுக்கு முன் உள்ள ஆளாக இருந்திருந்தால் " மினி லயன் " ஜனிதிருக்கும் என்று சொன்னிர்கள்..அவரை மிக சீக்கிரம் எதிர் பார்க்கும் அதே வேலையில் அப்படி நடந்தால் அது புது " மினி லயன் " ஆக தான் இருக்க வேண்டுமே தவிர " குட்டி சன்ஷைன்...சுட்டி சன்ஷைன் " என்றல்லாம் இருக்க கூடாது என்பதை இப்பொழுதே பணிவுடன் வேண்டிகொள்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. Paranitharan K : உங்களின் கடிதம் இன்று கிடைத்தது நண்பரே ! நலிந்து கொண்டிருக்கும் அஞ்சல் துறை உங்களுக்குப் பெரும் கடன்பட்டுள்ளது - நம்மைப் போலவே !!

      Delete
  52. வெகு நாட்களுக்குப்பின் அருமையான தரத்தில் ....
    நான்கு புத்தகங்களும் முத்துக்கள்.....
    புதுப்பொலிவும்,புது அறிவிப்புகளும் மீண்டும் அதே உற்சாகத்தை உணருகின்றேன்...

    ReplyDelete
  53. This comment has been removed by the author.

    ReplyDelete
  54. மை டியர் மானிடர்களே!!!

    புகழ்பெற்ற வங்க எழுத்தாளர் பிபூதி பூஷன் பானர்ஜியின் சந்திர மலை (chander pahar)என்ற அற்புதமான சாகச நாவலை நிச்சயம் படித்திருப்பீர்கள்.(தமிழில் சாஹித்ய அகாடமி வெளியிட்டுள்ளது)சென்னை புத்தக கண்காட்சியில் கிடைக்கும்.காலத்தை வென்ற இந்த சாகச நாவல் தற்போது வங்க மொழியில் திரைப்படமாகவும் வெளிவந்துள்ளது.

    அதன் யூ-ட்யூப் லிங்க்-சந்திர மலை

    ReplyDelete
    Replies
    1. அப்பாடா,

      இப்போதுதான் திருப்தியாக இருக்கிறது.

      Delete
  55. 1.யுத்தம் உண்டு எதிரி இல்லை !
    2.தோர்கள்
    3.பயங்கர புயல்
    அட்டகாசமான விருந்து
    சாக மறந்த சுறா என்னை கவரவில்லை ! ஆனால் துவக்க விபத்து படம் அருமை !

    ReplyDelete
    Replies
    1. இது என் வரிசை:

      1. யு.உண்டு எ.இல்லை
      2. தோர்கல்
      3. சாக மறந்த சுறா
      4. பயங்கரப்புயல்

      ப்ளஸ் --> மாறுபட்ட ஃப்ளேவர்கள், நல்ல அச்சுத் தரம், ஒரே சைஸ் புத்தகங்கள், ஃபில்லராக வெளிவந்த லக்கியின் இரு சிறுகதைகள்(இம்முறை இரண்டுமே அட்டகாசம்)

      மைனஸ் --> நான்கு புத்தகங்களிலுமே சிதறிக்கிடக்கும் எழுத்துப் பிழைகள்.

      தீர்ப்பு --> இம்முறை அச்சுத்தரத்தை எட்டிப்பிடித்த எடிட்டர், அதை ஈடுகட்டும் வகையில் அச்சுப்பிழைகளில் கொஞ்சம் கோட்டை விட்டிருக்கிறார்.

      இறுதி தீர்ப்பு --> 2014ன் ஆரம்பம் நிறைவாய் அமைந்திருக்கிறது.

      Delete
    2. இந்த order-ல் படித்தேன்:
      1. தோர்கல்
      2. யுத்தம் உண்டு எதிரி இல்லை
      3. சாக மறந்த சுறா
      4. பயங்கரப்புயல்

      இந்த order-ல் பிடித்தது:
      1. தோர்கல் (Good)
      2. பயங்கரப்புயல் (Good)
      2. யுத்தம் உண்டு எதிரி இல்லை (சப்பென்று இருந்தது)
      4. சாக மறந்த சுறா (அய்யய்யோ, படிச்சி முடிக்கறதே கஷ்டமா இருந்தது)

      Delete
    3. இந்த order-ல் படித்தேன்:
      1. தோர்கல்
      2. சாக மறந்த சுறா
      3. யுத்தம் உண்டு எதிரி இல்லை
      4. பயங்கரப்புயல்

      இந்த order-ல் பிடித்தது:
      1. தோர்கல் (WOW+1),பயங்கரப்புயல் (WOW+1)
      2. யுத்தம் உண்டு எதிரி இல்லை (NOT BAD)
      4. சாக மறந்த சுறா (NOT BAD,ராணி காமிக்ஸ்சில் பழைய ஜேம்ஸ் பாண்ட் கதைய படித்ததை போன்ற ஒரு உணர்வு )

      முதல் இரண்டு கதைகளும் SIMPLE ஆனா நேர்கோட்டில் பயணிக்கும் PLOT . புரிந்து கொள்வதற்கு அதிகம் சிரமப்படாமல் ஓவியங்களில் அதிகம் லயிக்கலாம்.

      கமான்சே அருமை.கதை முடியாமல் தொடர்வதால், அது ஒரு சிறு குறை.

      பிரேசில் கதை நன்றாக இருந்தது.NOT BAD.

      Delete
    4. //இம்முறை அச்சுத்தரத்தை எட்டிப்பிடித்த எடிட்டர்//

      Vijay: அப்படி கூறிவிட முடியாது..என்னுடைய பயங்கர புயல் புத்தகத்தில் 10 பக்கங்கள் கசங்கியது போல இருந்தது.
      இன்னும் சிலருக்கு வேறு வேறு புத்தகங்களில் ஆச்சு கோளாறு இருந்துள்ளது.

      முழுவதுமாக ஒழிக்கப்படவில்லை என்பதே எனது தீர்ப்பு.

      Delete
    5. எனக்கு வந்த பக்கங்கள் அனைத்தும் அசத்தலான அச்சுதரம் !

      Delete
    6. பெரும்பான்மையினருக்கு நன்றாகவே வந்துள்ளது. ஆனால் முழுமையாக களையப்படவில்லை என்பதே எனது கருத்து.

      Delete
    7. டியர் கிருஷ்ணா,

      பெரும்பான்மையான நண்பர்களுக்கு அச்சுக் குறைகளற்ற நல்ல பிரதிகள் கிடைத்திருக்கும்போது, உங்களுடைய/ ஒரு சில நண்பர்களுடைய பிரதிகளில் மட்டும் அச்சுக் குறைபாடு இருப்பது வருந்தத்தக்கது. :(

      பல்லாண்டு காலம் பாதுகாக்க நினைத்திடுபவர்களுக்கு, தங்களது பிரதிகளில் மட்டும் சுமார் பத்துப் பக்கங்களுக்கு இம்மாதிரியான குறைபாடுகளைக் கொண்டிருப்பது மிகவும் சங்கடப்படுத்தும் விசயமே!
      சந்தா செலுத்தி வந்துசேரும் பிரதிகளில் இப்படிப்பட்ட குறைகள் இருப்பின், அவை ஏதாவதொரு மார்க்கத்தில் களையப்பட வேண்டிய முக்கியத்துவத்தைப் பெறுகின்றன. மாற்றுப் பிரதி - தபால் மூலமாகவோ, புத்தகத் திருவிழாக்கள் மூலமாகவோ கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டால் எதிர்கால சந்தாக்கள் இனிப்பாய் அமைந்திடும்.

      (மாற்றுப்பிரதி/இழப்பீடு குறித்து நண்பர் மரமண்டை சில மாதங்களுக்கு முன்பு தனது வலைப்பூவில் எழுதியிருந்த சில நியாயமான வழிமுறைகளையும் என்னால் இங்கே நினைவுகூர முடிகிறது.)


      Delete
  56. விஸ்வா உங்கள் பதிவை படித்ததற்கு பிறகு எனக்கு ஒரு கேள்வி . நமது லேட்டஸ்ட் வெளியீடுகளை நான் மறுமுறை படிக்கவில்லை. ஆனால் இன்னமும் பழைய புத்தகங்களை பலமுறை படித்து கொண்டுதான் இருக்கிறேன். ஏன் இந்த மாறுபாடு?

    ReplyDelete
    Replies
    1. பழைய புத்தகங்கள் என்பதால் மறந்து போயிருக்கும் ! புது புத்தகங்கள் எப்போதும் நினைவில் இருக்குமே !

      Delete
    2. விஜய் சார்,

      இந்த கேள்விக்கு என்னிடம் சரியான பதில் இல்லை.

      ஆனால் இப்படியும் இருக்குமோ?

      1. முன்பெல்லாம் மாதம் ஒரு காமிக்ஸ் மட்டுமே வந்துக்கொண்டு இருந்தது.இப்போதெல்லாம் பெரிய சைசில் இரண்டு முதல் நான்கு புத்தகங்கள் வருகின்றன.

      நூறு ருபாய் விலையில் வெளிவந்த ஒரு புத்தகம் நமது பாக்கெட் சைசில் வந்த நான்கு புத்தகங்களுக்கு சமம். எனவே எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில் அதன் மீதான மோகமும் சற்றே குறையும் வாய்ப்பு இருக்கிறதல்லவா?

      2. சின்ன சைஸ் புத்தகங்களை படித்து பழகிவிட்ட நமக்கு இந்த பெரிய சைஸ் இன்னமும் செட் ஆகவில்லைஎன்றே நினைக்கிறேன். நெவர் பிஃபோர் ஸ்பெஷலை எத்தனை பேர் திரும்ப படித்தோம்?

      3. பள்ளிக்கு செல்லும்போது நமக்கான கடமைகள் குறைவே. அதனால் காமிக்ஸ் படிக்க நிறைய நேரம் முடிந்தது. இப்போது அப்படியா? வாழ்க்கையின் அன்றாட சுமைகள் கழுத்துக்கு மேல் தொங்கும் கத்தியாக நம்மை பயமுறுத்தும்போது காமிக்ஸ் படிக்க முன்போல நேரம் ஒதுக்கவே சிரமமப் படுகிறோம் அல்லவா? அதனால் கூட இருக்கலாமோ என்னவோ?

      Delete
  57. "கார்ஸனின் கடந்தகாலம்" கதைக்கு 3ம் பாகமும் உண்டு என அறிந்தேன்! [160+பக்கங்கள்]

    இந்த கதையை இந்த ஆண்டு மறுபதிப்பு செய்யும்போது 3ம் பாகமும் சேர்க்கப்படுமா?

    https://m.ak.fbcdn.net/photos-h.ak/hphotos-ak-prn2/s720x720/1609841_788083884559690_962020270_n.jpg

    ReplyDelete
    Replies
    1. இன்னாது மூணாம் பாகமா...................?


      போராட்ட குழுவுக்கு அடுத்த தலைப்பு ரெடி.

      Delete
    2. கார்சனின் கடந்த காலம் புதையல்தான் !
      மூன்றாவது பாகமும் இருந்தால் புதிய கதைக்கான அந்தஸ்தை பெரும் !
      ஆனால் இது கார்சனின் நிகழ காலம் போல இருக்கிறதே !

      Delete
    3. டியர் சாக்ரடீஸ்!!!

      நீங்கள் தந்துள்ள படம் இரண்டாவது கதையின் இறுதி பகுதியாக ஒருவேளை இருக்கக்கூடுமோ...?சினிமாவில் "சில வருடங்களுக்கு பிறகு"என்று சில காட்சிகள் இடம்பெருமே அதைப்போல...!!!

      Delete
    4. 4 ஆம் பாகம்: கார்சனின் எதிர்காலம் ஹி ஹி!

      Delete
    5. @ ALL : வெள்ளிமுடியாரின் கடந்த காலத்தையும், எதிர்காலத்தையும் யோசிக்கும் சமயத்தில் - நிகழ்காலத்திலாவது ஆசாமிக்கு ஒரு கால்கட்டுப் போடச் சொல்லி படைப்பாளிகளிடம் கேட்போமா ?! ! பாவம் - எத்தனை நாளைக்குத் தான் டெக்சின் கடுங்காப்பியையும் ; பீன்ஸையும் சாப்பிட்டு மனுஷனும் வண்டியை ஓட்டுவார் ?

      Delete
    6. அவராவது சந்தோஷமா இருந்துட்டுப் போகட்டும், விடுங்க சார்! :)

      Delete
    7. @Erode Vijay
      // அவராவது சந்தோஷமா இருந்துட்டுப் போகட்டும், விடுங்க சார்! :) //

      நியாயமான பேச்சி :)

      Delete
  58. குண்டு புத்தகம் ஒன்றை, மார்டின், ராபின், கமாண்டோ காமிக்ஸ்(புதிய கதைகள்) போன்ற மாறுபட்ட ஒரு கலெக்‌ஷனை கொண்டு உருவாக்கலாமே சார்?

    ReplyDelete
  59. 2015 ல் இரண்டு மெகா குண்டு புத்தகங்கள் என்கிற பயங்கர சந்தோஷமான தகவலை மிகவும் சாதாரணமாக தெரிவித்ததற்காக ஆசிரியரை வன்மையாக பாராட்டுகிறேன் (வேறென்ன சொல்வது!!) :)))

    ReplyDelete
  60. சாத்தான் அண்ணே!

    3ம் பாகம் சுமார் 160 பக்கங்களுடன் வந்திருப்பதாகதான் நண்பரின் தகவல்கள் தெரிவிக்கின்றன!

    :-)

    https://m.ak.fbcdn.net/photos-g.ak/hphotos-ak-ash3/t1/s720x720/994716_788081727893239_235346801_n.jpg

    அ...அப்புறம் 4ம் பாகமும் இருக்கும் போல தெரியுது!

    https://m.ak.fbcdn.net/photos-e.ak/hphotos-ak-prn1/s720x720/1545011_788344781200267_340901563_n.jpg

    அய்யோ அடிக்க வராதீங்கண்ணே...!
    :-P

    ReplyDelete
    Replies
    1. டெக்ஸ் வில்லர்
      193 (52%)

      கேப்டன் டைகர்
      195 (52%)

      லக்கி லூக்
      171 (46%)

      சிக் பில்
      85 (23%)

      Delete
  61. ஒரு அப்டேட்:

    இன்று இரவு எட்டு மணிக்கு கேப்டன் நியூஸ் சேனலில் நமது ஸ்டால் பற்றிய செய்தி கிங் விஸ்வா பேட்டியுடன் ஒளிபரப்பாக உள்ளது ....

    டோன்ட் மிஸ் பிரண்ட்ஸ் ....

    ReplyDelete
  62. எனக்கு வந்த புத்தகங்களில் குறிப்பாக சாக மறந்த சுறாவில் ஒரு சில பக்கங்கள் dull 3D effect !:-(

    ReplyDelete
  63. தோர்கல் ஒவியங்கள் மிக அருமை குறிப்பாக வசியகாரியின் முகம் backdropல் தோர்கலின் போர்காட்சி, தோர்கலின் உறக்கத்தில் ஓநாய் உருவம்!

    ReplyDelete
  64. ஆயிரம் கைகள் மறைத்தாலும் ஆதவன் மறைவதில்லை என்ற கூற்று கிங் விஸ்வாவின் பதிவிலிருந்து தெரிகிறது! எடிட்டர் வெளியிட மறுத்தாலும் கண்காட்சியில் வெளிப்பட்ட இரும்புகை மாயாவி மற்றம் முத்து காமிக்ஸின் பழைய superstars பற்றிய விசாரிப்புகள் உணர்த்துகின்றன!:-)

    ReplyDelete
  65. நான் படித்ததில் பிடித்த வரிசை சாக மறந்த சுறா, தோர்கல், யுத்தம் உண்டு எதிரியில்லை, பயங்கரப்புயல்! மொத்ததில் ஜனவரி மாத வெளீயீடுகள் ஒன்றுக்கொன்று சளைத்தில்லை!:-)

    ReplyDelete
  66. ஆந்தை விழியார் ஆந்தைகள் விழித்திருக்கும் நேரத்தில் தான் விழித்திருப்பாரோ....!!

    ReplyDelete
  67. கார்சனுக்கு நீங்களே பலூன் போட்டு ரெண்டு வார்த்தை பேச விடுங்கள் ...........நான் கார்சன் விசிறி

    ReplyDelete
  68. டியர் விஜயன் சார்,

    ஃபேஸ்புக்கில் 500 Likes-ஐ எட்டியதற்கு வாழ்த்துக்கள்! போனால் போகிறதென்று, மாதம் ஒருமுறை உங்கள் பதிவுகளின் Link-களைத் தருவதோடு நில்லாமல், அவ்வப்போது வேறு ஏதாவது தகவல்களையும் (ஜூ.எ. மூலமாக) பகிரலாமே? அட்டைப் படங்கள், சந்தா விபரங்கள், அந்தந்த மாத இதழ்களுக்கான Ebay விற்பனை அறிவிப்புகள், அடுத்த வெளியீடு விளம்பரங்கள், உங்கள் ஊடகப் பேட்டிகளுக்கான இணைப்புக்கள் என்று கொஞ்சமேனும் fb பக்கத்தை ஆக்டிவாக வைத்திருக்க முயற்சியுங்கள் சார்... அப்போது தான் அது பலரையும் சென்றடையும்!

    @ஈரோடு விஜய்: உடனே, "ஐநூறு லைக்ஸ் ஸ்பெஷல்" எல்லாம் கேட்டு அடம் பிடிக்கப் படாது! :D

    ReplyDelete
    Replies
    1. // ஐநூறு லைக்ஸ் ஸ்பெஷல் //

      தூங்கும் பிள்ளையை கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டிவிடும் 'நவரச நாயகன்' அவர்களே... ;)

      Delete
  69. நேற்றோடு புத்தக திருவிழா நிறைவு பெற்றது.
    10 லட்சத்திற்கும் அதிகமான வாசகர்கள் ============ இதில் நானும் ஒருவன்
    25 லட்சத்திற்கும் அதிகமான புத்தகங்கள் ========== வாங்கியது 2 புத்தகம்
    20 கோடி ருபாய்க்கும் அதிகமான விற்பனை ======== இதில் ரு 400 என்னுடையது

    ReplyDelete